Wednesday 29 July 2009

யாவும் நீ

வெகுவிரைவில் 'வெறும் வார்த்தைகள்' எனும் எனது 'கவிதையெனும் வார்த்தைகள் தொகுப்பு' வெளியிடப்பட இருக்கிறது. அதில் முதல் கவிதையாய் அமர்ந்திருக்கும் கவிதைதான் இது.


படைப்பின் ரகசியம் படைப்பவன் உனக்கே வெளிச்சம்
இயற்கைதான் நீ என்று செயற்கையாய் சொல்லிவிட்டு
செயலற்று நிற்பது எம்மில் பெரும் அச்சம்!

உறங்குகையில் உயிர் நிற்கும் இடமேது
உணர்வில்லா நிலையில் கூட
உன்னை மட்டும் உணர்தலுக்கு நிகரேது!

இல்லை நீயென சொல்லுதற்கு சொல்லை தந்துவிட்டு
எல்லையில்லா அண்டவெளியில் மறைந்து நின்று
காத்து அருள்கின்றாயோ அறிவதற்கு!

ஒன்றுமில்லா உலகம் என்று காரியங்கள் பல வைத்து
மனம் வென்று வருபவற்கு காத்து இருப்பாய்
அன்போடு அரவணைக்கும் அன்னையாய் நீ!

அறியாமையில் உள்ளம் அவதிபட்டு அழுகையில்
காணமுடியாமல் மனதில் கவலைபட்டு கரைகையில்
உன்னை எம்மில் வைத்து இருந்து விளையாடுவாய் நீ!

எல்லாம் சிறப்பும் தந்து எழில்மிகு உலகில்
யாவும் நீயாக இருக்கின்ற உன்னை
மறந்து வாழும் வாழ்க்கை கொண்டால்
"நன்றி கெட்டவர் ஆவோமே யாம்" இறைவா!
நலம் தரும் எமது தெய்வம் நீ!
நம்பினோம் உம்மை, உலகை காத்து அருள்வாய்!

2 comments:

நையாண்டி நைனா said...

super, super.

Radhakrishnan said...

மிக்க நன்றி நைனா அவர்களே.