Friday 3 July 2009

கேள்வியும் பதிலும் - 7

7. மது கடைகள் முலம் அரசாங்கம் லாபம் பார்ப்பது சரியா?
(நண்பர் மோகன் காந்தி என்னை கேட்ட கேள்வியே இது)


நீங்கள் சரியே என பதில் சொன்னதால் நான் தவறு என பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என சொல்ல முடியாது. அரசாங்கம் லாபம் பார்ப்பது என்பது என வரும்போது மதுக்கடைகளாக இருந்தால் என்ன, கல்வி நிறுவனங்களாக இருந்தாலென்ன? இது பள்ளம், விழுந்தால் எழுந்திருக்க மாட்டாய் என எச்சரித்துவிட்டு இருக்கும் பள்ளத்தை மூடாமல் எத்தனை பேர் எப்படி விழுகிறார்கள் என கணக்கெடுத்துக் கொண்டிருப்பவனை விட பள்ளத்தினை நோக்கி தானாகச் சென்று விழுபவர்கள் மிகப்பெரும் அறிவாளிகளாகத்தான் இருப்பார்கள் என சொல்லவா வேண்டும்?

மக்களின் நலன் கருதி மதுக்கடைகள் மூடிவிட்டால் மட்டும் போதுமா? மனக்கடையை யார் மூடுவது? மனிதர்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டே எல்லா வியாபாரங்களும் செழித்து ஓங்குகின்றன. இன்றைய வாழ்க்கை சூழல் அவ்வாறு இருக்க எதைக் குறைப்பட்டு கொள்வது? மதுக்கடைகள் மூலம் அரசாங்கம் லாபம் பார்க்கலாம் என்றுதானே சொல்ல வருகின்றேன் என எண்ணினால் அது எனது தவறு.

எது எப்படி இருப்பினும் எனது பதில் மதுக்கடைகள் மூலம் அரசாங்கம் லாபம் பார்ப்பது முற்றிலும் தவறு. இதை மதுக்கடைகளுக்கு மட்டும் ஒதுக்கிவிட முடியாது மற்ற கடைகளுக்கும் தான். அரசாங்கம் மக்கள் நலன் பார்க்கும் அரசாங்கமாக இருக்க வேண்டுமே தவிர லாபம் பார்க்கும் அரசாங்கமாக இருப்பதில் அர்த்தமே இல்லை. அது இருக்கட்டும், அர்த்தம் பார்த்து யார் வாழ்க்கை வாழ்ந்தது? இனியும் வாழ்வது?

(தொடரும்)

No comments: