Friday 3 July 2009

கேள்வியும் பதிலும் - 9

9. தொழிற்சாலை / நிர்வாகம் போன்றவற்றில், தொழிற்சங்க யூனியன் என்ற ஒன்று அடிக்கடி வேலைநிறுத்தம் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன? அதனால், நம் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா? படாதா?

அதாவது ஒத்துழையாமை என இதனைச் சொல்லலாம். எனக்கு இதுப் பிடிக்கவில்லை அதனால் நான் ஒத்துழைக்கப் போவது இல்லை என தனது பக்கம் உள்ள நியாயத்தை? வலியுறுத்திப் போராடுவதாகும். வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஒருமுறை பாடம் கற்பித்தார், அவருக்கு இவர்கள் மறுமுறை பாடம் கற்பித்தார்கள். இப்படி அடிக்கடி வேலை நிறுத்தம் செய்வது தவறு. தொழிலாளர்கள் தான் பணி செய்யும் நிர்வாகத்தின் பெயரை நிலைநிறுத்த முயற்சி செய்ய வேண்டும், நிர்வாகத்தினரும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் பரஸ்பர ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் இருக்கும்பட்சத்தில் இந்த பிரச்சினைகள் வரப்போவதில்லை. வியாபார உலகம் என்றான பின்னர் வெறும் கதையில் வேண்டுமென்றால் அவ்வளவு சிறப்பாக இருந்தது இவ்வளவு ஒற்றுமையாக இருந்தனர் என எழுதி வைத்துக் கொள்ளலாம். வேலைநிறுத்தம்தனை கூடுமானவரை தவிர்த்தால் நிர்வாகமும் தொழிலாளர்களும் பலன் பெறுவார்கள்.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடா? நடந்து கொண்டுதானே இருக்கிறது. இந்த வேலை நிறுத்தம் பற்றி எண்ணும் முன்னால் முதலீடு செய்ய வேண்டும் என வருபவர்களின் எண்ணத்தை ஒடுக்கும் சக்திகள் பல உண்டு என்னும் உண்மையை தற்போது வந்த திரைப்படம் சொன்னது உண்மையில்லை என அனைவரும் நினைக்க வேண்டுமா?

வெளிநாட்டு முதலீட்டினை தடுக்கும் சக்திகளை பற்றி, ஏன் ஒரு மாநில அரசையே ஏமாற்றிய உள்ளூர் வெளியூர் கூட்டு பற்றிய விபரம் அறிவேன். இருப்பினும் அந்த வெளிநாட்டு நிர்வாகம் வேறொரு மாநில அரசின் உதவியுடன் முதலீடு செய்ய உள்ளது. ஆக இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் லாபம் கிடைக்குமெனில் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரிதாக கருத்தில் கொள்ளப்போவது இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுதான் எல்லாம் காரணம்.

No comments: