Wednesday 1 July 2009

வேத நூல் - 5

அந்த நிலப்பரப்பை ஒட்டியே படகை செலுத்தச் சொன்னான் மிபலோ. சாங்கோ அதிக ஆத்திரம் அடைந்தான். இங்கேயே இறங்கிக் கொள்ளலாம், இனியும் படகை செலுத்துவது என்பது அவசியமற்றது என்றான் சாங்கோ. ஆனால் ரேண்ட்டர் மிபலோ என்ன சொன்னானோ அதையே செய்வேன் என்றார். அது சாங்கோவுக்கு மேலும் ஆத்திரத்தை அதிகமாக்கியது.

என்னை இந்த நிலப்பரப்பில் இறக்கிவிட்டுத் தாராளமாகச் செல்லுங்கள் என்றான் சாங்கோ. குவ்விலான் பேச முடியவில்லையே என வேதனையில் இருந்தான். குவ்விலான் சாங்கோவுக்கு எழுத்து மூலம் எண்ணம்தனை காட்டிட எண்ணி எழுதினான். மிபலோ சொல்லுமிடத்துக்கேச் செல்லலாம்.

அதைப்படித்த சாங்கோ சட்டென அமைதியானான். மிபலோவுக்கும் ரேண்ட்டருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உணவு சேகரித்துக் கொண்டு நிலப்பரப்பின் ஓரத்திலேயே படகைச் செலுத்தி ஓரிடம் அடைந்ததும் மிபலோ நிறுத்தச் சொன்னான். நிலப்பரப்பில் இறங்கி நடக்க ஒரு பெரிய பிரமிட் தெரிந்தது.

இங்கேதான் நான் வர நினைத்தேன் எனத் துள்ளினார் ரேண்ட்டர். மிபலோ இதுநாள்வரை என்ன சொல்லி இருந்தானோ அதையெல்லாம் கோர்வையாக எடுத்து வைத்திருந்தான் குவ்விலான். ஆனால் சாங்கோ முரணாக எழுதியதோடு தொகுப்பாக வைக்காது இருந்தான். பிரமிட் நோக்கி மூவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

(தொடரும்)

No comments: