Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday 11 October 2016

மரணத்தைவிட நோய் கொடியது 2

அம்மா நிறையவே வாதிட்டார்கள் இதோடு என் தங்கையும் சேர்ந்து கொண்டாள். எதுவும் பேசாமல் அவள் முகம் பார்த்தபடி அமர்ந்து இருந்தேன். காதல் என்பது தசைகளால் ஆனது. காதல் என்பது கவர்ச்சி என்றெல்லாம் சொன்னவர்களை நினைத்துக்கொண்டு இருந்தேன். அவள் முகம் பொலிவாக இருப்பதைப்போல எனக்குள் ஒருவித எண்ணம் ஏற்பட்டது. உனக்கு என்ன ஆச்சுனாலும் உன்னைத்தான் கட்டிப்பேன் என அவளிடம் அன்று சொன்னது இன்று நினைவில் ஆடியது. எல்லாம் என் விதி என அம்மா மீண்டும் வந்து சத்தம் போட்டுச் சென்றார். ஒரு குழந்தையைப் போல இவளது நடவடிக்கைகள் இருப்பதாக நினைத்தேன், இவளது மூளை நரம்புகளில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ அச்சம் ஏற்பட்டது. இத்தனை நேரம் தூங்கும் அளவுக்கு இவளது உடலில் அப்படியென்ன ஒரு மாற்றம் திடீரென வந்து இருக்கும். நான் வேலைக்கு கிளம்பும் அன்றுவரை நன்றாகத்தான் இருந்தாள், எப்போது வருவாய் எனக்கேட்டபோது ஒரு மாதம் கழித்து வருவேன் எனச் சொல்லிச்சென்றபோது சரியென்றுதானே சொன்னாள், ஊரைவிட்டுப் போய் அடுத்தநாள் என இவளது அம்மா சொன்னாரே அதற்குள் என்ன நடந்திருக்கும் நிறைய யோசித்து அயர்வாக இருந்தது.

ஊரறிந்த காதல் என்றெல்லாம் இல்லை, பழகியது பேசியது எல்லாம் ஊருக்கு சாதாரணமான ஒன்றாகவே இருந்தது. நான் மணம் முடிக்கப்போகும் பெண் பேரதிர்வை எனக்குள் தந்து கொண்டு இருந்தாள். காம இச்சையின்றி ஒரு ஆண் வாழ்வது எல்லாம் அத்தனை எளிதான ஒன்றல்ல என கதைகளில் படித்து இருக்கிறேன் அதுவும் மனைவி நோய்வாய்ப்பட்டபின்னர் அவளை காத்துவரும் கணவன் வேறொரு பெண்ணுக்கு மயங்கி அவளே தஞ்சம் என போன கதை மனதில் தைத்துக்கொண்டு இருந்தது. அதுதான் நிதர்சனம் என அந்தக் கதையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கல்லூரி நண்பர்களை பார்த்து இருக்கிறேன். இதோ இவள், எனக்கென்ன என என்னால் இவளை விட்டுவிட்டு நான் கடந்து போயிருக்கலாம். இவளது பெற்றோர்களும் என்னிடம் வந்து எதுவும் கேட்டு இருக்கப்போவது இல்லை, எதை நிரூபிக்க இவளை இப்போது எனது வீட்டில் தூங்க வைத்து இருக்கிறேன். அறையில் விளக்கொளி இன்னும் அணைக்கப்படாமல் இருந்தது.

''போய்த்தூங்கு ராமா''

''அம்மா நான் செய்றது சரினு படுது பணத்தை எல்லாம் இவளுக்கு செலவு பண்ணிருவேனு நினைக்காத தங்கச்சிக்கு சேர்த்து வைச்சிருக்கல்ல''

''எதுனாலும் பண்ணு போ தூங்கு''

''இங்கனயே இருக்கேன்ம்மா நீங்க தூங்குங்க''

''சொன்னா கேட்கவா போற''

மணி பன்னிரண்டு இருக்கும். புனிதா எழ முயற்சித்தாள். அவளைத் தூக்கி அமர வைத்தேன்.

''என்ன செய்து''

அவளது கண்களில் கண்ணீர் வடிந்தது. கண்ணீரைத் துடைத்தேன்.

''பேசு''

''அம்மா''

''நான் இருக்கேன்''

''ம் அம்மா''

என் அம்மாவை அழைத்தேன்.

''இவளை பாத்ரூம் கூட்டிப்போம்மா''

''நீயே பாத்துக்கிறேனு சொன்ன''

திட்டியபடி அவளை அழைத்துச் சென்றார். திரும்பவும் அமர வைத்ததும் எனது கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளது ஒடுங்கிய விழிகளில் எனது காதலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

''ஆஸ்பத்திரிக்குப் போவோம்''

''ம்''

''எப்படி இப்படி ஆச்சு''

''ம்''

புதிய இடம் அவளை இப்போது எழுப்பி இருக்கக்கூடும் என நினைத்தேன். கண்களை மூட இருந்தவளுக்கு தண்ணீர் கொடுத்தேன். மெதுவாக விழுங்கினாள். இப்படியே இருந்தால் முதுகு வலி, இருதய நோய் என எல்லாம் வந்து சேரும் என அவளை நடமாட செய்தேன். தோளில் சாய்ந்து மெல்ல நடந்தாள்.

''நம் காதல் உன் உயிர் காக்கும்''

எனக்கே அபத்தமாக இருந்தது.

''ம்''

அவளது இந்த தூக்கம் ஒருவித நோய். சில மணி நேரங்கள் தூங்கியவள் எழுந்தாள்.

''அம்மா''

நானே அவளை பாத்ரூம் அழைத்துச் சென்றேன். எல்லாம் இயல்பாக நடக்கிறது இந்த தூக்கம் மட்டும் தான் அவளை செயல் இழக்கச் செய்கிறது, குறித்து வைத்தேன். அதிக தூக்கம் ஆற்றலை குறைத்து இருக்கிறது. விருதுநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவளது அப்பா அம்மா தாத்தா உடன் வந்தார்கள். என் அம்மாவும் தங்கையும் இன்னமும் கோபத்தில் இருந்தார்கள். நோயில் உள்ள எவரையும் பரிதாபமாக பார்க்க வேண்டியது இல்லை, அன்பாக நடத்தினால் போதும். டாக்டர் பரிசோதித்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு போகச் சொன்னார். அவளது தாத்தாவை மட்டும் அழைத்துக்கொண்டுச் சென்றேன்.

மருத்துவமனையில் கல்லூரி நண்பன் சுரேந்திரனைக் கண்டேன், விபரம் சொன்னேன். அவன் என்னிடம் சொன்ன விசயம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

''ஏன்டா உனக்கு இந்த அக்கப்போரு, நல்ல வேலை, சம்பளம் ஊருல வேற பொண்ணா இல்லை நா சொல்றத கேளு, இவ உறுப்புகள எல்லாம் இப்பவே எடுத்து வித்துட்டா நல்ல காசு பார்க்கலாம் நாளாக நாளாக யாருக்கும் உதவாது நா எல்லாம் அரேஞ் பண்றேன் நீ ஓகே சொல்லு''

முதுகில் குத்துபவனை எல்லாம் உடனே அழிக்கும் ஒரு வரமோ அல்லது இப்படிப்பட்ட எண்ணம் ஏற்படாத மனிதர்கள் இருக்க வரமோ இருக்காதா என்றே அவனை நான் உதாசீனப்படுத்திவிட்டு உள்ளே நடந்தேன்.

''அவரு என்ன சொன்னாரு''

''ஒன்னுமில்ல தாத்தா''

மருத்துவரை சந்தித்து ஒரு அறை ஒதுக்கப்பட்டது. கண் விழித்தாள்.

''அம்மா''

மரணத்தைவிட நோய் கொடியது என கத்தவேண்டும் போலிருந்தது. என்னை மருத்துவ அறை வாசம் உலுக்கியது. பாத்ரூம் அழைத்து சென்றுவிட்டு படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் சென்று பிச்சிப்பூவும் மல்லிகையும் வாங்கி வந்து அவளது தலை நிறைய வைத்தேன் விழிகள் திறந்தே இருந்தன.

''என்ன''

''ம்''

''அமுதன் இவங்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கனும் அதுக்கு முன்னால ப்ளட் டெஸ்ட் பண்ணனும்''

''சரி டாக்டர், நாளைக்குப் பண்ணலாம்''

அலுவலக மேலதிகாரி மணியனிடம் விபரங்கள் சொன்னேன்.

''எவ்வளவு பணம் வேணும்னு மட்டும் சொல்லு''

ஒரு நண்பனாகவே என்னைப் பார்த்தவருக்கு உதவுவதில் சிரமம் இல்லை.

''பணம் இருக்கு, வேலைக்கு வர நாள் ஆகலாம்''

''சரி, கவலைப்படாதே''

''தாத்தா ஊருக்குப் போங்க''

''இங்க இருக்கேன் ராமா''

''வேண்டாம்''.

வேறு வழியின்றி ஊருக்குப் போனார். நர்ஸ்களிடம் விபரங்கள் சொன்னேன். உடனே இருக்கச் சொன்னவர்கள் உதவிக்கு அழைக்கச் சொன்னார்கள். குளித்து தயார் ஆனேன். அமுதன் காலையில் வந்து ரத்த சோதனைக்கு அழைத்துச் சென்றார்.

''உங்க பொண்டாட்டியா சார்?''

''இல்ல, காதலி''

மணியனிடமிருந்து அழைப்பு வந்தது.

''எந்த வார்ட்? ஆஸ்பத்திரியிலதான் இருக்கேன். உனக்குத் துணையா ஒரு டூ டேஸ் இங்க இருக்கேன்''

மணியனை நினைக்க கண்ணீர் முட்டியது. கட்டிக்கொண்டு அழுதேன்.

''லுக் பி ஸ்ட்ராங். ஐ ஆம் வித் யூ''

புனிதாவுக்கு ரத்தம் எடுத்து வந்தபின் அவளை மணியன் பார்த்த மறுகணம் சொன்னார்.

''சிவா யூ ஆர் கிரேட்''

மணியனின் கண்களில் இருந்த கண்ணீர்த்துளிகள் எனது கண்களில் பட்டுத் தெறித்தது. என் அம்மாவும் அவளது அம்மா தாத்தா வந்து இருந்தனர். கஞ்சி கொடுத்தோம்.

''ராமா நிறைய செலவு ஆகுமேப்பா''

''அதைச் சொல்லத்தான் இங்க வந்தியாம்மா''

''பத்தாயிரம் அடுத்த மாசம் வேணும்''

''சரி''

ராமா என எனது கையைப் பிடித்து அவ்ளதானு நினைச்சேன் என குலுங்கி குலுங்கி அழுதார் அவளது அப்பா. சிலமணி நேரங்களுக்குப் பிறகு ஊருக்குச் சென்றார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு மணியன் கிளம்பினார். ரத்தப் பரிசோதனையில் ஹீமோக்ளோபின் குறைவு எனும் குறை தவிர வேறு குறை ஏதுமில்லை என்றார்கள். மருந்துகள் கொடுக்க ஆரம்பித்தனர். பழச்சாறு என தந்தார்கள். தேறிவிடுவாள் எனும் நம்பிக்கை உற்சாகம் தந்து கொண்டு இருந்தது. எல்லாம் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு என அறிந்து அதை சரி செய்ய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணியன் பண உதவி செய்தார்.

புனிதா குணமாகத் தொடங்கினாள். அமுதன் முகத்தில் கூட மகிழ்ச்சி நிலவியது.

''சார் அடுத்த வாரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்''

புனிதா பேசத் தொடங்கினாள். என் பிரபஞ்சத்தின் தேவதை. அன்று இரவு சுரேந்திரனைக் கண்டேன். விபரங்கள் சொன்னேன். என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ சற்றும் எதிர்பாராதபோது ஓங்கி எனது வயிற்றில் கத்தியால் குத்தினான். எனது அலறல் கேட்டு சிலர் ஓடிவந்தார்கள்.

''நீ சாவு''

தலைதெறிக்க என்னை தள்ளிவிட்டுவிட்டு ஓடினான்.

நான் செத்துரக்கூடாது என மனதில் எண்ணிக்கொண்டே நோயை விட மரணம் கொடியது என கத்த வேண்டும் போலிருந்தது. மயக்கமானேன்.

எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு நின்று கொண்டு இருந்தாள் புனிதா. இவ்வுலகில் இவர் எப்போது இறப்பார் என பிறர் நினைக்கும்படியாய் ஒருபோதும் நாம் வாழவே கூடாது.

முற்றும்

Monday 10 October 2016

மரணத்தைவிட நோய் கொடியது 1

பேசுவதைக் கேட்க முடியாமல் சொல்பவரைப் பார்க்க முடியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இருந்தாள். நான் சிவராமன் வந்து இருக்கிறேன் என்றேன். கண்அசைப்பாள் எனும் நம்பிக்கை எனக்குள் இருந்தது. அவளது அம்மாவிடம் கேட்டேன்.

''எப்ப இப்படி ஆனா''

''நீ போன மாசம் ஊரைவிட்டுப் போன மறுநாள்''

''நல்லாதானே இருந்தா''

''யாருக்கு எப்ப என்ன வரும்னு யாருக்குத் தெரியும்'' இடைமறித்தார் தாத்தா.

வீட்டில் வெட்கையாக இருந்தது.ஓடுகளில் பதியப்பட்ட கண்ணாடி வழியே சூரிய ஒளி அவளது முகத்தின் அருகில் விழுந்து கொண்டு இருந்தது. முகம் பெரும் சோகத்தில் இருப்பது போல எனக்குத் தென்பட்டது.

செடி தனது மலர்களுடன் வாடி வதங்கி கிடப்பது போல அவளது உடல் தரையில் பாயின்மீது கிடத்தப்பட்டு இருந்தது.

''ஊருக்கு எப்ப வந்த, உட்காரு''

''இப்ப''

அவளது தலைக்கு அருகில் சென்று அமர்ந்தேன். மல்லிகைப்பூ வாசம்தனை அப்போதுதான் கவனித்தேன். மல்லிகைப்பூ தலைக்கு அடியில் நசுங்கிக் கிடந்தது. நெற்றியில் வைக்கப்பட்ட திருநீறு குங்குமம். அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னை நல்லவனாக்கிய முகம் அது எனக்குள் அகமலர்ச்சியும் முகமலர்ச்சியும் கொண்டு சேர்த்த முகம் அது.

''இந்தா மோர் குடி''

அவள் மீது சிந்திவிடாதபடிக்கு சிறிதளவு குடித்துவிட்டு வைத்துவிட்டேன்.

''தினமும் இவளை குளிப்பாட்டி துணி மாத்தி இவ பக்கத்திலேயே என்னை உட்கார வச்சுட்டா''

''சாப்பிட்டாளா?''

''கஞ்சி கரைச்சி கொடுத்தேன்''.

''எப்போ கண் முழிப்பா?''

''ஆறு மணிக்கு''.

''டாக்டர்கிட்ட காமிச்சீங்களா?''

''பணத்துக்கு எங்க போறது''

அவளது கைகளைப்ற்றிக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே நடக்க வேண்டும் போல் இருந்தது.

''நடப்பாளா?''

''ஒரு ஆளுப் பிடிச்சிக்கனும் இது என்ன எழவு நோயுனு தெரியலை''

''பேசுவாளா?''

''அம்மானு சொல்வா''.

''எத்தனை மணி நேரம் முழிச்சிருப்பா?''

''ஒரு நாற்பது நிமிசம் அப்புறம் படுத்துருவா''.

''ஆளுக அடையாளம் தெரியுதா?''

''ம் தெரியும்''

எப்போது ஆறு மணி ஆகும் என்று இருந்தது. அவளது தாத்தா என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். பதினோரு மணி பேருந்துதனை தவறவிட்டு கண்மாய் காடு என கடந்து வீடு வந்து சேர்ந்ததும் அம்மா என்னிடம் சொன்னார்.

''ராமா புனிதா படுத்தபடுக்கையா இருக்கா''

நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.

''என்னம்மா சொல்ற?''

''அதான்டா சுந்தரமூர்த்தி மக புனிதா''

எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகள் இந்த பூமிக்குள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் அதிர்வுகளை விட படுபயங்கரமாக இருந்தது. என்னை நிலைப்படுத்த முடியாமல் தடுமாறினேன்.

''பார்த்துட்டு வரேன்மா''

''சாப்பிட்டு போ''

''இப்ப வேணாம்''

தெருவில் கண்டவர்களின் வரவேற்புக்கு தலையாட்டி அழுகையை அடக்கிக்கொண்டு கேள்விகளுடன் அமர்ந்து இருக்கிறேன்.

''செத்துப் போயிருவாளோனு பயமாருக்கு''

''அப்படி சொல்லாதீங்க''

''எப்பப்பாரு இப்படியே சொல்லிக்கிட்டு என் பேத்தி சாகமாட்டா சாகுற வயசா இது'' தாத்தா இடைமறித்தார்.

அவளை அப்படியே தூக்கிக்கொண்டு என்வீடு நோக்கிச் செல்ல வேண்டும் போலிருந்தது. வீட்டுக்கு வெளியில் வந்து நின்றேன். அந்த தெருவின் கடைசி வீடு இது இருபுறமும் வரிசையாக ஒரே அமைப்பினால் ஆன இருபது இருபது வீடுகளை கொண்ட நீண்ட மிகவும் சுத்தமான தெரு இது. தெருவினைப் பார்த்த போது எத்தனை எத்தனை கற்பனைகளை இந்த தெரு எனக்குத் தந்து இருந்தது என்பதெல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க இயலவில்லை.

''ஆறு மணிக்கு வரேன்''

கனத்த மனதுடன் கண்ணீர் திட்டுகளுடன் வீட்டுக்குப் போனேன்.

''சாப்பிடுப்பா''

அம்மா என கட்டிப்பிடித்து ஓ வென அழ ஆரம்பித்தேன்.

''என்னாச்சு''

''புனிதா எப்போ நல்லா ஆவா''

கதறலில் ஊடே சொன்னேன்.

''அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்''

''நல்லா ஆயிருவாம்மா''

''அழாத கண்ணைத் துடைச்சிக்கோ எத்தனை நாளு லீவுல வந்த''

''ஒரு வாரம்''

''பேய் எல்லாம் ஓட்டிப் பார்த்தாங்க தேறலை''

பேய்! எனது பிரபஞ்சத்தின் தேவதை அவள். அவளது வருகைக்குப் பின்னரே எனது கிராமத்தின் தெருக்கள் எல்லாம் அழகு பெற்றன. அவள் வசிக்கும் தெருவினைக் கடக்காமல் ஒருபோதும் எனது தெருவுக்கு சென்றது இல்லை. அவள் இந்த கிராமத்திற்கு வந்து நான்கு வருடங்கள் இருக்கும். பத்தாவது முடித்து இருந்தாள். நான் +2 முடித்து இருந்தேன். கல்லூரிக்குச் சென்று விடுமுறையில் வரும்போதெல்லாம் அவள் மீதான ஆர்வம் அதிகரித்தபடி இருந்தது. எதேச்சையாக அவளிடம் ஒருமுறை கூடப் பேசியது இல்லை. அவளது முகம் பார்த்ததில் இருந்து நல்லவனாக வாழ வேண்டும் எனும் ஆவல் அதிகரித்தபடி இருந்தது. கோபம் கொள்வது தவறு எனும் எண்ணம் புத்திக்கு ஏறி இருந்தது. எனது உலகம் அவளைச் சுற்றி அமையத் தொடங்கியது. சாப்பிட்ட பின்னரும் பசித்தது என்ன காரணம் என யோசித்தபோது அவள் சாப்பிட்டு இருக்கமாட்டாளோ என எண்ண வைத்தது +2 முடித்த பின்னர் படிப்பதை நிறுத்தி இருந்தாள். பண கஷ்டம் எனும் காரணம் போதுமானதாக இருந்தது.

விவசாயத்தில் கூலி வேலை செய்து பிழைப்பது பெரும் கடினம். பக்கத்து மில்லில் சென்று வேலை பார்க்கத் தொடங்கினார் அவளது அப்பா. யார் என்ன விபரம் இதற்குமுன்னர் எந்த ஊரில் இருந்தார்கள் ராமநாதனின் வீட்டிற்கு எப்படி குடி வந்தார்கள் எனும் கேள்விகள் பலநாட்களாக எனக்குத் தோனவில்லை. ஒருமுறை அம்மாதான் என்னிடம் மாந்தோப்புல இவங்க இருந்து இருக்காங்க. ராமநாதன் அண்ணனோட தூரத்துசொந்தம் அந்த அண்ணன் பிசிண்டிக்கு போறதால இங்க வந்துட்டாங்கன்றபோது இங்க எதுக்கு வரனும் எனும் கேள்வி என்னுள் மகிழ்ச்சியைத் தந்து இருந்தது.

''ராமா சாப்பிடுப்பா''

கொஞ்சமாக சாப்பிட்டேன், விழுங்குவதற்கு கடினமாக இருந்தது. ஆறு மணிக்கு முன்னரே புனிதாவின் வீட்டிற்குச் சென்றேன். மாலை நேரத்து இருள் சூழ்ந்து கொள்ளும் வேளையில் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தது. மனம் துடிதுடித்தது. அவளது அப்பா வேலை முடித்து வீட்டுக்கு வந்து இருந்தார்.

''வா ராமா''

அவளது நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் போலத் தெரிந்தது. உள்ளே சென்று அமர்ந்தேன்.

''எழுந்தாளா?''

''இன்னுமில்ல''.

ஆறு மணி ஆனது. எழவில்லை. என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்வாளா, வீட்டுக்குள் போதிய வெளிச்சமில்லை. நிமிடங்கள் ஓடின. முகம் பிரகாசமாகத் தெரிய மறுத்தது. அம்மா என்றபடி எழ எத்தனித்தாள். மெதுவாக அவளைத் தூக்கி சுவரோரம் அமர வைத்தார்கள். என்னைப் பார்த்துக்கொண்டே அம்மா என அழைக்க கைத்தாங்கலாக வீட்டுக்குப் பின்புறம் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே வந்தார்கள்.

''நான் சிவராமன்''

''ம்''

ஒற்றை வார்த்தை சன்னமாக கேட்டது. எனது பிரபஞ்சத்தின் தேவதை.

''நான் என்னோட கூட்டிட்டுப் போறேன்''

''சிரமம் ராமா''

என்னை அடையாளம் கண்டுகொண்டாளா எனத் தெரியாமல் தவித்தேன். அவள் மீண்டும் உறக்கத்தில் விழும் முன்னர் ஏதேனும் செய்ய வேண்டும் என மனம் பரபரத்தது. நானே அவளுக்கு ஆற்றலும் எல்லாம் என நினைத்தேன்.

''நான் கூட்டிட்டுப் போறேன், குணமாக்கிரலாம்''

'வேண்டாம் ராமா''

''புனிதா என்னோட வரியா''

''ம்''

''நான் கூட்டிட்டுப் போறேன்''

உடலில் எவ்வித தசையும் இல்லையோ எனும் அளவுக்கு ஒடுங்கிப்போயிருந்தவளின் கையைப்பிடித்தேன். இறுகப்பற்றிக் கொண்டாள். கஞ்சி கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினாள். இந்த கன்னங்களைத்தான் எப்படியெல்லாம் என்னுள் வர்ணித்தேன் என நினைத்தேன். அவள் படும்கஷ்டங்களைக் கண்டு எனக்கு கண்ணீர் முட்டிநின்றது இறுகப்பற்றிய கையை விடவில்லை. இறுகப்பற்றிக்கொள்ள எங்கிருந்து வந்தது இந்த ஆற்றல்? போதும் என தலையை மெதுவாக ஆட்டினாள்.

''எல்லா உணர்வுகளும் இருக்கின்றதா''

பேசுவதுப் புரிந்தது போல பார்த்தாள்.

''ம்''

என் மீது அவளை சாய்த்துக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். சிரமம் கொண்டாள். அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு எனது வீடு நோக்கி நடந்தேன்.

''தூங்கிருவா''

விழிகள் என்னிடம் ஏதோ கெஞ்சுவது போல தென்பட்டது.

''கண்ணை மூடாதே''

''ம்''

சிரிக்க மறந்து இருப்பாள் என தோனியது.

வீட்டுக்குள் சென்றதும்தான் தாமதம்.

''என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்க''

''சொன்னா கேட்கலை''

என்னுடன் வந்து நின்றார்கள் அவளது அம்மா அப்பா தாத்தா.

''நான் பார்த்துக்கிறேன்''

அவளை அமர வைத்தேன்.

''நாளைக்கு நான் காலையில ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போறேன்''

வீட்டில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.

''ஏன் இப்படி பண்ற''

''உனக்கு அறிவே இல்லையாண்ணா''

அம்மாவுடன் தங்கையும் சேர்ந்து கொண்டாள். பலர் திட்டத் தொடங்கினார்கள்.

''நான் கட்டிக்கப் போற பொண்ணு பேசாம போயிருங்க''

அவளின் முன் கோபம் அழுகை எல்லாம் எனக்கு வராது. மெல்ல மெல்ல கலைந்து போனார்கள். தூங்கிருவா என்றது போலவே தூங்கத் தொடங்கினாள்.

''எப்போ எந்திரிப்பா?''

''காலையில எட்டு மணி''.

தூங்காத என்றேன் தூங்கிப் போனாள்.

(தொடரும்)


Wednesday 13 April 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 2

இப்படியொரு மரங்களை நான் கண்டது இல்லை கீழே காலுக்குத் தட்டிய பழங்களை எடுத்து உண்டேன் சுவையாக இருந்தது காட்டைகடக்க வேண்டியது இல்லை காடு அப்படியே மலையாக மாறுவதை உணர்ந்தேன் விலங்குகள் சத்தம் ஏதுமில்லை பறவைகள் கூட காணவில்லை காற்று வீசியது திரும்பி விடலாம் எனதோணியது அந்த நொண்ணன் இந்நேரம் வந்து இருப்பார் எந்தஎல்லையை கடக்கக்கூடாது என சொன்னார்களோ கடந்து இருந்தேன் விறுவிறுவென அங்கிருந்துதோட்டத்திற்கு ஓடியாந்தேன் நொண்ணன் இன்னும் வரவில்லை படுத்தமாத்திரத்தில் எந்திருடே எங்கட போன என்றார் பழம் சாப்பிடுணே என தந்தேன் எடே என்ன நீ சொல்லசொல்ல மலைக்குப் போயிருக்க என பழம் வாங்கி கடித்தவர் இனிப்பா இருக்குடே என்றதும் எல்லை கடந்ததை சொன்னேன் நிசமாவாடே ஆமாணே என்றதும் சரி வாடே வேலையை செய் என்றார் இந்த சேதிஊருக்குள் பரவியது என்னை எல்லோரும் வந்து கேட்டார்கள் பொய் பேசாதடே என்றார்கள் சிலர் கூடவாங்க என அழைத்தேன்.

ஒருவரும் வரத்தயார் இல்லை அந்த பொட்டி என்னிடம் வந்து எதுக்குடே ஊரை ஏமாத்துற நாசமா போவ என திட்டினார் ஏ பொட்டி உன் நொப்பா செத்தாரு அதுக்கு என்னைத் திட்டுவியா? என் அப்பா மட்டும் சாகலைடே ஊருல நிறைய பேரு போயி செத்தாங்க உன் தாத்தா பாட்டி கூடதான் செத்தாங்க அதான் அந்த எல்லை போட்டது என்னமோ வீரன் கணக்கா பேசற என பொட்டி சொன்னதும் நான் கொண்டு வந்த பழம் ஒன்று தந்தேன் போடா கிறுக்குப்பயலே மலைக்குப் போனானாம் என சொல்லி நடந்தது. ஏ பொட்டி போனவங்க திரும்பதான வரலை செத்தாகனு சொல்ற அங்குட்டு எங்கேனாலும் போயிருக்கலாம்ல பேசுவடே தொலைஞ்சி போறது திரும்பக்கிடைக்காதுடே என்றபடி மண்ணை வாரி தூற்றியது சாகத்தான போற என்னோட வா பொட்டி எல்லையை கடந்து காட்டுறேன் என சொன்னதும் நாலைஞ்சு பொணம் அந்த எல்லைக்கு கிட்ட கிடந்துச்சு ன கதை சொன்னது நான் அடுத்தநாள் கிளம்பத்தயார் ஆனேன் எடே பத்திரமா வந்துடுடே என நொண்ணன் சொன்னார் புளிச்சாதம் கட்டிக்கொண்டு கிளம்பினேன் வீரனாக உணர்ந்தேன் அடுத்த தோட்டம் கடந்தபோது இனிமே திரும்பமாட்ட என மொமா சொன்னார் திரும்பினா நீ செத்துரனும் என நடந்தேன் எல்லையைத் தொட்டேன் கைகால்கள் நடுங்கியது பின்வாங்கினேன் இந்த எல்லையை கடப்பது பற்றி யோசிக்காமல் ஓடித் தாவினேன் வியர்த்தது செடிகளுக்கு மத்தியில் அமர்ந்தேன் மரவாசனையானது பலமாக இருந்தது பூ வாசனை இலை வாசனையைவிட மர வாசனையை நுகர்ந்தேன் தண்ணீர் குடித்தேன் உயர நடக்க ஆரம்பித்தேன் மர வாசனை மாற வேறொரு வாசம் லேசாக வர ஆரம்பித்தது தடுமாற ஆரம்பித்தேன் உடலுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்தது சட்டென்று கீழே குதித்தேன். மரவாசனை அடிக்க உடல் சற்று சரியானது இதைத்தான் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நிச்சயம் ஏதோ ஒன்று இத்தகைய செயலைச் செய்கிறது என அறிவற்ற மூளைக்கு எட்டியது முகத்தை துணியால் மூடி மீண்டும் செல்ல நினைத்து பக்கவாட்டில் நடந்தேன் துணி விலக்கியபோது எவ்வித வாசமும் இல்லை அதே அளவில் நடந்து சென்றேன் மேலே ஏற முடிவு செய்து ஏறியபோது அதே வாசம் அடித்தது கீழே உருண்டேன் பேச முயற்சித்தபோது பேச வரவில்லை நினைவு எல்லாம் இருந்தது கை கால்கள் மரத்துப் போன உணர்வு அசைத்துப் பார்த்தேன் அசைந்தது மெதுவாக ஊன்றி எழுந்து கீழ் நோக்கி நடந்தேன் பேச முடியவில்லை கைகால்களை வேகமாக ஆட்ட இயலவில்லை காட்டினைத் தாண்டி வந்தபோது சற்று ஓரளவு நிம்மதியாக இருந்தது ஆனால் பேச்சு மட்டும் தொலைந்து போயிருந்தது அழுகையாக வந்தது நடந்து தோட்டம் கடந்தபோது என்னடே ஒருமாதிரி இழுத்து நடக்கற என மொமா சொன்னபோதுதான் பார்த்தேன் இடது காலை இழுத்து இழுத்து நடந்தேன் அந்ந வாசம் என்னை ஏதோ செய்துவிட்டது பதில் சொல்ல நினைத்தும் சொல்ல இயலாது.

தோட்டத்தில் சென்று படுத்தேன் இம்முறை எதுவும் எடுத்து வரவில்லை கொண்டு போன தண்ணீர் புளிச்சாதம் எல்லாம் அப்படியே போட்டபடி வந்துவிட்டேன் எடே எந்திரு என காலையில் வந்து நொண்ணன் எழுப்பினார் பேச்சு வரவில்லை என்னடே ஆச்சு கை கால் எல்லாம் தடிச்சி இருக்கு என்றபோது சொல்லவே முடியாது நான் தவித்த தவிப்பு படித்து இருந்தாலாவது எழுதி காமிக்கலாம் பாவிப்பய மூளைக்கு தெரியலையே அழுது கண்ணீர் வடித்தேன் எழ முடியாமல் எழுந்தேன் வாடே என அழைத்து ஆஸ்பத்திரி போவோம் என்றார் செடியை பறித்து மலை போல கைகள் காட்டி நுகர்ந்து காண்பித்து இப்படி ஆனதாக சொன்னேன் எதுக்குடே இப்படி பண்ணின என திட்டியபடி ஊருக்குள் போனோம் அந்த பொட்டி வந்து, சொன்னேன் கேட்டியாடே முகரைக்கட்டை என்றதும் போயிரு பாட்டி கொன்னுருவேன் என நொண்ணன் திட்ட எனக்கு என்னால் தான் இப்படி என மனம் வலித்தது ஆஸ்பத்திரி போனோம் அலர்ஜி என மருந்து ஊசி போட்டார் பேச்சுதான் என்ன பண்றதுனு தெரியலை என்றார்.

சொல்லு என கைகாட்டினேன் மலைக்குப் போனது நுகர்ந்தது சொன்னதும் அது ஆவி மலை ஆச்சே என்றார் டொக்டர். இல்லை என தலை ஆட்டினேன் பின்னர் யோசித்தேன்ஆவி என்றால் வாயு தானே அப்படி எனில் ஏதோ விஷவாயு அந்த மலையில் இருக்குனு தெரிஞ்சி இருக்கு எனப்பட்டது ஐயோ படிப்பு வரலையே என கதற நினைத்தால் சத்தம் ஏதும் வரவில்லை ஏன்டே மலை மலைனு சொல்லி இப்படி பேச்சை தொலைச்சி நிக்கிற. பொட்டி சொன்னது நினைவுக்கு வந்தது தொலைஞ்சிட்டா திரும்பாது அப்போது அங்கே வந்த ஒருவர் நாங்க பேசினது கேட்டு இங்கன வாப்பா அந்த மலையில் தசைகளை செயல் இழக்கச் செய்யும் கொடிய மருந்து இருக்குனு ஒருத்தர் கண்டு பிடிச்சி இருக்காரு நமக்கு மயக்க மருந்து தருவாங்கல அதைப்போலவே அது வேலை செய்யுமாம் ஆனா இது அதிக விஷத்தன்மை வாய்சசது இவன் தப்பிச்சதுகூடஅதிசயமான விஷயம் தான் இதை ஏன் எங்களுக்கு முன்னமே சொல்லலை அதான் பேய் மலை ஆவி மலைனு போகாதீங்கனு சொல்லி இருக்குல ஒரு பறவையும் விலங்கும் அங்கன எட்டிப்பார்க்கறது இல்லை இவன் எதுக்குப் போனான் என்றதும் என்ன இருக்குனுப் பார்க்கப் போனான் என சமாளித்தார் நொண்ணன் ஏன்டே உனக்கு இதெல்லாம் எனநொண்ணன் சொல்ல படிப்பில் இதே அக்கறை காட்டி இருக்கலாம் என நினைத்தேன் சிலவாரங்கள் பிறகு ஒருவர் எங்க ஊருக்குள் என்னைத் தேடி வந்தார்.

வீக்கமானது குறைந்து இருந்தது. பேச்சு வரவில்லை. ஒரு மருந்தை கொடுத்தவர் ஒரு வாரம் சாப்பிடச் சொன்னார் அதிசயமாக எனக்கு பேச வந்தது உன்னோட குரல் தசையை அந்த வாயு ரொம்பத்தாக்கி இருக்கு என்றார் இனிமே அங்க போகாத அந்த மரங்களை அழிக்கச்சொன்னா யாரு கேட்கிறா என்றவரைப் பார்த்தேன் ஏன்டே உனக்காக அந்த ஆளை தேடி வரதுக்குள்ள போதும்னு ஆயிருச்சி என்றார் நொண்ணன் இப்போது எவரும் பேய் மலை ஆவி மலை என எவரையும் அந்த மலையை நான் அழைக்கவிடுவது இல்லை

(பேய்மலை பாகுபலி முற்றும் இனி செவ்வாய் கிரகம் தொடரும்)

Wednesday 3 February 2016

தட்சாயினியும் கல்யாண உறவும் - 2

''என்ன தம்பி சௌக்கியமா இன்னைக்கு காய்கறி பக்கம் காணோமே'' அப்பா அருணைத்தான் விசாரித்தார் 

''வாழை இலை போட வந்தேன். நாளனைக்குத்தான் பறிக்கனும்யா''

''தம்பியைத் தெரியுதாம்மா உன்னோட படிச்ச தம்பிதான் அப்பவே எனக்கு நல்ல பழக்கம்''

''ம்ம் தெரியும்ப்பா''

அருண் அப்பாவோடு நல்ல பழக்கம் என்பது இதுவரை எனக்குத் தெரியாது. எனது காதலுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருப்பது இதுவும் ஒரு காரணமோ என நான்அந்த கணத்தில் எண்ணினேன். அருண் என்னைப் பார்க்க மறுத்தான். பொங்கல் நன்றாகத்தான் இருந்தது. சாப்பிடத்தான் பிடிக்கவில்லை. 

ரொம்ப நல்ல தம்பி என அருண் குறித்து அப்பா சொன்னார். அருணின் அப்பா அம்மா, விவசாயம், அவனது தங்கை என பேசினார். இவ்வளவு எல்லாம் என்னோடு அப்பா பேசியது இல்லை.

அம்மாவிடம் விபரங்கள் சொன்னேன். உங்கப்பாவுக்கு வேறு வேலை இல்லை சும்மா ஏதாச்சும் பேசுவார் என்றார் அம்மா. இது எனக்குப் புரியவில்லை. அருணின் ஊருக்குச் செல்லலாம் என தைரியம் வளர்த்துக்கொண்டேன். அடுத்தநாள் அருணின் ஊருக்குள் சென்றேன் மனம் படபடத்தது. யாரைப் பார்க்கனும் எனக் கேட்டார். ஒருவர். என்னோட தோழி ஒருத்தி என பொய் சொன்னேன் தப்பு செய்வதாக நாம் நினைக்கும்போது பொய் சொல்ல ஆரம்பிக்கிறோம் அதான்மா எந்த புள்ளை அது என்றார்.

என்னோட படிச்ச பொண்ணு என சொன்னபோது எனது கண்ணில் அருண் தென்பட்டான் ஒரு கைதிக்கு கிடைத்த விடுதலை போல உணர்ந்தேன் அதோ அங்கே இருக்காங்க என நான்அவரிடம் சொல்லிவிட்டு அருணை நோக்கி நடந்தேன். வீதியில் வேறு எவரும் இல்லை எனினும் பலர் என்னைப் பார்ப்பது போல ஒரு பிரமை உண்டாகியது. தட்சா என அழைத்த அருண் குரல் எனக்கு தந்த மகிழ்ச்சி நிறைய. நல்லா இருக்கியா என்ன இந்தப்பக்கம் என்றான். உன்னைப் பார்க்கவே வந்தேன் என்றதும் சிரித்தான்.

வா வீட்டுக்குப் போகலாம் என அழைத்துச் சென்றான். நான் மதிய வேளையில் சென்று இருந்தேன். வெயில் ஒன்றும் அவ்வளவாக இல்லை. ஊர்ல யாரையும் காணல என சொன்னபோது எல்லாம் வெளியூர் வேலை என்றான். 

அருண் என் காதலுக்கு நீ பதில் சொல்லலையே என்றேன் புன்னகைத்தவன் வீடு வந்துருச்சு என்றான். எங்க வீடு போன்று இருந்தது. 

யாருப்பா இது என்றது அருணின் அம்மாவாக இருக்கும் என நினைத்தேன். மரக்குளம் முத்தையா ஐயா பொண்ணு. முத்தையா மகளா வாம்மா என்று சொன்னபோது ஏதோ நெருங்கிய உறவு போல உணர்ந்தேன் உட்கார வைக்கப்பட்டதும் மோர் கொண்டு வந்து தந்தார். என்ன பண்றம்மா என எல்லாம் விசாரித்தார். உங்க அப்பா வியாபார சம்பந்தமா இங்க வருவாரு போவாரு. அப்பத்தான் இவனோட அப்பாவுக்கு பழக்கம் என்றார். எங்க மூலமாத்தான் எதுவும் இந்த ஊரில செய்வார் என்றதும் சரியெனக் கேட்டுக்கொண்டேன். என்ன விசயமா வந்தம்மா என்றதும் அருணின் மீதான எனது காதலை சொல்ல நினைத்தேன். ஊர் சுத்திப்பார்க்க வந்ததாக பொய் சொன்னேன். இங்க என்ன கிடக்கு, ஊரே காலியாகிரும்போல. இவன் ஒரு வேலைக்குப் போனா எல்லாம் வித்துட்டு கூடப் போயிரலாம்னு இருக்கோம் என்றதும் எனக்கு திக்கென்றது. சிறிது நேரம் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன் மொபைல் எண் கூட அருண் என்னிடம் தரவில்லை, நானாகத்தான் கேட்டேன்.

என் அம்மாவிடம் எனக்குத் திருமணம் முடிந்த பின்னர் ஊரை விட்டுச் செல்வீர்களாக எனக்கேட்டபோது இதே மண்ணுலதான் எங்க கட்டை வேகும் என்றார்கள். அருண் வீட்டிற்கு சென்று வந்ததை மறைத்து வைத்தேன் விற்பனை இடத்துக்கு அப்பாவுடன் சில சனிக்கிழமைகள் சென்று வர ஆரம்பித்தேன் எதுக்கும்மா சிரமம் என்றதால் செல்வதை நிறுத்திவிட்டேன். 

வேலை சம்பந்தமாக ஒரு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. அங்குதான் என் சகோதரனை சந்தித்தேன். என்னைப் பார்த்தவன் ஏதும் சொல்லாமல் போனான். அண்ணா என அழைத்து அவன் முன் நின்றதும் யார் நீ என்றான் நான் தட்சாயினி உன்னோட கூடப்பிறந்த தங்கை என்றேன் அது உறவு முறிச்சி வருசமாச்சி என்றான். அம்மாவை அண்ணி அடிச்சதால என்னால பொறுத்துக்க முடியலை என்றதும் போயிரு என விறுவிறுவென நடந்து போய்விட்டான்.

தாயை விட மனைவி ஆண்களுக்கு மிகவும் முக்கியமாகப்போய்விடுகிறது. அன்று நடந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் உடல் உள்ளம் கொந்தளிக்கிறது. நான் செய்தது சரிதான் என இதுவரை எண்ணி இருக்கிறேன். அன்பில்லாத உறவு அவசியமற்றது. போலித்தனமான வாழ்வில் என்ன இருக்கப்போகிறது. கிளம்பி வரும் போது எதிரே வந்தான். நான் அவனை காணாத மாதிரி கடந்தேன். தட்சா நில்லு. நின்றேன். என்னைப். பார்த்ததை அப்பா அம்மாகிட்ட சொல்லாத. அம்மா அப்பா என்றில்லாமல் அப்பா அம்மாவாம்.

முகத்தைப் பார்க்காமல் தலையாட்டிவிட்டு நடந்தேன். எத்தனை பாசமாக இருந்தான். தட்சா உனக்குத்தான் எல்லாம் முதலில் என அழ வைக்காமல் இருந்த அந்த அண்ணனா இவன். திரும்பிப் பார்த்தேன் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தான். அப்போதுதான் ஈரம் என் கண்களை நனைத்தது. வேகமாக நடந்து வெளியேறினேன். ந்த உலகம் எனக்கு இன்னமும் புரிந்தபாடில்லை. புரியவும் புரியாது. அன்று அம்மாவிடம் அண்ணன் வந்தா ஏத்துப்பியா என்றேன். நான் எங்க அவனை ஒதுக்கி வைச்சேன். அவன்தான் நம்மளை ஒதுக்கி வைச்சி பாசத்தில் விளையாடறான், நீ அன்னைக்கு பொறுமையா இருந்து இருக்கனும்மா ஆனா நீ பண்ணினது சரிதான் போறான் விடு. எங்கேயாச்சிம் நல்லா இருக்கட்டும். எங்களுக்கு கொள்ளி போட உன் மகன் வருவான் என்றதும் கல்யாணம் பண்ண வேண்டியதின் அவசியம் சற்று புரிந்தது.

வேலை இடத்தில் நன்மதிப்பை பெற ஆரம்பித்து இருந்தேன். இந்த நேரத்தை எவராலும் பிடித்து வைக்க முடிவதில்லை. அருண் வீட்டிற்கு சென்றது அண்ணனைப் பார்த்தது எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. அப்பாதான் அருணுக்கு வேலை கிடைத்த விசயத்தை என்னிடம் சொன்னார். அப்பாவுக்கு அருணை மிகவும் பிடித்து இருக்க வேண்டும். அவர்கள் ஊரைவிட்டுப் போயிருப்பார்களோ என நினைத்தேன் அருணுக்கு எந்த ஊரில் வேலை என அப்பாவிடமும் கேட்கவில்லை.

இந்த உலகில் ஒன்று மட்டும் நிச்சயம். இதுதான் சரி என எதையும் எவராலும் நியாயப்படுத்திப் பேசிவிட முடியும் வலி என்பது நேரடியாக பாதிக்கப்பட்டவர்க்குத்தான் எனக்கு கதைகள் படிக்கப் பிடிக்கும். ஓவியம் வரைவது, பாடுவது, ஆடுவது என ஓரளவுக்குத் தெரியும் கற்றுக்கொள்ள ஊக்கம் தந்தது பக்கத்து ஊரில் பாடல் சொல்லி தந்த ஆசிரியை கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்கள் பிறரிடம் எதுக்கு கல்யாணம் என விட்டேத்தியாகப் பேசுவார்கள் என்னிடம் அப்படி சொன்னது இல்லை. ஒருவேளை நானும் அவரைப்போல கல்யாணம் பண்ணாமல் வாழ்வேனோ எனும் அச்சம் உள்ளூர அருண் தந்தது உண்டு. அருண் தான் அம்மையப்பனைத் தாண்டிய உலகம் என எண்ணி இருக்கிறேன் பாடல் ஆசிரியையிடம் கேட்கலாம் என நினைத்தேன் என்ன வாழ்வு இது அன்று மதியம் அவர்கள் இறந்து போனதாக தகவல் ஊருக்குள் வந்தது.

அதிர்ச்சியும் பயமும் ஒட்டிக்கொண்டது. அவருக்கு வயது 52 தான். அம்மா அப்பா நான் அங்கு இரவு சென்றோம். என்னால் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. உறவுகள் என அவர் சொல்லித்தந்த பிள்ளைகள் குடும்பம் தான் வந்து இருந்தனர். மூச்சடைத்து இருந்ததாக சொன்னார்கள். எவரோடும் அன்போடு இருக்க பழகிட வேண்டும் என அவர் சொன்னதுதான். ஊர்ப்பெரியவர் ஆசிரியை எழுதித்தந்த விபரங்கள் வாசித்தார் தனது சொத்து பணம் வீடு இல்லாத மக்களுக்கு சேரட்டும் என அவர் வாசித்தபோது எனக்கு அழுகை அதிகமானது. உறவுகளை நேசியுங்கள் இது தவிர வேறு எதுவும் இல்லை உலகில் என்றே முடித்து இருந்தார்கள் எனக்கு அப்படி ல்யாணம் எதற்கு எனப் பேசிய ஆசிரியையா என ஆச்சரியம். ஒருவேளை கல்யாணம் உறவுகளை சிதைக்கும் என நினைத்தாரோ. நாட்கள் கழிந்தது அவரது மரணம் மனதில் நிழலாடுகிறது.

வெள்ளி அன்று அண்ணனின் நிறுவனம் சென்றேன் அண்ணா நான் அண்ணியைப் பார்க்க வேண்டும் என்றேன் தட்சா எதுவும் வேணாம் போ என விரட்டினான். அண்ணனின் வீட்டு முகவரி ஒருவரிடம் வாங்கிக்கொண்டு அங்கு சென்றேன். கதவைத் திறந்த அண்ணியிடம் என்னை மன்னிச்சிருங்க அண்ணி என்றேன் வா தட்சா என உள்ளே அழைத்தார். எனது தயக்கம் எப்படியானது என நான் சொல்ல இயலாது. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றபோதும் மன்னிப்பு கேட்பது என்னஒரு செயல். உள்ளே சென்று அமர்ந்தேன். தண்ணீர் கொண்டு வந்தார். குடித்தேன். அண்ணி குழந்தை எங்கே என்றேன். இன்னும் பாக்கியம் இல்லை தட்சா என்றபோது அவருக்குள் சோகம் இருந்தது அத்தையை நான் அவமதிச்சி இருக்கக்கூடாது அந்த பாவம்தானோ என்னவோ நீ எப்படி இருக்க என் அம்மா கூட நீ பண்ணினது சரினு சொன்னாங்க அண்ணி, பெத்த அம்மா அதுவும் எப்படி எல்லாம் வளர்த்தாங்க என சொன்னபோது எனக்கு கண்ணீர் எட்டிப்பார்த்தது வீட்டுக்கு வாங்க அண்ணி என அழைத்தேன். உன் அண்ணன் நீ வந்தது பார்த்தது எல்லாம் சொன்னார். அன்னைக்கு நிறைய அழுதார். மனசில பூட்டி வைச்சி இருந்துருக்கார். வரோம் என அண்ணி சொன்னபோது சந்தோசப்பட்டேன் எதையும் மனசில வைச்சிக்க வேணாம் என்று சொல்லிவிட்டு நடந்தேன்.

இந்த பிரபஞ்சம் அழகிய மனிதர்களால் மட்டுமே என்றும் அலங்கரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் மட்டும் எப்படி இருக்கும். அண்ணியின் கோபம் இரண்டு விசயங்களால் மாறி இருக்கிறது ஒன்று பிள்ளைப்பேறு மற்றொன்று அண்ணனுடைய என் மீதான பாசம் அண்ணி அம்மாவை அடித்த போது அம்மா என்னை மன்னிச்சிரு தாயி என்றுதான் சொன்னார் நான் தான் அண்ணியை அறைக்குள் அழைத்துச் சென்று என் ஆதங்கம் தீரும்வரை அடித்து துவைத்தேன். உலகில் அவமானங்களோடு வாழப் பழகாதீர்கள் அன்புக்காக விட்டுத்தாருங்கள் தவறில்லை. என் அம்மா பொறுமையின் சிகரம். பொறுமைதான் அன்பின் வலிமை. அன்பு நிறைந்த மனிதர்கள் உலகில் காயப்படுத்தப்படுகிறார்கள். அன்பை அவமதிக்கும் போது நிராகரிக்கும் போது உள்ளூர மனம் குமுறும். அருண் விசயத்தில் நான் வமதிக்கப்பட்டதாக நினைக்கவில்லை. அனுமதிக்காக காத்திருந்தேன் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. வாரம் சில ஆகியும் அண்ணன் அண்ணி வரவில்லை.

அம்மாவிடம் சொன்னபோது விரிசல் விழுந்தது விழுந்ததுதான் போல என்றார் அண்ணனைப் பார்க்க வரமறுத்தார் அருணை ஒருமுறை சந்தித்தேன் அண்ணி விசயத்தை சொன்னேன் அவன் தட்சா பெருமையா இருக்கு என்றான் பெரியவர்களை மதிக்காதவங்க இருந்து என்ன பிரயோசனம் என்னோட காதலுக்கு பதில் இல்லையா என்றேன் என்னோட தங்கைக்கு கல்யாணம் இருக்கு இன்னும் ஆறு மாசம் தான் அதற்கு பிறகு நம்ம கல்யாணம் பத்தி பேசலாம் என்றான் நான் காதல் பற்றி சொன்னேன் அவன் கல்யாணம் பற்றி சொன்னான் காதல் பண்ணினால் கல்யாணத்தில் முடியனும்னு நினைக்கிறாங்க கல்யாணம் பண்ணினப்பறம் காதலை மறந்துருராங்க என்றான் என்ன சொல்ற என்றேன்.

காதல் பண்றேனு சொல்லிட்டு வேற பெண்ணை கல்யாணம் பண்றது தப்புதானே என்றான் ஆமா அருண். கல்யாணம் பண்ணிட்டு பிரியறது தப்புதானே என்றான். ம்ம்.கல்யாணம் பண்ண முன்னால் யோசிக்கலாம் கல்யாணம் பண்ணிட்டு யோசிக்கக்கூடாது என்றவனை வியப்புடன் பார்த்தேன் இப்படி அவன் பேசி கேட்டது இல்லை காதல் அதிகமானது ஆசை வார்த்தைகள் பேசி காதல் என சொல்லி கொச்சைப்படுத்தும் வகையில் அருண் இல்லை மகிழ்ச்சியாக இருந்தது இந்த உலகம் இப்படியானது இல்லை.

பெண்ணை ஒரு உலகம் எப்படி நடத்தும் என நான் அறியாதது இல்லை கேட்டால் இயற்கை என பேசுபவர்களை கண்டது உண்டு மதிப்பு கௌரவம் இல்லாத ஒன்று எதற்கு
மோசமான விசயம் பிடித்துவிட்டால் மனம் அதை கேவலமாக எண்ணுவது இல்லை அருண் நான் காத்து இருக்கவா என்றேன் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன் தட்சா என்றபோது இந்த பிரபஞ்சமே எனக்குத்தான் என்று இருந்தது அருண் பற்றி அப்பா பெருமையாகப் பேச ஆரம்பித்தார் விவசாயம்தனை விடமா வேலைக்குப் போற பையன் என்றபோது எனக்கு சந்தோசம் அருண் அவனது அப்பா ஒருநாள் வீடு வந்தார்கள் தங்கையின் திருமண பத்திரிக்கை தந்தார்கள் கல்யாணத்துக்கு சென்றோம் அருண் என்னைப்பற்றி அவர்கள் வீட்டில் சொன்னான் அடுத்த கல்யாணம் என எங்களுக்கு என்றார்கள்.

இப்போது ஒன்றை மிகவும் யோசிக்கத் தொடங்கினேன் காதல் என்பது அவசியமா? காதல் என்பது உண்மையா? காதல் அனுமதி பெற்றுத்தான் நடக்குமா? காதலின் வெற்றி கல்யாணம் தானா? அண்ணன் அண்ணி இன்னும் வரவே இல்லை எனது திருமணம் தேதி குறிக்கப்பட்டு அண்ணனுக்கு நானும் அப்பாவும் பத்திரிக்கை தரப் போனோம். வருகிறோம் என்றான் வந்தான் கல்யாணம் உறவை சிதைக்கக்கூடாது அண்ணியின் பிள்ளைப்பேறுக்காக ஒரு கிளினிக்தனை அறிமுகம் செய்தேன் எந்த பாவமும் இல்லை என புரியட்டும் அருண் என்னை காதலிக்கத் தொடங்கி இருந்தான்.

ஆமாம் அண்ணி ஏன் அம்மாவை அடித்தார்? அது ஒரு தனிக்கதை.

(முற்றும்)