Showing posts with label வாசகர் மாவட்டம். Show all posts
Showing posts with label வாசகர் மாவட்டம். Show all posts

Friday 30 July 2010

வாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா?

எனக்கு நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத சந்தேகம் ஒன்று இருந்து வருகிறது.

வாசகர் கடிதங்களை பொதுவில் வெளியிட்டு அதற்கு பதில் தெரிவிப்பது சரியான முறையா?

வாசகர்கள் எப்படி தனியாய் நேரம் ஒதுக்கி நமக்கு தனியாய் எழுதுகிறார்களோ அதைப் போல நாமும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி எழுதுவதை தனியாய் அனுப்புவதுதான் சரியா?

சில வாசகர்கள் தங்களது எண்ணங்களை பொதுவில் வைக்க விரும்புவதில்லை என்பதால் மட்டுமே தனிப்பட எழுதி அனுப்புகிறார்கள் என்பதை எவரேனும் உணர்ந்து இருக்கிறார்களா?

மேலும் பின்னூட்ட மட்டுறுத்தல் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே வந்திருக்கும் பின்னூட்டங்களை படித்துதான் வெளியிடுகிறார்களா?

எவரும் கருத்து தெரிவிக்கலாம் எனும் வாய்ப்பு இருப்பதால் அதனை முறை கேடாக பயன்படுத்தும் நபர்களின் பின்னூட்டங்களை தைரியமாக நீக்கும் பண்பு உண்டா அல்லது அந்த முறைகேடுகளையும் சிரித்து வாசிக்கும் பண்புதான் நீடிக்கிறதா?

வாசகர்களே உங்கள் எண்ணங்கள் பல எழுத்தாளர்களின் எள்ளல்களுக்கு உள்ளாகி இருப்பதை எப்போதேனும் நினைத்து பார்த்தது உண்டா?

எனது கருத்துதனை சொல்கிறேன் என விழலுக்கு நீர் பாய்ச்சுதலை இனிமேலாவது தவிர்த்து விடுங்கள் வாசகர்களே.