Wednesday 20 July 2011

பத்திரிகை தர்மம்

தர்மம் என்றால் என்ன ?

நீதி என்றால் என்ன?

நியாயம் என்றால் என்ன?

நேர்மை என்றால் என்ன?

இதற்கான விடைகள் தெரிந்து கொள்வது மிகவும் கடினம் என்றுதான் இன்றைய கால நிலையை குறை சொல்லும் அளவுக்கு நாம் வாழ்ந்து வருகிறோம். 

'தர்மம் வெல்ல அதர்மத்தின் வழியில் நடக்கலாம்' இது பல ஆண்டு காலமாக சொல்லப்பட்டு வரும் நியதி. 

ஒரு பொய்யான செய்தியை உண்மையாக்கும் வல்லமை பத்திரிகை உலகுக்கு உண்டு. 

ஒரு உண்மையான செய்தியை பொய்யாக்கும் வல்லமை பத்திரிகை உலகுக்கு உண்டு. 

செய்தி தாள்கள் உண்மையை மட்டும் சுமந்து வருகின்றனவா என்று பார்த்தால் பாதி கலப்பட செய்திகள் உண்டு, கற்பனை விசயங்களும் உண்டு. அரை குறையாக தெரிந்து வைத்து கொண்டு திரைக்கதை எழுதும் வல்லமையும் இந்த பத்திரிக்கை நிருபர்களுக்கு உண்டு. 

இந்த பத்திரிகை நிருபர்கள் சேகரிக்கும் செய்திகளை வைத்து ஒரு பத்திரிகையின் தரத்தை நிறம் பிரித்து விடலாம். நமது ஊரில் உள்ள பத்திரிகைகளில் தினமணி சிறந்த பத்திரிக்கை எனும் பெயர் முன்னரே உண்டு. அதனால் அந்த பத்திரிகையில் வரும் செய்திகள் கட்டுரைகள் தரம் வாய்ந்தவை என பலரால் பெரிதும் நம்பப்படுபவை. 

இந்த பத்திரிக்கை நிருபர்கள் செய்திகளை சேகரிக்க என்ன என்ன பாடுபடுகிறார்கள் என்பதுதான் வெளித் தெரியாத விசயம். அதுவும் ஒவ்வொரு பத்திரிகையும் 'உலக பத்திரிகையில் இதுவரை வெளிவராத விசயம்' என மார் தட்டி கொள்ள போடும் போட்டிகள் மிக மிக அதிகம். 

பக்கங்களை நிரப்பிட பாடாய் படும் இந்த பத்திரிக்கை நிருபர்கள் பாடு திண்டாட்டம்தான். அதன் காரணமாகவே ஐம்பது சதவிகிதம் மேல் உருப்படியில்லா விசயங்களை இந்த பத்திரிக்கைகள் எழுதி தீர்த்து விடும். இதனோடு மட்டுமில்லாது மலர்கள் வேறு. 

இப்படிப்பட்ட பத்திரிக்கைகளுக்கு என்ன தர்மம் இருந்து விட முடியும்?

லண்டனில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட பத்திரிக்கை ஒன்று இன்று மூடி விடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. காரணம் இவர்கள் மற்றவர்களின் தொலைபேசியை ஒட்டு கேட்டு செய்திகளை சேகரித்ததுதான்.

அதோடு மட்டுமில்லாமல் பணம் கொடுத்து எல்லாம் பரபரப்பு செய்திகளை சேகரித்து இருக்கிறார்கள். இந்த பத்திரிகை மட்டுமா அப்படி செய்தது? எனும் கேள்விக்கு எல்லா பத்திரிகையும் குற்றவாளிகள் தான் எனும் பார்வை தான் மிஞ்சுகிறது. 

துணிச்சலாக உண்மை செய்தியை வெளியிட்டால் பத்திரிக்கை அலுவலகம் சூறையாடப்படும் அவல நிலை நமது ஊரில் உண்டு. நிருபர்கள் கொல்லப்படும்  அவல நிலையும் உண்டு. 

எத்தனை நிருபர்கள் உயிரை பணயம் வைத்து செய்திகள் சேகரித்து தருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்வதும் நல்லது. 

தர்மம் என்றால் என்ன? 

விடை தெரியா கேள்விகள் பல ஊருக்குள், உலகத்துக்குள் உலாவி வருவது மிகவும் துரதிர்ஷ்டமான விசயம். 


Tuesday 5 July 2011

தமிழ்மண சேவை நிராகரிப்பு

பல வலைத்தளங்களை அடையாளப்படுத்தி வரும் தமிழ்மண சேவை மிகவும் பாராட்டுக்குரியது. 

பல வலைப்பூக்கள் பிரபலமாக இந்த திரட்டிகள் மிகவும் உபயோகமாக இருந்து இருக்கின்றன. 

ஆனால் பல நல்ல வலைதளங்கள், வலைப்பூக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதில்லை. நல்ல எழுத்தினை அனைவரும் தேடி கண்டு கொள்வார்கள் என இருந்து இருக்கலாம்.

இப்பொழுது கட்டண சேவையும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த நேரத்தில் தமிழ்மணபதிவுப்பட்டை எனது வலைப்பூவில் இயங்கவில்லை. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. 

இத்தனை நாள் ஆதரவு தந்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.