Showing posts with label ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1. Show all posts
Showing posts with label ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1. Show all posts

Monday 12 December 2011

ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 1

ஓம் நமோ நாராயணாய நமஹ 

நீ என் மிக அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை.

ஒரு விசயத்தை பற்றி எழுதும்போதோ, அது குறித்து பேசும்போதோ, போதிய ஞானம் இல்லாத பட்சத்தில் அந்த விசயம் குறித்து மிகவும் தெளிவுபட எழுதவோ, பேசவோ இயலாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் நான் இருக்கிறேன். தமிழ் மொழியை தவிர நான் கற்று கொண்ட பிறிதொரு மொழி ஆங்கிலம் மட்டுமே. இந்தி மொழியை சிரத்தையுடன் ஒரு நண்பரின் உதவியால் கல்லூரி காலங்களில் கற்றுகொண்டாலும், தொடர்ந்து கற்று கொள்ளாத காரணத்தினால் இந்தி மொழி மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே ஆகிவிட்டது.

இந்த ஸ்ரீமத் பாகவதம்தனை எடுத்து வாசிக்கும் போது அதில் இருக்கும் மொழி பரிச்சயப்பட்டது போன்றே தென்பட்டது. எனினும் எனது சிற்றறிவுக்கு வாசிப்பது அத்தனை எளிதாக இல்லை. மேலும் இறைவன் எனும் ஒரு விசயத்தில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டதால் வாசிக்கும்போதே ஏதேதோ கேள்விகள் எழுந்து கொண்டே இருப்பதை தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் ஸ்ரீமத் பாகவதம் மட்டுமே எழுதிட விழைகின்றேன். அன்பர் ஒருவர் ஸ்லோகங்கள் கேட்டதால் அதையும் எழுதிவிட வேண்டுமென முயற்சியுடன் எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க.

இந்த முதல் அத்தியாயத்தில் மொத்தம் இருபத்தி மூன்று ஸ்லோகங்கள் இருக்கின்றன. இந்த அத்தியாத்தில் சௌனகர் என்பவர் சூத முனிவரிடம் தங்களுக்கு பகவான் பெருமையை பற்றி சொல்லுமாறு கேட்பதாகவே அமைந்து உள்ளது. இதில் இந்த ஸ்ரீமத் பாகவதம்தனின் பெருமையை சௌனகர் சொல்கிறார். எப்படியாவது இந்த ஸ்ரீமத் பாகவதம் தனை கேட்க வேண்டும் எனும் ஆவலில் நிறையவே புகழ்ந்து தள்ளுகிறார். அதோடு மட்டுமின்றி தனக்கும் சில விசயங்கள் தெரியும் என்பதை காட்டி கொள்கிறார். அதாவது தனது ஆர்வத்தை பறைசாற்றுகிறார். இந்த ஸ்ரீமத் பாகவதம் தனை போன்ற புராணங்களை தொகுத்தவர் வியாச முனிவர் என்பது எனது அறிவுக்கு தெரிந்த தெளிவு.

இந்த ஸ்லோகங்களுக்கு நேரடியாய் அர்த்தம் கொள்வது என இருந்தாலும் மொழி பெயர்ப்பு என வரும்போது என்னைப் பொறுத்தவரை மூல ஜீவன் ஒரு வகையில் கொல்லப்படத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு பகவான் என சொல்லப்படும் ஸ்லோகங்களில் மஹா விஷ்ணு எனும் மொழி பெயர்ப்பு சரியானதா என கேள்வி எழுந்தாலும் இங்கே மஹா விஷ்ணு போற்றபடுவதால் அது சரியாகப்படலாம். மேலும் எழுதியவரின் மனநிலை நாம் கொள்வது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.

இப்பொழுது எனக்கு சௌனகரின் வரலாறோ, சூத முனிவரின் வரலாறோ, வியாச முனிவரின் வரலாறோ முழுமையாக தெரியாது. காலப்போக்கில் அவர்கள் பற்றி நான் அறிய நேரிடலாம். அப்பொழுது அவர்கள் யார் என்பது குறித்து எழுதுகிறேன். மேலும் மூன்று வகை குணங்கள், அஷ்டமா சித்திகள் போன்ற எனது அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்கள் எல்லாம் நான் இப்பொழுது பேசப் போவதில்லை. இப்போதைய எனது நோக்கம் ஸ்ரீமத் பாகவதம் எழுதுவது மட்டுமே. ஒவ்வொரு ஸ்லோகத்தையும் வாசித்து, அதற்கான தமிழ் பொழிப்புரையை வாசித்து புரிந்து கொள்வது சிரமமான காரியமாகவே இருக்கிறது. அத்தியாயங்களில் எனக்கு எழுந்துள்ள கேள்விகள் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன.

மொத்த ஸ்லோகங்களையும் கடைசியாக தந்துவிடுகிறேன். தமிழை தொடர்ந்து வாசித்து வர தடை இல்லாமல் இருக்கும், அதைப் போலவே ஸ்லோகங்கள் வாசிக்கவும் தடை இல்லாமல் இருக்கும்.

                         ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 1 


1  ஆகாயம் முதலிய கார்ய வஸ்துகளில் ஸ்த்ரூபியாய் தொடர்வதாலும், ஆகாஷபுஷ்பம் முதலிய அகார்யாவஷ்துகளில் தொடராததாலும் எந்த பரமாத்மாவிடமிருந்து இவ்வுலகின் உற்பத்தி, வளர்ச்சி, நாசம் இவைகள் உண்டாகின்றதோ, ஸ்ர்வக்ஞரும் சுயமாகவே பிராகசிப்பவருமான பரமாத்மா ஆதிகவியின் பொருட்டு எந்த வேதத்தில் மகாகவிஞரும் மோட்சத்தை அடைகின்றனரோ, அந்த வேதத்தை மனதினால் உணர்த்தினரோ, தேஜஸ், ஜலம் பிருத்வி இவைகளையுடைய ஒன்றில் மற்றொன்றின் தோற்றம் போல் எந்த பரமாத்மாவிடத்தில் மூன்று வகை குணங்களுடன் பூதம், இந்திரியம் தேவதை என்றவைகளின்  ஸ்ருடியானது சத்தியமாக தோன்றுகிறதோ, பேரொளியால் எப்பொழுதும் போக்கடிக்கபட்ட மாயா தீத காரியங்களை உடையவரும், ஷ்த்யஸ்வரூபியுமான அந்த பராமத்மாவை தியானஞ் செய்வோம்.

2   ஸ்ரீமன் நாராயணரால் முதலில் உபதேசம் செய்யப்பட இந்த பாகவதத்தில் பொறாமையற்ற மக்களுக்காக, அடியோடு அகற்றப்பட்ட கபடத்தையும், பலா பிசிந்தியையும் உடையதான மிக உயர்ந்ததான பாகவத தர்மம் கூறப்பட்டு இருக்கிறது. பரமார்த்தமானதும், சேமத்தை அளிப்பதும், அத்யாத்மிகம் முதலிய தாபங்களை வேருடன் அகற்றுவதுமான பரமாத்மவஷ்துவானது அறிய முடிந்ததாக இருக்கிறது. மற்ற சாஸ்திரங்களில் பரமாத்மா இருதயத்தில் உடனே நிலைநிறுத்தபடுகின்றாரா என்ன, ஆனால் இந்த ஸ்ரீமத் பாகவத்திலோ, கேட்க விருப்பம் கொண்டவர்களின் இருதயத்தில் உடனே நிலை நிறுத்தபடுகிறார்.

3  ரசிக்கும் தன்மை உடையவர்களே, ரஷவிஷேசத்தை அறிவதில் சிறந்தவர்களே, வேதமாகிய கற்பகவிருட்சதினில் இருந்து சுக முனிவருடைய பூமியில் விழுந்ததும், அமிர்த துளிகளோடு கூடியதும், ரஸஸ்வரூபமாக உள்ளதுமான ஸ்ரீமத் பாகவதம் எனும் பலம் தனை மோட்ச சாம்ராஜ்யம் அடையும் வரை அடிக்கடி அனுபவியுங்கள்.

4  நைமிஸ்ரன்யத்தில் சௌனகர் முதலான மஹாரிஷிகள் சுவர்க்கத்தை அடைவதன் பொருட்டு ஆயிரம் ஆண்டு அனுஸ்டிக்கதக்க யாகத்தை செய்தார்கள்.

5 ஒரு சமயம் ப்ராதகாலத்தில் அந்த மகரிஷிகளே நித்யனநமித்தக காரியங்களின் பொருட்டு ஹோமம் செய்யப்பட அக்னியை உடையவர்களாய் நன்கு உபசரிக்கப்பட்டு அமர்ந்திருப்பவரான சூத மஹரிஷியை அன்போடு கூடிய மேற்சொல்லப்போவதை கேட்டனர்.

6  பாபமற்றவரான உம்மில் பாரதம் முதலான இதிகாசஙகளோடு கூடிய புராணங்களும் எந்த தர்மசாஸ்திரங்களுண்டோ அவைகளும் கற்கபட்டன மேலும் உபதேசிக்கப்பட்டன.

7 புராணம் முதலியவற்றை அறிந்தவரும் சிரேஸ்டரான வியாச பகவான் எந்த இதிகாசம் முதலானவற்றை அறிந்தாரோ மற்ற நிர்குண ஸ்குணபராமங்களை அறிந்த மஹாரிசிகளும் அறிந்தார்களோ.

8 எல்லாவற்றையும் வியாசாதி மகரிஷிகளின் அனுக்ரகத்தால் சாதுவான சூத மகரிசே நீர் உள்ளது உள்ளபடி அறிகிறீர். பிர்யமுள்ள சீடனுக்கு ஆசாரியர்கள் பரம ரகசியத்தையும் கூட சொல்வார்களன்றோ

9 தீர்க்கமான ஆயுளை உடையவரே, புராணங்களில் மக்களுக்கு நித்ய ஸ்ரேயஸ்ஷாக உள்ள யாதொன்று தாங்களால் நிச்சயிக்கப்பட்டதோ அதை விரைவில் எங்களுக்கு சொல்வதற்கு யோகயராகிறீர்கள்

10 சாதே, இந்த யுகத்தில் ஜனங்கள் அநேகமாக அற்பமான ஆயுளை உடையவர்களாகவும் சோம்பல் உள்ளவர்களாகவும் மிகவும் மந்தமான அறிவை உடையவர்களாகவும் தீ வினைப்பயன் உடையவர்களாகவும் வியாதிகள் பீடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்களன்றோ

11 முறைகளுடன் அனுஷ்டிக்க வேண்டிய கர்மாக்கள் இருக்கின்றன. அதைப் போல கேட்கவேண்டிய சாஸ்திரங்கள் அனேகம இருக்கின்றன. மகரிசே இவைகளில் யாதொன்று சாரமானதே எதனால் புத்தியானது நன்கு அமைதி அடையுமோ தங்களது அறிவுத்திறத்தால் அடுத்து கேட்பதில் சிரத்தையோடு கூடிய எங்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

12 சூத மகரிசே உமக்கு நன்மை உண்டாகட்டும். பக்தர்கெல்லாம் பதியான பகவானை எந்த காரியத்தை விருப்பங் கொண்டு வசு தேவருக்கு மனைவியான தேவகியிடத்து தோன்றினதை நீர் அறிவீர்.

13 சூத மகரிசே அதனை கேட்க விருப்பமுள்ளவர்களான எங்களுக்கு எடுத்து சொல்வதற்கு யோக்யராகிறீர். பகவானின் அவதாரமானது சகல ஜீவராசிகளினுடைய சேமத்தினை பொருட்டும் காப்பாற்றுதலின் பொருட்டும் உள்ளது.

14 காலவசத்தை அடைந்து மிக பயங்கரமான சம்சார பந்தத்தில் ஈடுபட்டு கொண்டு பகவானின் நாமத்தை சொல்கிறவனை கொண்டு அந்த சம்சார பந்தத்தில் இருந்து உடனே விடுபடுகின்றானோ அந்த நாமாவிற்கு பயமானது பயப்படுகிறது.

15 சூத மகரிசே அமைதியை அடைந்தவர்களும், பகவானின் பாத சேவையை அடைந்தவர்கள் மகரிசிகளால் தொடப்பட்டவர்கள் உடனே பரிசுத்தம் ஆகின்றனர். கங்கை ஜலத்தை சேவிப்பதினாலும் பரிசுத்தமாகுகிறது.

16 மஹாநீயர்களால் சோஸ்த்திரம் செய்யப்பட்ட வியாபாரத்தை உடைய மஹா விஷ்ணுவால், கலியில் தோன்றும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் கீர்த்தியை பரிசுத்தம் ஆக விரும்பும் எவர் தான் கேட்கமாட்டார்.

17 தனது லீலைகளால் பிரம்மாவாகவும், ருத்ரனாகவும் உள்ள சொரூபத்தை தரிசிக்கின்ற அந்த பகவானுடைய பெரியவகைளும் நாரத மகரிஷிகளினால் எடுத்து சொல்லபட்டதுமான செய்கைகள் எங்களுக்கு சொல்லுங்கள்.

18 அறிவில் சிறந்தவரே தனது லீலா விநோதத்தினால் இஷ்டப்படி பல்வேறு லீலைகள் செய்பவரான மஹா விஷ்ணுவின் நன்மையை தரத்தக்க மாய அவதார கதைகளை பிறகு சொல்லலாம்.

19 நாங்களோவேனில் பகவானுடைய ப்ராக்ராமங்க்களை கேட்பதில் திருப்தி அடையோம். எந்த பகவானின் பண்புகள் கேட்கின்றவர்களை ரசத்தை அறிந்தவர்களும் ஒவ்வொரு கணமும் கேட்க கேட்க இனிமை அளிக்க கூடியதாகும்.

20 மாய மனுஷன் ஆனவனும் அறியப்படாதவனும் இறைவன் கிருஷ்ணன் பலராமனோடு கூடியவராய் மனித சக்திக்கு அப்பாற்பட்ட வீர்யம் மிகுந்த செய்கைகள் செய்தார் அல்லவா.

21 கலியுகமானது வந்ததை அறிந்து இந்த விஷ்ணு சம்பந்தமான நைமிசாரன்யத்தில் நீண்ட யாக நிமித்தமாக உட்கார்ந்தவர்களால் மஹா விஷ்ணுவின் கதைகளை கேட்பதில் அடையப்பட்ட சந்தர்ப்பங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா.

22 மக்களின் சக்தியை அபகரிக்க கூடியதும், கடக்க முடியாததுமான கலியுகமாகிய கடலை கடக்க முயலுகின்றவர்களான எங்களுக்கு படகோட்டி போன்று நீர் காணப்படுகிறீர்

23 கர்மத்தை காப்பாற்றுபவரும் யோகிகளுக்கு ஈஸ்வரரும் பரமேஸ்வரரூபியான பரமாத்மா தற்போது தனது எல்லையை அடைந்த அளவில் யாரை சரணமாக அடைந்தது என சொல்லுங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------

1  ஜன்மாத்யஷ்ய யதொன்ஷ்வ்யாதிதர்ஸ்சர்தேஸ்வபிஜ்ஞ: ஸ்வராட் 
    தேனே ப்ரஹ்ம ஷ்தொய யா ஆதிகவயே முஹயந்தி யத் ஷூரேய
    தேஜோ வாரிம்ருதாம் யதா சூநிமயோ யாத்ரா த்ரிஷ்ர்கோ ம்ருஷா 
    தாம்நா ஷ்வென ஸ்தா நிரஸ்த குஹம் ஷ்த்யம் ப்ரம்தீமஹி 

2  தர்ம ப்ரோஜ்ஜிதகைதவோஷ்த்ர ப்ரமோ நிர்மத்ஸ்ராணாம் ஸ்தாம்
    வேத்யம் வாஸ்தவமத்ர வஸ்து ஸ்ரிவதம் தாபத்ரயோன்மூலம்
    ஸ்ரீமத்பாகவதே மகாமுனிக்ருதே கிம் வா பரைரீஷ்வர
    ஸத்யோ ஸ்ருத்யவருத்யதேஷ்த்ர க்ருதிபி ஆஷ்ரூஷிபிஸ்தத்நாத்


3  நிகமகல்ப தரோர்களிதம் பலம் ஷோமுகதம்ருதத்ரவ ஸ்ம்யுதம்
    பிபத பாகவதம் ரஷமால்யம் முஹீரஹோ ரஷிகா புவி பாவுகா   


4  நைமிஷேமுனிமிச சேத்ரே ருஷய சௌனகாதய
   ஸ்தரம் ஸ்வர்காய லோகாய ஸ்ஹஸ்ர ஸம மாஸத


5  த ஏகதா து முயை பராதர்ஹூதஹீதாக்யை 
   ஸ்த்க்ருதம் ஹூதமாஷீனம் பப்ரச்சுரிதமாதராத் 


6  த்வயா கழு புராணனி ஹேபதிஹாசாணி சாகை 
    ஆக்யாதான்யப்யத்தானி தர்ம ஷாஷ்த்ராணி யான்யுத 


7 யானி வேதவிதாம் ஸ்ரேஸ்டோ பகவான் பாதநாராயண 
   அன்யே ஸ முயை சூத பரவரா விதோ விது 


8 ஷித்த தவம் ஸௌமய தத்ஸ்ர்வம் தத்வதததநுக்ரஹாத்
    ப்ரூயு ஸ்நிக்தாஸ்ய சிஷ்யஸ்ய குரவோ குஹ்யமப்யுத 


9  தத்ர தத்ராஞ்ஜஸாஆயுஷ்மன்பவதா யத்விநிஷ்தம் 
    பும்சாமேகந்தத ஸ்ரேயஸ்தன்ன ஸ்ம்சிதுமர்ஹசி 


10 ப்ரயேனால்பாயுச ஸ்ம்ய காலவஸ்மின்யுகே ஜனா 
     மந்தா சீமந்தமதயோ மந்தபாக்யா ஹயுபத்ருதா 


11 பூரிணி பூரிகர்மாணி ஸ்ரோத்வயானி விபாகச 
     அத ஸ்தோ அதர யத்சாரம் சமுத் த்ருத்ய மநீசயா 
     ப்ரூஹி ந சரத்த தானானாம் யேனாத்மா ஸ்மப்ரஸீததி 


12 சூத ஜானாசி பத்ரம் தே பகவான் சாத்விதாம் பதி 
    தேவக்யாம் வசூதேவஷ்ய ஜாதோ யஸ்ய சிகீர்ஷ்ய 


13 தன்ன ஹோஹ்ரூதமான நாமார் ஹஷ்யங்கா நுவர்நிதம் 
     யஸ்யயாவதாரோ பூதானாம் சேமாயா ஸ பாவாய ச 


14 ஆபன்ன ஸ்மருதிம் கோராம் யன்நாம விவசோ க்ருணன் 
     தத ஸ்த்யோ விமுச்யேத யத்பிபேதி ஸ்வயாம் பயம் 


15 யத் பாதசம்ஸ்ரயா சூத முயை ப்ரஹமாயனா 
     ஸ்த்ய புநந்யுபசப்ருஸ்டோ ஸ்வர் துனயாபோ ஆனுசேவாய 


16 கோ வா பகவதஸ்தஸ்ய புண்யஸ்ளோகேட்யாக்ர்மண
      ஷீத்த்காமோ ந ஸ்ருனுயாத்யச கலிமலாபஹம் 


17 தஸ்ய கர்மான்யுதாராணி பரிகீதானி ஸ்ரீபி 
     ப்ரூஹி ந ஸ்ரத்ததாநாநாம் லீலயா ததத கலா 


18 அதாக்யாஹி ஹரோர்தீம்ன அவதாரகதா ஹீபா
     லீலா விததத ஸ்வைரமேஸ் வரஸ்யாத் ம மாயயா 


19 வயம் து ந வித்ருப்யம் உத்தமஸ் லோகவிக்ரமே 
      யஸ்ஸ்ருன்வதாம் ரசஞாநாம் ஸ்வாது ஸ்வாது பதே பதே 


20 க்ருதவான் கில வீர்யாணி ஸ்ஹ ராமென கேசவ 
     அதிமாத்யாணி பகவான் கூட கபடமானு 


21 கலிமாகதமாஜஞாய சேத்திர ஆச்மின்ன விஷ்ணுவே வயம் 
      ஆசிநா தீர்கஸ்தரேன கதாயம் ஸ்ஹநா ஹரே 


22 த்வம் ந ஸ்ந்நர்சிதோ தாத்ரா துஸ்தரம் னிஸ்திதீர்ததாம் 
     கலிம் ஸ்த்வ ஜரம் பும்சாம் கர்னதார இவார்நுவ 


23 ப்ரூஹி யோகேஸ்வர கிருஷ்ணா ப்ரஹமன்யே தர்மவர்மனி 
      ஸ்வாம் காஷ்டா மதுநோபேத தர்ம கம் ஹீரணம் கத