Showing posts with label கம்யூனிசம். Show all posts
Showing posts with label கம்யூனிசம். Show all posts

Monday 31 October 2011

கம்யூனிசமும் கருவாடும் - 7


 கம்யூனிசம் என்றால் என்ன, அது என்ன சொல்ல வருகிறது என்பது அத்தனை சிரமம் இல்லை. இந்த கம்யூனிசம் குறித்து ஒரு தளத்திலிருக்கும் விசயத்தை அப்படியே எழுதி, தேவையிருப்பின் மேற்கோளிட்டு காட்டுவேன், அதாவது திருடி எனது தளத்தில் பிரசுரித்து கம்யூனிச பிரச்சார பதிவாக இருக்க வேண்டாம் என்பதால் எனது எழுத்துகளின் மூலமே கொடுக்கிறேன். இந்த கட்டுரையின்  கடைசி அத்தியாயத்தில் அன்றைய தினத்தில் என்ன மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் பற்றி நினைத்தார்களோ அது குறித்த சிந்தனை இப்படியாக முடிகிறது. 

'கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவதில்லை.

முடிவாக, அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.'' நன்றி மார்க்சிஸ்ட் தளம்


இன்றைய அனைத்து கம்யூனிஸ்ட்கள் இதை எல்லாம் படித்து இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் எதற்காக கம்யூனிசம் ஆரம்பித்தது என்கிற அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு இவர்கள் எல்லாம் கம்யூனிசத்தில் இணைந்து இருந்தால் இவர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று பெருமிதப்பட்டு கொள்ளலாம். ஆனால் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொண்டு இவர்கள் பண்ணும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது. இதனால் உண்மையான கம்யூனிஸ்ட்களுக்கு அதாவது தங்களை தாங்களே அர்பணித்து கொண்டவர்களுக்கு, இவர்கள் அவப்பெயரைத் தேடி தந்துவிடுகிறார்கள். 

சமூக அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஆதரவு? இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் என அரசியல் கட்சிகள் ஆரம்பித்ததுதான் மிச்சம். மாவோயிஸ்ட், நக்சலைட், யிஸ்ட் என யிஸ்ட் என கூவியதுதான் மிச்சம். அதுவும் கேவலம், இந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும், அந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும் என நாய்படாத பாடு பட்டதை கண்டு கம்யூனிஸ்ட்கள் குறித்து நகைப்பு மட்டுமே மிஞ்சும். அதுவும் இந்த கம்யூனிஸ்ட்கள் தங்களது பைக்கு எத்தனை பைசா வரும்படி கிடைக்கும் என முதலாளிகள் அறைக்கு சென்று கை கட்டி பேசி வந்ததை பார்த்தது இருக்கிறேன். இதே கம்யூனிஸ்ட்கள் வெளிநாட்டு கூலிப்படைகளாக அலைந்து திரிவது கூட அவமானம். இவர்கள் இங்கே அமைப்பு நடத்த எவரோ பணம் தருகிறார்கள் எனும் குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்க கூடும். உழைக்காமல் பணம் எப்படி வரும்? இவர்கள் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது அத்தனை கஷ்டமில்லை. இவர்களைப் போன்ற ஒரு சிலரால் மொத்த கம்யூனிசத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. 

இன்றைய சூழலில் முதலாளித்துவத்தை வெறுக்கின்ற பலர் இருந்தாலும் இந்த கம்யூனிசம் போர்வைக்குள் செல்ல மறுக்கிறார்கள். முதலாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கம். கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கம். நானும் பாட்டாளி வர்க்கம் தான். நானும் கூலி வேலைதான் செய்கிறேன். எனது உழைப்பிற்கு அதிகமோ, குறைவோ மாதம் மாதம் ஊதியம் பெற்று கொள்கிறேன். எனது உழைப்பில் கிடைக்கும் வரவுதனில் பங்கு எதுவும் எனக்கு கிடையாது. ஆனால் என்னை பாட்டாளி வர்க்கம் என சொல்லக்கூடாது, என்னை நடுத்தர வர்க்கம் என சொல்ல வேண்டும் என பிரிக்கிறார்கள். 

ஒரு தொழிற்சாலை வைத்திருப்பவர் முதலீடு செய்கிறார். இந்த முதலீட்டு பணம் அவரது கைகளில் இருந்து வருகிறது, அல்லது எங்காவது கடன் வாங்குகிறார். இந்த முதலீட்டு பணத்தையோ, அல்லது அவரது உழைப்புக்கு  அவர் உபயோகபடுத்தும் அறிவையோ இந்த பாட்டாளி வர்க்கத்தினர் பகிர்ந்து கொள்வதில்லை. இவர்கள் தங்கள் உடல் உழைப்பை மட்டுமே தருகிறார்கள். இதையெல்லாம் மறந்து இவர்கள் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது கம்யூனிசம். 

முதல் அத்தியாயத்தில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த கம்யூனிச அடிப்படை சிந்தனையான அனைவரும் பொது என்கிற கொள்கையானது ரஷ்யாவில் நிலம் பொதுவுடைமை, அயர்லாந்து போன்ற நாடுகளில் பொதுவுடைமை நிலம் என சில குழு சமுதாயங்கள், கிராம சமுதாயங்கள் எல்லாம் இருந்து இருப்பதாக பல அறிஞர்கள் வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். அதற்கு பின்னர் இந்த சமுதாய கட்டமைப்புகள் ஒழிந்து ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட தொடங்கினர். இன்றைய நிலைமையில் இந்த வேறுபாடு அதிகமாகி பாட்டாளி வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டதோடு, போராட்டத்தில் தோற்று போயினர். இந்த நிலைமை கார்ல் மார்க்ஸ் காலத்தில் அதிகமாகவே இருந்து இருக்கிறது. அவர் காலம் போகட்டும், ஆனால் இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் குடும்பம் எப்படி தெரியுமா இருக்கிறது? இவர்களின் நிலம் எல்லாம் வெவ்வேறு. இவர்கள் வேலைக்கு ஆள் வைத்து கொள்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் என கத்துகிறார்கள். பாவம் கார்ல் மார்க்ஸ். 

இந்த அத்தியாயத்தில் எப்படி பல வர்க்கங்கள், அதன் உட்பிரிவுகள் இருந்திருக்கிறது என மத்திய காலம், ரோம பேரரசு காலம் என குறித்து வைக்கிறார். நிலபிரபுத்துவம் அழிந்து நவீன முதலாளித்துவம் வந்தாலும் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டும் அதற்குரிய புது நிலைமைகளை உருவாக்கி வந்துள்ளதாகவே மார்க்சும், இங்கெல்சும் ஆதங்கபட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்று வேண்டாமா என எதற்கு நாம் சிந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்கள். 

எப்படி இந்த முதலைத்துவம் அதாவது முதலாளித்துவம் வளர்ந்தது என்பதை கோடிட்டு காட்டுகிறார் மார்க்ஸ். ஒரு அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது, கடல்வழி அதாவது நன்னம்பிக்கை வழி பயணம் என பிற நாடுகளுக்கு செல்லும் வழியே இந்த பண்ணையடிமையிலிருந்து வெளியேறிய நகரத்தார் பலருக்கு இந்த முதலாளித்துவ கூறுகள் வளர்க்க வழிபோட்டது. அதோடும்ட்டுமில்லாமல் கிழக்கிந்திய, சீன சந்தைகள் என உலக பொருளாதார இயக்கமே இந்த சீர்குலைவுக்கு அடிகோலிட்டது என குமுறுகிறார் மார்க்ஸ். 

கைவினை குழுமம் இந்த சந்தைகளுக்கு ஈடுகட்ட முடியாததால், பட்டறை குழுமம் உருவானது. ஆனால் இந்த தனிதனி பட்டறைகள் தங்களது உழைப்பில் பிரிவினை கொண்டாடின. இந்த பட்டறைகளால் கைவினை குழுமம் நலிந்தது. இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது எப்படி ஒரு மனித சமூகம் தொழில்வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள புதிய புதிய வழிமுறையை கண்டது என்பதை குறிப்பிட்டு அன்றைய காலத்தில் எப்படி இந்த தொழில்முறை உருவாகின என்பதை விளக்குகிறார்கள் இருவரும். இந்த பட்டறை தொழில் ஈடுகொடுக்க முடியாத காரணத்தினால் நீராவி, எந்திரங்கள் எல்லாம் உருவானது. கைவினை தொழிலாளிகள் பாட்டாளி வர்க்கத்தினர். அதற்கு அடுத்து பட்டறை தொழில் வைத்திருந்தவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். அதையெல்லாம் தாண்டி இந்த எந்திரங்கள் எல்லாம் வைத்து தொழிலில் புரட்சி செய்தவர்கள் நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர். 

சந்தை புரட்சியை ஈடுகட்ட தொழிற்புரட்சி உருவானது. அந்த தொழிற்புரட்சி தான் கம்யூனிசம் கருவாடாகிப் போனதற்கு காரணம். பொதுவாக ஒரு பொருளை உருவாக்கினால் அந்த பொருளானது பிற நாடுகளுக்கு பிற இடங்களுக்கு விற்பனைக்கு செல்ல வேண்டும், அதற்கு போக்குவரத்து மிகவும் அவசியம். கழுதையிலும், குதிரையிலும், மாடுகளிலும் என கட்ட வண்டி, குதிரை வண்டி என உருவாக்கி இருந்த காலம் போய், ரயில், கப்பல் போக்குவரத்து என தொடங்கியதால் இந்த உலக சந்தையில் முதலாளிகள் அளப்பரிய வளர்ச்சியை அடைந்தார்கள். 

இப்படியாக அந்த முதலைத்துவம் பற்றி மார்க்சும், இங்க்கேல்சும் கோடிட்டு காட்டுகிறார்கள். இந்த முதலைத்துவம் பல வர்க்கங்களை பின்னுக்கு தள்ளியது. அதோடு அரசியலும் வளர்ச்சி அடைந்தது, ஆங்காங்கே போராட்டமும் வெடித்தது. மேலும் இந்த அத்தியாயம் பல விசயங்களை அலசுகிறது. அதனை அடுத்து பார்ப்போம். 

இப்பொழுது உங்களுக்குள் நீங்கள் கேட்க வேண்டிய ஒரு கேள்வி.

பிற்போக்காளர்கள் யார்? முற்போக்காளர்கள் யார்? 

முற்போக்கு சிந்தனை உடையவர்கள் எல்லாம் முதலாளிகள். பிற்போக்கு சிந்தனை உடையவர்களே பாட்டாளிகள். அந்த பாட்டாளிகளை சூறையாடி கொண்டு வருகிறோம். வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்தது எவரின் குற்றம்? அந்த வளர்ச்சிக்கு துணையாய் நின்றது பாட்டாளிகளின் குற்றமா? உழைத்தால் மட்டுமே உணவு என்கிற நிலை இருந்ததால் உழைக்காமல் உயிர் துறக்க பாட்டாளிகளின் உயிர் ஒன்றும் போராளிகளின் உயிர் இல்லை. போராளிகள் எவரும் நிலத்தில் உழைத்து பணம் சம்பாதித்ததை வரலாறு குறிக்கவில்லை. இவர்கள் பாழாய் போன பாட்டாளிகளின் மிச்சம் மீதி இருந்த உழைப்பின் பலனையும் சுரண்டி தின்றார்கள். இதில் பாட்டாளிகளுக்கு பெருமை வேறு. எங்களுக்காக போராடுகிறார்கள் என. இந்த போராட்ட புரட்சிகர இயக்கம் தொடங்குவதில் பல காலம் தொலைந்தது என்கிறார் கார்ல் மார்க்ஸ். அதன் காரணமாகவே அவர் தொழிலாளர்களை ஒன்று கூட சொன்னார். போராளிகளை அல்ல. 

இது போன்ற சமூக சீரழிவு தொடங்கியபோது தங்களது நிலைமையை உணராமல் அதற்கு அடிபணிந்து நின்றது எவர் குற்றம்? உழைப்பை சுரண்டுகிறார்கள் என்கிற உணர்வே இல்லாம் வாழ்ந்த அவர்களுக்கு யார் இருந்தார் வழிகாட்டியாய், அல்லது இன்றும் எவர் இருக்கிறார் வழிகாட்டியாய். ஐம்பது ரூபாய்க்கு சம்பாதிக்க வேண்டியது, நாற்பது ரூபாய்க்கு தண்ணி அடிக்க வேண்டியது, பத்து ரூபாய்க்கு சீட்டு ஆட வேண்டியது. இப்படி தங்கள் குடும்பத்தின் மேன்மைக்கென உழைக்காமல், தங்களை தாங்களே அழித்து கொள்ள உதவிய பாட்டாளிகள் நிலைமையை தனது வசமாக்கி அரசியல் கட்சி அமைப்புகள் ஆடும் ஆட்டம் எத்தனை. தங்களுக்கு தாங்களே தலித் என்று ஒரு பட்டம் வேறு. சிறுமைபடுத்தி கொள்ளாதீர்கள். நாங்கள் எல்லாம் தலித் இல்லை, நாங்கள் எல்லாம் மனிதர்கள் என சிந்தியுங்கள். இந்த போராட்டத்துக்குதான் கார்ல் மார்க்ஸ் கூப்பாடு போட்டார். அதாவது முதலாளிகள் அழிக்கப்பட வேண்டுமென்பது அனைவருமே உழைக்கவேண்டும் என்பது. அனைவருமே பலன் அடைய வேண்டும் என்பது. 

தலித் என்பவரோ, தாழ்த்தப்பட்டவரோ தனக்கு தகுதி இல்லாத நிலையினை, தனது குல தகுதியால் பெற்று கொள்வது என்பதை கம்யூனிசம் ஒருபோதும் ஆதரிப்பது இல்லை. (தொடரும்). 

Tuesday 9 November 2010

கம்யூனிசமும் கருவாடும் - 6

கம்யூனிசமும் கருவாடும் 1

கம்யூனிசமும் கருவாடும் 2

கம்யூனிசமும் கருவாடும் 3

கம்யூனிசமும் கருவாடும் 4

கம்யூனிசமும் கருவாடும் 5

ஜெர்மன் மொழி கற்று கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் உண்டு. ஜெர்மன் மொழியில் பல விசேசங்கள் உண்டு என எனது கற்பனை அவ்வப்போது சொல்லிக்கொள்ளும். இப்படி ஒன்றை குறித்த கற்பனையானது உண்மைதனை ஒழித்துவிடும் அளவுக்கு வீரியம் மிக்கது என்பதை எவர் அறிவர்? ஆனால் கற்பனைகளில் உலகம் சஞ்சாரம் செய்வது உலகம் தோன்றிய முதல் நாளில் இருந்து இருந்து கொண்டே இருக்கிறது. உண்மை என ஒரு விசயம் குறிப்பிடப்பட்டாலும் கற்பனை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கம்யூனிசம் சித்தாந்தம் முதலில் ஜெர்மன் மொழியில் தான் வெளியிடப்பட்டது. மொழி பெயர்ப்பு என வரும்போது மூல நூலின் ஜீவன் தொலைந்து விடுவதாகவே கருதுவேன். இதன் காரணமாக மொழி பெயர்ப்பு நூல்களை படிக்கும் போது அத்தனை சுவாரஸ்யம் என்னிடம் இருப்பதில்லை. மேலும் ஒரு விசயத்தை அப்படியே மொழி பெயர்ப்பதை காட்டிலும் சொல்லப்பட்ட விசயத்தை புரிந்து கொண்டு அவரவர் சிந்தனையின் பொருட்டு எழுதும் விசயங்கள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை இந்த கம்யூனிச சித்தாந்தத்தில் கைகொள்வது சரியாகுமா என தெரியாது எனினும் மொழிபெயர்ப்பு என்கிற அஸ்திரத்தின் மூலம் மார்க்சும், இங்கெல்சும் என்ன சொல்ல வந்தார்கள் என்பதை திரித்து விடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருக்கிறது. ஏதேனும் இந்த கட்டுரையில் தவறு நீங்கள் கண்டால் அது எனது தவறுதானே அன்றி நிச்சயம் மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் அவர்களின் தவறு அல்ல என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறேன்.

முகவுரை

பொதுவாகவே முகவுரை எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் சொல்ல வரும் விசயத்தின் முழு சாராம்சத்தையும் சில வரிகளில் சொல்லி முடித்து விட வேண்டும். இப்படிப்பட்ட கட்டுப்பாடு தேவையில்லை எனினும் முகவுரை ஒரு குறிக்கோளினை தெள்ள தெளிவாக புரியும் வண்ணம் அமைந்துவிடுதல் மிகவும் சிறப்பு. அப்படித்தான் இங்க்கேல்சும், மார்க்சும் தொடங்கி வைத்து இருக்கிறார்கள்.

'ஒரு பூதம் மொத்த ஐரோப்பாவையும் பயமுறுத்தி கொண்டிருக்கிறது. அது கம்யூனிசம் எனும் பூதம். இந்த பூதத்தை முறியடித்து விட பழைய ஐரோப்பா மொத்த சக்திகளை தெய்வீக உடன்பாடு என சேர்ந்துள்ளது. அவை போப், ட்சார் , மேட்டேர்நிச், கிசாட், பிரான்சு பழமைவாதிகள், ஜெர்மன் காவல் மற்றும் உளவாளிகள்.'


பதவியில் இருக்க கூடியவர்கள் அவர்களுக்கு எதிர் அணியில் இருப்பவர்களை கம்யூனிஸ்ட்கள் என குற்றம் சுமத்தாமல் இருப்பது எதற்கு? கம்யூனிஸ்ட்கள் குற்றவாளிகள் என சொல்வதையும், கம்யூனிஸ்ட்களின் எதிரிகளை எதிர்க்கும் நிலை எதிர் அணியில் இல்லாமலிருப்பது எதற்கு?.


இந்த விசயங்களிலிருந்து , இரண்டு விசயங்கள் புலப்படுகிறது


1. கம்யூனிசம் ஒரு சக்தி என்பதை அனைத்து ஐரோப்பிய சக்திகளும் அங்கீகரித்து உள்ளது 


2. கம்யூனிஸ்ட்கள் தங்களது எண்ணங்களை, குறிக்கோளினை, செயல்பாடுகளை உலகின் கவனத்திற்கு கொண்டு வருவது இதுதான் சிறந்த நேரம். சின்னஞ்சிறு கதை கொண்ட கம்யூனிச பூதத்தின் சித்தாந்தம் அந்த அமைப்பு பற்றி சந்திக்கும் தருணம் இது' 


 யார் இந்த ட்சார், மேட்டேர்நிச்,  கிசாட் .

 ட்சார் எனப்படுவர் கிறிஸ்துவம் அல்லாத ஆளுமைவாதிகள். இவர்கள் பல்கேரியா, போலந்து, ரஷ்யா, செர்பியா போன்ற நாடுகளில் அரசு அமைத்து கொண்டு ராஜ பரம்பரையாக வாழ்பவர்கள். இவர்கள் கம்யூனிசத்துக்கு கட்டாயம் எதிரியாகத்தானே இருக்க இயலும்! இந்த வார்த்தை கூட சீசர் எனப்படும் பேரரசர் பெயரிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மேட்டேர்நிச் என்பவர் ஆஸ்திரியாவில் வாழ்ந்த ஒரு அரசர். அவர் ஒரு ராஜதந்திரி என அழைக்கப்பட்டவர். நெப்போலியனுடன் இணக்கம் கொண்டிருந்தவர். இவர் கம்யூனிசத்துக்கு எதிரானவர் என குறிப்பிட காரணம் இவரின் ராஜ தந்திர செயல்கள். ஆனால் இந்த கம்யூனிச சித்தாந்தம் வெளியிடப்பட்ட ஆண்டு ஆஸ்திரிய போராளிகளால் அரசவையினை துறக்க வேண்டி வந்தது.

கிசாட் பிரான்சு நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தவர். மிகவும் திறமை வாயந்தவர் எனினும் இவரது செயல்பாடுகள் மக்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி இருந்தது.

இந்த முகவுரையில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது என்னவெனில் அரச பரம்பரை மற்றும் தனி மனித ஆட்சி என்பது முற்றிலும் ஒழித்திட கம்யூனிசம் வழி செய்யும் என்பதுதான்.

ஆனால் நடந்தது என்ன? கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடத்தினார்கள்  ஸ்டாலின் மற்றும் மாவோ ஜேடாங் போன்ற மாபெரும் தலைவர்கள் என போற்றப்படுபவர்கள். ஸ்டாலின் என்பவரால் கம்யூனிசம் நிச்சயமாக ஒரு பெரும் சக்தி என நினைத்து கொண்டிருந்தோருக்கு அவரது அடக்குமுறை செயல்பாட்டினை அப்படியே செயல்படுத்துவது என்பது குதிரை கொம்பாகத்தான் இருந்தது. ஸ்டாலின் இல்லையென்றால் ரஷ்யா சின்னாபின்னமாகி என்றோ போயிருக்கும் என்போர் உளர்.

உணவுக்கே தட்டழியும் மனிதர்களிடம் உணவுக்கு வழி செய்ய காட்டப்படும் வழிகள் எதுவாக இருப்பினும் ஏற்றுக்கொண்டு செய்வார்கள். அடிமைகளாக வாழ பழகி கொண்ட மக்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் அன்றைய ரஷ்யா இருந்தது. அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்டாலின். மாபெரும் வெற்றி பெற்ற ஸ்டாலினை பார்த்து சூடு போட்ட நாடுகள் பல உண்டு. ஆனால் என்னவொரு துரதிர்ஷ்டம், தழும்புகள் மட்டுமே பிறநாடுகளுக்கு மிச்சம். அந்த தழும்பு இப்போது ரஷ்யாவுக்கும் சொந்தம் எனும்போது வருத்தம் மேலிடத்தான் செய்கிறது.

அடுத்து முதல் அத்தியாயம் தொழிலாளிகளும், முதலாளிகளும்.  மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் எதற்கு அவசியம் என்பதற்கான விசயங்களை அலசி ஆராய்ந்த பின்னர் எழுதியதாக இருக்கும். கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படை விசயமாகவே இந்த அத்தியாயம் பார்க்கப்படுகிறது.

(தொடரும்)

Wednesday 3 November 2010

கம்யூனிசமும் கருவாடும் - 5

கிராக்கஸ் பெபியுப். இவருடைய வாழ்நாள் காலம் முப்பத்தி ஏழு வருடங்கள் மட்டுமே. இவருடைய சிந்தனைகள் எல்லாம் கம்யூனிசம் என்றோ சோசியலிசம் என்றோ இவரது காலத்தில் குறிக்கப்படவில்லை. இந்த கம்யூனிசம் என்ற வார்த்தை பின்னாளில் தான் வந்தது. ஆனால் இந்த கம்யூனிச சிந்தனைகள் பல்லாண்டு காலமாக மனிதர்களில் மனதில் உலவிக் கொண்டுதான் இருந்தது.

 உடோபியா எனும் ஒரு கற்பனை சமூகத்தை, நிலப்பரப்பை  தாமஸ் மோர் எழுதிய வருடம் 1516. இந்த சமுதாயம் அமையக்கூடிய சாத்தியமற்ற சூழலே இப்போது மட்டுமல்ல, எப்போதும் நிலவுகிறது. இந்த தாமஸ் மோர் எனக்கு அறிமுகமானது எனது தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் தாரா கணேசன் அவர்கள் பேசியதை கேட்டபோதுதான்.  உடோபியா என்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் என்னுள் எழுந்த சிந்தனைகளில் சில உடோபியாவில் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தது உண்டு. இதே போல் பலரும் உலகில் சிந்தித்து கொண்டிருக்க கூடும். தாமஸ் மோர் எழுத்தில் வைத்தார், பலர் எண்ணங்களை தங்களுடன் புதைத்து கொண்டார்கள் என்றே கருதுகிறேன். தாமஸ் மோர் அவர்களுக்கு முன்னாலேயே இதே சிந்தனைகளை கொண்டிருந்தவர்கள் இருந்திருக்கிறார்கள், அவருக்கு பின்னால் வந்தவர்களும் அதே சிந்தனைகளை கொண்டிருக்கிறார்கள். அதிலும் சிலர் எழுதவும் செய்து இருக்கிறார்கள்.

உலகம் எல்லாம் ஒரே நாணயம். உலகம் எல்லாம் ஒரே மதம். உலக நாடுகள் எல்லாம் ஒன்றே ஒன்று என்கிற கற்பனை கோட்பாடு, எந்த வீடுகளுக்கும் கதவுகளே இல்லாது இருத்தல், உலக நாடுகள் பிரிவினை பாராட்டாது ஒன்றாகவே இருத்தல் போன்ற பல கற்பனைகள் மனதில் வைத்தும் அதை எப்படியாவது உலகில் நிலைநிறுத்திட வேண்டும் எனும் முயற்சி அற்ற  எண்ணங்கள் என்னுள் எழுவது உண்டு. ஆனால் இவை எல்லாம் சாத்தியமற்று போய்விடும் என்கிற நிதர்சன எண்ணங்களும் என்னுள் இருப்பதுண்டு. இனி வரப்போகிற உலகத்தில் இதுபோன்ற எண்ணங்கள் எல்லாம் சாத்தியமா? காலம் பதில் சொல்லும் என சொல்வது அவசியமற்றதாகிறது. உலகம் தோன்றியபோது எந்த நாகரிகம் வீட்டினை கட்டி இருந்தது? எந்த நாகரிகம் பணத்தை அறிந்து இருந்தது? எந்த நாகரிகம் தங்களை பிரித்து வைத்து கொண்டிருந்தது? காடுகளில் சுற்றி திரிந்தவர்கள் தானே இந்த மனிதர்கள். இன்று கம்யூனிச சிந்தனைகளை உலகில் நிலை நிறுத்த நினைப்பவர்கள் காடுகளில்தான், காடுகளில் மட்டுமேதான் சுற்றி திரிய வேண்டும். இவர்களுக்கு நாடு, நகரம் என்பதெல்லாம் அவசியமில்லாத ஒன்று. அப்படி பார்த்தால் சந்நியாசம் என காடுகளை நோக்கி பயணித்தவர்கள் தான் உண்மையான கம்யூனிசவாதிகள் என சத்தமிட்டு சொல்லிவிடலாம். புரட்சி என வன்முறைகளை கையாளும் இந்த சிந்தனைவாதிகள் எல்லாம் பேசாமல் தவம் செய்துவிட செல்வது சால சிறந்தது.

இத்தனை தொழில் நுட்ப வளர்ச்சியும், சமுதாய மாற்றங்களும் ஏற்பட்ட பின்னர் கம்யூனிசம் என்கிற அழகிய சிந்தனையை நோக்கி மனிதம் செல்லும் என்பதெல்லாம் வீணான கற்பனை சித்திரங்களாகவே வரையப்படும்.

பெபியுப் சொல்கிறார் 'ஒரு சமூகமானது, மனிதர்கள் தாங்கள் பிறரை விட பணக்காரர்களாகவோ, அறிவுடையவர்களாகவோ, பலம் பொருந்தியவர்களாகவோ உருவாவதை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் உருவாகவேண்டும்'

இந்த வாசகம் திடுக்கிட செய்யும் வண்ணம் இருந்தாலும் இதனுடைய நோக்கம் என்னவெனில் 'ஈடு இணையற்ற ஒரு சமுதாயம் என்பது, அதாவது ஏற்ற தாழ்வுகள் அற்ற, அனைவரும் பணத்திலும், அறிவிலும், பலத்திலும் சமம் பொருந்தியவர்களாக இருப்பதுதான் என்கிறது' இது எப்படி சாத்தியம்? அன்றைய கால கட்ட சிந்தனைகளில் மரபியல் விசயங்கள் முதலான பிற அறிவியல் விசயங்கள் பெரிதாக தெரிந்திருக்கவில்லை.

சாத்தியமற்ற விசயங்களை, விபரங்களை உலகின் உயிர்களின் தன்மையை பற்றி சிந்திக்காமல் ஒரு சமூகம் வேண்டும் என விரும்பினால் அது எப்படி சாத்தியம். முன்னர் எழுதிய பதிவினில் குறிப்பிட்டதுதான். வீட்டினில் கம்யூனிசத்தை நிலைநிறுத்த திராணியற்றவர்கள் சமூகத்தில் கம்யூனிசத்தை நிலைநிறுத்துவது பற்றி பேசுவது அறிவீனம்.

உயிரினங்களின் தேவை என்ன? வாழ்வது என்பதுதான் குறைந்த பட்ச ஆசையாக இருக்கக் கூடும். உயிரினங்கள் இருப்பிடத்திற்காக, உணவுக்காக, கலவிக்காக போராடும் தன்மை உடையவை. தனது நிலையை நிலை நிறுத்தி கொள்ள தனக்கு போட்டியாக இருப்பவைகளை அடிமைபடுத்தும் குணம் உயிரினங்களிடம் உண்டு. இந்த போட்டி தன்மையை ஒழித்து கட்ட வேண்டும் என கூக்குரல் இடுவதுதான் கம்யூனிசம் என்றால் அந்த கம்யூனிசத்தை எந்த உயிரினம் ஏற்று கொள்ள தயாராக இருக்கும். ஆனால் இதுவல்ல கம்யூனிசம் என்றால், எதுதான் கம்யூனிசம்?

கம்யூனிசம் என்ற வார்த்தையை முதலில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர் குட்வின் பாம்பி என்பவரே என சொல்லப்படுவதுண்டு. இவர் பெபியுப் கொள்கையை பின்பற்றியவர்கள் பிரெஞ்ச்சு மொழியில் உபயோகித்த கம்யூனிஸ்டே என்ற வார்த்தையை இரவலாக பெற்று கொண்டார். இவர் தான் இங்கேல்ஸ் அவர்களை கம்யூனிஸ்டேவிற்கு அறிமுகப்படுத்தியவர். இவர்தான் கம்யூனிஸ்ட் போராட்ட அமைப்பினை 1841ல் உருவாக்கினார். அந்த வருடமே உலக கம்யூனிஸ்ட் அமைப்பும் தோன்றியது.

நிலச்சுவான்தார்கள் மனிதர்களை கொத்தடிமைகளாக நடத்தியது கண்டு, அரசர்கள் மக்களை அடிமைகளாக நடத்தியது கண்டு பொங்கி எழுந்த மக்கள்தான் புரட்சிக்காரர்கள் என அறியப்பட்டார்கள். ஆனால், அவர்கள் புரட்சியை கையாண்ட விதம் வன்முறை! இவர்களை அரசு படைகள் ஒடுக்கிவிடுவது வாடிக்கையாக நடந்துவருவதுதான். மக்களிடம் புரட்சி ஏற்படாதவரை, தனி அமைப்புகளில் ஏற்படும் புரட்சி நசித்து போவதுண்டு. உண்மையான கம்யூனிசம் உலகில் நிலவிட மக்கள் போராட்டத்தில் முழுமையாக தங்களை அர்பணித்து கொள்ள வேண்டும். இது எவ்வகையில் சாத்தியம் என்பதை போராளிகளும், புரட்சியாளர்களும் தான் சொல்ல வேண்டும்.

மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் போன்றோர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் அலசப் போவதில்லை இந்த கட்டுரை. அது தேவையில்லாத விசயங்களும் கூட. ஆனால் சில விசயங்கள் மட்டும் இங்கே கட்டுரையின் பொருட்டு குறிப்பிடலாம் என நினைக்கிறேன். மார்க்ஸ் கூலி தொழிலாளி நிலையில் இருந்தவர். இங்கேல்ஸ் பணக்கார வர்க்கத்தை சார்ந்தவர். இங்கேல்ஸ் மார்க்ஸ் அவர்களுக்கு நிறைய உதவிகள் புரிந்தார். இப்படி ஒரு தனி மனிதன் மற்றொரு மனிதனுக்கு உதவும் பட்சத்தில் எதற்கு ஒரு சமூகமே அப்படி இருக்கக் கூடாது எனும் சிந்தனை மார்க்ஸ் அவர்களுக்கு வந்திருந்ததில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் அந்த சிந்தனையை உலகெங்கும் நிலைநிறுத்த வேண்டும் என நினைத்ததுதான் தவறாகிப் போனது. இங்கேல்ஸ் போன்ற மனிதர்கள் உலகம் எல்லாம் நிறைந்திருந்தால் மட்டுமே மார்க்ஸ் போன்ற மனிதர்கள் சுகமாக இருந்திருக்க இயலும். இங்கேல்ஸ்களை உருவாக்குவது எப்படி? என்பதுதான் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால் புரட்சிகள் எனும் பெயரில் நாச வேலைகள் உலகில் நடப்பது இயல்புதான். மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் உருவாக்கிய கம்யூனிச சித்தாந்தம் பிரசித்து பெற்றது என சொல்ல இயலாது.

கம்யூனிச கொள்கைகளை கடைப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே இந்த கம்யூனிச சித்தாந்த சிந்தனைகளை பற்றி அறிந்து இருக்கிறார்கள் என அறிந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்.

கம்யூனிச சித்தாந்தம் 1848l ல், முன்னர் குறிப்பிட்டது போல பிரெஞ்ச்சு தொழிலார்களால் 1836ல் கம்யூனிச அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் விருத்தியாக உருவான கம்யூனிச அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இதில் முக்கிய விசயம் என்னவெனில் எதிர்காலத்தில் எப்படிபட்ட கம்யூனிச அமைப்புகள் உருவாக வேண்டும் என்பதை பற்றி இந்த சித்தாந்தம் எதுவும் சொல்லவில்லை என்பதுதான் சிறப்பு. அதன் காரணமாகவே கம்யூனிச சித்தாந்த அடிப்படை என சொல்லிக் கொண்டு லெனினிசம் முதற்கொண்டு எல்லாம் உருவாகின.

இனி கம்யூனிச சித்தாந்தம் பற்றி இங்க்கேல்சும், மார்க்சும் என்னதான் சொன்னார்கள் என்பதை பார்ப்போம். இந்த கம்யூனிச சித்தாந்தம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதலில் ஒரு முகப்புரையுடன் தொடங்குகிறது. அந்த முகப்புரை மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இந்த தொடரில் இனி வரும் சில  பதிவுகள் கார்ல் மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் எனும் அற்புத மனிதர்களுக்கு சமர்ப்பணம்.

(தொடரும்)

Friday 1 October 2010

கம்யூனிசமும் கருவாடும் - 4

'நமது வாழும் காலத்தில் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நமக்கு என்ன கொள்கை, நாம் கொள்கையில் கொண்டிருக்கும் உறுதிப்பாடு என்ன என பல விசயங்கள் நமக்கு உறுதியாக தெரிவதில்லை.

 பல நேரங்களில் நமது கொள்கைகளுக்கு நாம் மாறாக நடக்கப்படவேண்டிய கட்டாயத்துக்கு நம்மை காலம் தள்ளிவிடுகிறது அல்லது அப்படிப்பட்ட காலத்தில் நாம் நம்மை தள்ளிவிடுகிறோம்.  நமது எண்ணங்களுக்கு நேர்மையாக நாம் நடப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை ஒவ்வொரு மனிதரும் தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு காட்டுவதற்கு நாம் செய்யும் கயமைத்தனங்கள் வெளித்தெரிவதில்லை என்பதுதான் நமக்கு இருக்கும் பலமும், பலவீனமும்

இப்படிப்பட்ட நிகழ்கால வாழ்க்கையையே ஊர்ஜிதம் செய்ய முடியாமல் நாம் வாழும் வாழ்க்கையில் இறந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் கொள்கைகளை, அவர்கள் உண்மையிலேயே என்ன நினைத்தார்கள், என்ன விசயத்தை செயல்படுத்த நினைத்தார்கள் என நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் செயல்படுவது அறிவுடைமையா என்பதை ஒவ்வொரு மனிதரும் சிந்தித்து பார்த்தல் அவசியம்

'சக மனிதர்களை, சக ஜீவராசிகளை அன்புடன் நடத்துவது' என்பதை தவிர இந்த உலகில் எந்த ஒரு கொள்கையும் பெரிய கொள்கை கிடையவே கிடையாது என்பதை ஒவ்வொரு மனிதரும் தமது மனதில் நிலை நிறுத்திக் கொள்வது அவசியம். அன்பு என வரும்போது அங்கே எந்த ஒரு தவறுக்கும் வாய்ப்பு இருக்காது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

சீன பழமொழி ஒன்று உண்டு. ஒருவர் முதலில் சொன்ன விசயம் கடைசி நபரை அடையும்போது அந்த விசயம் முற்றிலும் மாறுபட்டு இருக்குமாம். இந்த பழமொழி சொல்வது உண்மைதானா என்பது கூட சிந்திக்க வேண்டிய விசயம்.

அப்படிப்பட்ட சமூகம் உடைய இந்த பூமியில் முன்னால் நடந்த விசயங்களை நாம் புரிந்து கொள்ளும் பொருட்டு நாம் படித்து அதை அறிந்து கொள்வதும், அதனை மொழிபெயர்ப்பு செய்யும் போது ஏற்படும் கருத்து சிதைவுகள் எத்தகைய விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். 'சுய சிந்தனை இல்லாத எந்த ஒரு மனிதருமே கொத்தடிமைகள்தான்'. நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எந்த சூழலில் வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் வாழும்போது நாம் எந்த சூழலில் வாழ்கிறோம் என்பதும் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று

இதன் காரணமாக 'அன்பை அடிப்படையாக வைத்து கொள்ளாத எந்த ஒரு அமைப்பும், அரசியல் சட்டமும் புறக்கணிக்கப்பட வேண்டியவை'

இனி கம்யூனிசம் சிந்தனை பற்றி மட்டுமே இந்த தலைப்பில் கீழ் வரும் பதிவுகள் பேசும் என்பதை உறுதி செய்கிறேன்.

இந்த கம்யூனிசம் சிந்தனை தோன்றியது எவ்வாறு?

1836ல் ஜெர்மானிய தொழிலாளர்களால் பாரிஸ் நகரத்தில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.   இந்த அமைப்பின் தாரக மந்திரம் 'எல்லா மனிதர்களும் சகோதரர்கள்' என்பதாகும். இந்த அமைப்பின் நோக்கம் பூமியில் கடவுளின் ராஜ்யத்தை அன்பு, நீதி, சமத்துவம் என்பதன் மூலம் நிறுவுவது.

இந்த அமைப்பானது உருவானதற்கு ஒரு கருப்பொருளாக இருந்தவர் கிராக்கஸ் பெபியுப் என்பவராவர். இவர் பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கு காரணமானவர்.

(தொடரும்)

Wednesday 4 August 2010

கம்யூனிசமும் கருவாடும் - 3

கருவாடுவுக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம்? இது சந்தத்திற்காக எழுதப்பட்டதா?
காதலும், கத்தரிக்காயும் எனும் சொல்வழக்கு போன்றதா? எனும் கேள்விகளும், மேலும் கம்னியூசத்தை அவமதித்து எழுதுவது போன்ற ஒரு பிரமையும் உருவாவதை தவிர்க்க இயலவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.

கருவாடுவுக்கும் கம்யூனிசத்திற்கும் சம்பந்தம் உண்டு.  சாதாரணமாக மீன்கள் நீரில் துள்ளி விளையாடும். தண்ணீரில் கலந்திருக்கும் பிராண வாயுதனை சுவாசித்து தனக்கென குடில்கள் எதுவும் அமைத்து கொள்ளாமல் நீந்திக் கொண்டு திரிவதுதான் மீன்களின் வேலை. இந்த மீன்கள் யாருக்காகவும் அடிமைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவை சுதந்திரமாக நீரினில் திரியும்.

குளமோ. குட்டையோ, அருவியோ, நதியோ, கடலோ இந்த மீன்கள் நினைத்த மாத்திரத்தில் ஓரிடம் விட்டு ஓரிடம் செல்லும் வாய்ப்புதனை பெற்றிருக்கும். மீன்கள் வேட்டையாடும் வழக்கம் வைத்திருப்பதில்லை. இந்த மீன்கள் வகை வகையாக இருக்கும். இப்படிப்பட்ட மீன்கள் நீர் வாழ் உயிரின வகையை சார்ந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த மீன்கள் நிலத்திற்கு வந்தால் காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவை உட்கொண்டு வாழ இயலாது. சில நிமிட மணித் துளிகளில் இறந்துவிடும்.

அப்படி இறந்து போன மீன்கள்தனை உப்புதனை தடவி வெயிலில் காயப் போட்ட பின்னர் அந்த மீன்களின் பெயர் கருவாடு. இப்பொழுது இந்த கருவாடு பல காலத்திற்கு கெடாமல் பாதுகாக்கலாம். வகை வகையாக இருந்த மீன்கள் ஒரே ஒருவகையான கருவாடு என மாறிவிடும். அதாவது பல்வேறு வகையாக பிரிந்து நிற்கும் மனிதர்கள் இறந்தவுடன் பிணம் என அழைக்கப்படுவதை போல. அந்த கருவாடுதனை கூட நெத்திலி கருவாடு, அத்திலி கருவாடு என பிரித்து விடுவார்கள் என்பது வேறு விசயம். கம்யூனிசத்திலும் அத்தகைய பிரிவுகள் உண்டு.

சுருங்க சொன்னால் இந்த கம்யூனிசம் அதுதான். எல்லா நிலைகளின் அதாவது சோசியலிசம், கேப்பிடலிசம், மாவோயிசம், மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் என எல்லாவற்றையும் கடந்த இறுதி நிலை.

இந்த கம்யூனிச தத்துவத்தில் சுதந்திரமாக வாழும் அனைத்து பறவைகளும், விலங்குகளும் அடங்கும். கம்யூனிசம் என்பது விலங்கினங்கள், பறவைகளுக்கு மிகவும் எளிதாகவே பொருந்தும். இதில் மனிதர்கள் மட்டுமே விதிவிலக்கு. அதனால்தான் சிந்தனையை  தன்னிடமிருந்து கார்ல் மார்க்ஸ் வெளிபடுத்தினார். கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிந்தனை புரட்சிகர சிந்தனை என அழைக்கப்படுகிறது. இங்கேல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் இணைந்து பணியாற்றினாலும், கார்ல் மார்க்ஸ்தான் பெரிதளவு போற்றபடுகிறார்.  அதற்கு காரணம் கார்ல் மார்க்சின் சிந்தனை வளமும் இங்கேல்சின் பெருந்தன்மையும் என சொல்லலாம். இங்கேல்ஸ், கார்ல் மார்க்ஸ்தனை மிகவும் அதிகமாகவே புகழ்ந்தார்.கம்யூனிசத்தின் முழக்கம் என்னவெனில் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்' என்பதுதான்.

ஜெர்மனியில் இருந்து பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்த ஜெர்மனியர்கள் ஒன்று கூடி 1836ம் வருடம் ஒரு அமைப்பினை உருவாக்கி இருந்தார்கள். அது குறித்தும், இங்கேல்சும், கார்ல் மார்க்சும் வெளியிட்ட கம்யூனிச தத்துவ கொள்கைகளை அடுத்து பார்ப்போம்.

அதற்கு முன்னர், மனிதர்கள் விதி விலக்கு என சொன்னாலும், கம்யூனிசம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்பதான தோற்றம் இருக்கும். தந்தை சம்பாதிப்பார். தாயும் பிள்ளைகளும் தந்தையிடம் இருந்து பெற்று கொள்வார்கள். ஒருவர் உழைக்கும் திறன் உடையவர். அவரது உழைப்பால் மற்றவர் பயன் பெறுகிறார்கள். இதைத்தான் கம்யூனிசம் சொல்கிறது. உழைப்பவர்கள் உழைக்கும் வாய்ப்பு அற்றவர்களையும் காப்பாற்றி கொள்ளுங்கள் என. இங்கே தந்தை முதலாளி போல நடந்து கொண்டு குடும்பத்திற்காக பாடுபடும் தாய்க்கும், குழந்தைக்கும் போதிய வசதிகள் செய்து தரவில்லையெனில் தாயும் குழந்தையும் சுரண்டபடுகிறார்கள் என்பதே பொருள். இந்த விசயத்தை கிராமம், நகரம், மாநிலம், நாடு, உலகம் என எல்லாவற்றிலும் கொண்டு வருவதே உண்மையான கம்யூனிசம் என்கிறது கோட்பாடு. வீட்டுக்கு சரி, எப்படியாவது சமாளிக்கலாம், உலகத்துக்கே என்றால்?

சோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட் என இரண்டுக்குமே தமிழ் அகராதியில் பொதுவுடைமைவாதி என்றே இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் அவர்களை சோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்றெல்லாம் சொல்கிறார்கள். கம்யூனிசம் என்பதே இவ்வுலகில் இல்லை என்பதை சுட்டிக்காட்டத்தான் மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் எல்லாம் தோன்றியது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

(தொடரும்)

Sunday 1 August 2010

கம்யூனிசமும் கருவாடும் - 2

ஜெர்மனி எனும் நாடு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடு. இரண்டு உலகப் போர்களுக்கும் ஒருவிதத்தில்  காரணமான நாடு. நல்லதொரு சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும் கண்ட நாடு. அதற்காக பிற நாடுகள் எல்லாம் சளைத்தவைகள் என்று பொருள் அல்ல. அப்படி கருதினால் கம்யூனிசம் என்பது சாத்தியம் அல்ல. கம்யூனிசம் என்பது எந்த பாகுபாடும், பிரிவினையும் இன்றி அனைவரும் சமம் என கருத வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த கம்யூனிசம் உருவான வரலாறு முதலாளிகளின் கையில் அல்லல்படும் தொழிலாளிகளை கண்டதன் காரணம் தான். மேலும் இந்த கம்யூனிசம் கொண்ட கருத்தையே இதற்கு முன்னர் சோசியலிசம் கொண்டிருந்தது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியது.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ப்றேடிறிச் இங்கேல்ஸ் எனும் ஜெர்மனியில் பிறந்த இரண்டு சிந்தனையாளர்களின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த கம்யூனிசம் என சொன்னாலும் இவர்களுக்கு முன்னர் இருநூறு வருடங்களுக்கு முன்னரே இந்த கம்யூனிசம் உருவாகித்தான் இருந்தது என்கிறது வரலாறு.  சோசியலிசம் எனப்படும் சமத்துவ முறையானது முன்னரே கடைபிடிக்கப்பட்டு வந்ததுதான்.

இந்த கம்யூனிசம் மிகவும் சிறந்த சிந்தனை, ஆனால் இந்த உலகத்தில் கம்யூனிசம் என்பது சாத்தியம் கிடையாது. கம்யூனிச நாடுகள் என இருப்பவை, இருந்தவை எல்லாம் கம்யூனிச சிந்தனைகளை பின்பற்றியவைகளே அல்ல. கம்யூனிசவாதிகள் என சொல்லிக் கொள்வோர்கள் எல்லாம் கம்யூனிசவாதிகளே அல்ல என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

சோசியலிசமும் கம்யூனிசமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை. முதலாளித்துவ கொள்கைகளை எதிர்ப்பவை. அப்படி என்னதான் இந்த சோசியலிசம் சொன்னது.

தனி உடைமை என்பதை ஒழித்தல். அனைத்தும் பொதுவுடைமை ஆக்குதல். எல்லாவற்றிருக்கும் ஒருவரே முதலாளி, அந்த முதலாளி வேறு யாருமல்ல, அனைத்து தொழிலாளிகள், சுருங்கச் சொன்னால் அனைத்து மக்கள்.

சர்வாதிகாரம் எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. அனைத்துமே ஜனநாயக கட்டுபாட்டில் இருப்பதுதான். ஆனால் லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் சர்வாதிகாரத்தின் பேரில் செயல்பட்டவர்கள். ஏனெனில் காலமும் சூழ்நிலையும் அவ்வாறு செயல்பட வைத்தன. ஒன்றை எதிர்க்க சர்வாதிகாரம்தான் மிகவும் துணை நின்றது.

உபயோகத்திற்காக மட்டுமே பொருள்கள் உருவாக்கப்பட வேண்டும், லாப நோக்கத்திற்காக எதுவுமே உருவாக்கப்படக் கூடாது. இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். வியாபார உலகில் லாப நோக்கம் இல்லாமல்  எது சாத்தியம்? இது சாத்தியம், எப்படி தெரியுமா?

கம்யூனிசத்தின், பொதுவுடைமையின், முழு சிந்தனையான பிரிவினையேதும் இல்லாத , இந்த ஊர், நாடு எனும் அடையாளமில்லாத ஒரு சமூகம். அதாவது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விசா, குடியுரிமை எனும் கொடுமை எல்லாம் இல்லாமலிருப்பது. எங்கு வாழும் மக்களும் அதே சகல வசதிகளுடன் வாழ்வது, அதன் காரணமாக ஒரு இடம் மற்றொரு இடம் என எந்த பாகுபாடும் இல்லாமலிருப்பது.

இந்த உலகில் சாத்தியமே இல்லாத இந்த சிந்தனைகள் கற்பனையில் வெளிபட்டது அல்ல.  இங்கேல்ஸ் இங்கிலாந்து நாட்டிற்கு பிரயாணம் செய்தபோது தான் கண்ட குழந்தை தொழிலாளர்கள் நிலை, வர்க்க ரீதியாக பிரிக்கப்பட்டிருந்த மக்கள் நிலை எனும் பல அவல நிலைகள் தான்.

இங்கேல்சும், கார்ல் மார்க்சும் இணைந்து முதலாளித்துவத்தை எதிர்த்து போராடினாலும் கம்யூனிசம் என்பதை அவர்களால் உறுதி செய்ய இயலவில்லை. அவர்களால் ஒரு தெளிவான பார்வையை செயல்படுத்த இயலாத நிலையே இருந்தது. அது ஏன்?

கற்கால மனிதர்களைப் போல இக்கால மனிதர்களும் வாழத் தயாரா? கம்யூனிசம், மாவோயிசம், சோசியலிசம், அந்த இசம், இந்த இசம் என எல்லா இசங்களும் நமது வசம்.

(தொடரும்)

Friday 30 July 2010

கம்யூனிசமும் கருவாடும் - 1

மதார் அவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க கம்யூனிசம் பற்றி ஒரு முழு விளக்கம் வெகு விரைவில் தரப்படும். அதனை கம்யூனிஸ்ட்கள் தந்தால் ஒருதலை பட்சமாக கருதப்படும் என்பதால் இது குறித்து விபரமாகவே எழுதுகிறேன். அதனால் கம்யூனிஸ்ட்கள் சற்று பொறுத்துக் கொள்க.

நான் கம்யூனிசவாதி கிடையாது, இந்த வாதி எனப்படும் வியாதி எதுவும் எனக்கு கிடையாது. பலருக்கு கம்யூனிசம் என்றாலே வேப்பங்காயாக கசப்பதற்கு காரணம் அரை குறையுடன் தெரிந்து வைத்து கொண்டு தன்னை கம்யூனிஸ்ட் என சொல்லிக் கொள்பவர்களும், கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சுயநலத்துடன் வாழப் பழகி கொண்டதும், கம்யூனிசம் என்றாலே உலகில் சமத்துவம் நிலவும் என்கிற பொய்யான கோட்பாடும்தான் முழு முதற் காரணம்.

பொருளாதாரத்தை மையப்படுத்தி பல புரட்சிகள் உலகில் ஏற்பட்டு இருக்கின்றன. முதலாளிகள், தொழிலாளிகள் எனப்படும் பிரிவினையை கண்டு குமுறியவர்கள் பலர்.

கம்யூனிசம் என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை ஆணி வேர். ஆனால் புரிதல் இல்லாத காரணத்தினால் இந்த கம்யூனிசம் கேலிப் பொருளாகிப் போனது. ஜனநாயகம் என்பதன் அடிப்படையே கம்யூனிசம் தான். எத்தனை பேருக்கு கம்யூனிசம் பற்றி ஒழுங்காக தெரியும்?

கம்யுனிட்டி (சமூகம்) பற்றிய சிந்தனை மட்டுமே கம்யூனிசத்துக்கு உண்டு. கம்யூனிசத்தில்தான் தோழர்களே எனும் ஒரு அன்பு பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆனால் இப்பொழுது மனிதர்கள் பார்வை எப்படி இருக்கிறது?

(தொடரும்)