Wednesday 1 July 2009

வேத நூல் - 9

கிரகமெஸ்ட் மிபலோவைக் கைது செய்ய முடியாது எனக் கூறியதும் சாங்கோ மிகவும் எரிச்சல் அடைந்தான். அன்று இரவே மிபலோவைக் கொல்வது என முடிவு செய்தான் சாங்கோ. அதற்கானத் திட்டத்துடன் மிபலோவைச் சந்தித்தான் சாங்கோ. மிபலோ மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தான்.

''சாங்கோ நான் என்னுடைய உயிர் போய்விடும் நிலைக்கு வந்துவிட்டது. எனது எண்ணங்கள் எல்லாம் சிதைந்து போய்விட்டது, குவ்விலான் அன்றே நீ எழுதுவதைத் தடுத்துவிடக் குறிப்பிட்டதைக் கேட்காமல் நான் விட்டுவிட்டேன், இன்றோ நீ செய்த மாற்றங்களையே இங்கே பரப்பி இருக்கிறாய், தானேஸ்ராவிலும் நீ செய்த செயல் கண்டுதான் நான் உடனடியாகத் திரும்ப வேண்டியதாகிவிட்டது. அனைவருக்கும் எழுத்துச் சொல்லிக் கொடுத்து உனது எண்ணங்களை நிலைநாட்டிக் கொண்டாய். ஆனால் அனைத்துமே கொடூரங்களையும், கொலைகளையும் முன்னிறுத்தியே நீ செயல்பட்டதால் எனக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது சூரியன் வந்தபின்னர் நான் அஸ்தமனம் ஆகிவிடுவேன்'' என்றான் மிபலோ.

''நீ சொன்னதை எல்லாம் நான் மாற்றி எழுதவில்லை, நீ சொன்னதற்கு மாறாக சிந்தித்து எழுதினேன். எனது சிந்தனை இது, உனது சிந்தனை அது, இதைக்கூட உனக்கு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையெனில் உன் உயிர் போகத்தான் வேண்டும்'' என்றான் சாங்கோ.

''மனிதர்களுக்கு நல்லவிசயங்களையேப் பரப்ப வேண்டும், தீமைகளைச் சொல்லி நன்மைகளின் பலன் சொல்லக் கூடாது, நன்மையை மட்டுமே பேச வேண்டும் என நான் வலியுறுத்தியக் கருத்துக்கள் சிதைந்துவிட்டதே'' என்றான் மிபலோ.

''அது உன் தவறு, அன்றே நீ எழுதும் முறைக் கற்றிருந்தால் இன்று உனக்கு ஏன் இந்தப் பிரச்சினை. உன்னை யார் உனது எழுத்துக்களைப் பிரமிடுக்குள் போட்டு பூட்டி வைக்கச் சொன்னது, எந்தக் காலத்திலும் உன் எழுத்தை எவராலும் எடுக்க முடியாது, இனி எதிர்காலம் கேடு செய்வது கேடுடன் வாழ்வது பற்றியே சிந்திக்கும்'' எனச் சொல்லிவிட்டு மிபலோ உயிர் துறந்துவிடுவான் என நம்பிக்கையில் வெளியேறினான் சாங்கோ.

சிரகமெராவிடம் சொல்லிச் சிரித்தான் சாங்கோ. சிரகமெரா அளவிலா கோபம் கொண்டாள். அன்று இரவே சாங்கோவை மிகவும் நுணுக்கமான முறையில் கொலை செய்தாள் சிரகமெரா. அவனைக் கொலை செய்துவிட்டு நேராக மிபலோவிடம் சென்றாள்.

''நான் சாங்கோவை கொலை செய்துவிட்டேன்'' என்றாள் சிரகமெரா. மிபலோ அதிர்ச்சியடைந்தான். இரவு நீடித்தது.

(தொடரும்)

No comments: