Thursday 2 July 2009

கேள்வியும் பதிலும் - 3

3. நீங்கள் விரும்பும், மதிக்கும் நண்பர் உங்கள் பின்னே (உங்களின்) இன்னொரு நெருங்கிய நண்பரிடம் தாறுமாறாக உங்களைப் பற்றி பேசுவதை அந்த நண்பர் வந்து சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை கேட்ட நிலையில் நீங்கள் எவ்விதம் உணர்வீர்கள்? என்ன செய்வீர்கள்?

அப்படி பேசுவார்களா என்ன? அப்படி பேசினால் நான் மதிக்கும் நண்பராக அவர் இருக்க முடியாது! அவரது நண்பராக நான் இருந்து இருக்க முடியாது.

கேள்விக்கு பதில் சொல்வது என வைத்துக் கொண்டால்...

வேடிக்கையாக முதலில் உணர்வேன். எதற்காக அப்படி பேசினார் அப்படி பேச வேண்டிய நிலையை நான் எதற்கு உருவாக்கினேன் என காரணம் அறிந்து கொள்ள என்னிடம் கேள்விகள் கேட்டு கொள்வேன். விடை தெரிந்தால் திருத்திக் கொள்வேன். இல்லையெனில் வீணாக அதைப்பற்றி எனது நேரத்தை வீணாக்க மாட்டேன். அது போன்ற மதிக்கும் நண்பர்களை தவிர்த்து விடமாட்டேன் ஆனால் அளவோடு வைத்துக் கொள்வேன். தவறு என்பக்கம் இருந்தால் மன்னிப்புக் கேட்டு கொள்வேன் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். வீணான குற்றசாட்டு எனில் எனது தரப்பு நியாயத்தை எல்லாம் விளக்கிக் கொண்டு இருக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை விழலுக்கு இறைத்த நீர்தான்.

என்னிடம் வந்து சொன்ன நண்பரிடம் இதனை என்னிடம் சொல்லாமல் தவிர்த்து இருந்து இருக்கலாம் என சொல்வேன். என்னைப் பொறுத்தவரை எனது முகத்திற்கு நேராக பேசும் வார்த்தைகளுக்கு சொன்னவர் நேராக சொன்னால்தான் மதிப்பே தருவேன், பிறர் வாயிலாக வரும் வார்த்தைகளுக்கு அதிகம் செவி சாய்ப்பதில்லை.

(தொடரும்)

No comments: