Wednesday 1 July 2009

வேத நூல் - 8

மிபலோ குவ்விலானுடன் தானேஸ்ரா பயணத்தைத் தொடங்கினான். சாங்கோ சிரகமெராவுடன் எகிப்தில் இறங்கியபோது மிபலோ குவ்விலானுடன் தானேஸ்ராவில் இறங்கினான். தானேஸ்ரா சில மாற்றங்களைப் பெற்றிருந்தது. மிபலோவின் பெற்றோரும் குவ்விலான் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சாங்கோ எகிப்து சென்ற விசயம் அறிந்து மிபலோ அச்சம் கொண்டான்.

எகிப்தில் இறங்கிய சாங்கோ மிபலோ தானேஸ்ரா சென்றது அறிந்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தான். மிபலோ கட்டிய பிரமிட் கண்டு பிரமித்து நின்றான். கிரகமெஸ்ட்டிடம் விபரங்கள் கேட்டான். அப்பொழுது குவ்விலான் எழுதிய விபரங்களை பிரமிட்டிற்குள் மூடிவைத்து இருப்பதாகச் சொன்னான் கிரகமெஸ்ட். சாங்கோ உற்சாகமானான்.

மொத்த பிரமிட்டையும் மூடினால் தான் அந்த விபரங்கள் பாதுகாப்பாக என்றும் இருக்கும் என அறிவுரை சொன்ன சாங்கோ தன்னிடம் இருந்த விபரங்களை அங்கிருந்த சிலரிடம் பரப்ப ஆரம்பித்தான். எழுத்துக்களைச் சொல்லிக்கொடுக்கவும் செய்தான் சாங்கோ. சாங்கோ மேல் பலருக்கு நல்ல நம்பிக்கை ஏற்படத் தொடங்கி இருந்தது. சிரகமெரா சாங்கோவின் செயல்பாடுகள் கண்டு வெறுப்பு கொள்ள ஆரம்பித்தாள். சில தினங்களிலேயே சாங்கோவைப் பின்பற்றும் ஒரு கூட்டம் உருவானது. அந்த நிலையைக் கண்ட கிரகமெஸ்ட் சாங்கோவிடம் தானும் உடன் சேர்வதாக அறிவித்தான்.

ஊரில் இருப்பதில் பயன் இல்லை என உணர்ந்த மிபலோ குவ்விலானுடன் கிளம்பினான், ஆனால் குவ்விலானுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தடுத்துவிட்டார்கள். எனவே சில வேறு நபர்களுடன் மிபலோ எகிப்து பயணமானான்.

எகிப்தில் இறங்கிய மிபலோ சாங்கோவின் புகழினைக் கண்டு ஆச்சரியமடைந்தான். ஆனால் அனைவரும் சாத்தான் என்றே சொல்ல மிபலோ கலக்கமடைந்தான். தனது எண்ணங்களை எடுக்க பிரமிட் சென்றபோது அந்த பிரமிட் வழிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க கிரகமெஸ்ட்டிடம் விபரம் கேட்டான் மிபலோ. சாங்கோவின் ஆலோசனை என்றான் கிரகமெஸ்ட். செய்வதறியாது விழித்தான் மிபலோ. சாங்கோ கிரகமெஸ்ட்டிடம் மிபலோவை கைது செய்யுமாறு கூறினான்.

(தொடரும்)

No comments: