Thursday 2 July 2009

கேள்வியும் பதிலும் - 4

4) நுனிப்புல்லிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டால்...... என்ன செய்வீர்கள்?

அதென்ன சகோதரி நான் நினைத்து இருந்து இருக்கிறேன், நீங்கள் கேட்கிறீர்கள். இது குறித்து யாரிடமும் நான் சொல்லவில்லையே. இங்கும் சொல்லி இருக்கமாட்டேன், பதில் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். எனது கனவுகள் எப்பொழுதுமே உறங்கிக் கொண்டே இருக்கும் அதன் நினைவு திரும்பும்வரை.

நாவல் எழுதும்போதே சாகித்ய அகாடமி விருதினைப் பெற வேண்டும் என்ற ஆவலில்தான் எழுதவே ஆரம்பித்தேன். இது மிகவும் உண்மை. எனக்கு நிறையவே அந்த விருதினைப் பெற வேண்டுமென ஆசை உண்டு. அப்படி ஒரு நிலை வருமெனில் எண்ணிய எண்ணமெல்லாம் கைகூடுகிற அளவுக்கு என்ன பாக்கியம் செய்தேன் என அந்த இறைவனின் முன்னால் நின்று மனம் கலங்கி நிற்பேன். அப்படியே இந்த உலகம் அமைதியினை முன்னிறுத்தி வாழ வேண்டிக் கொண்டு இருக்கும் அந்த ஆசையையும் அமைதியாய் சொல்லி வைப்பேன்.

(தொடரும்)

No comments: