Friday 3 July 2009

கேள்வியும் பதிலும் - 6

மேலே இருக்கும் கேள்விகள் கேட்டவர் பத்மஜா சகோதரி. இனி வரப்போகும் அடுத்த ஐந்து கேள்விகள் கேட்டவர் சுதாகர் அண்ணன்.

6. இன்னும் சில நாட்களில் பதவி விலக போகும் நம் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் பல்கலை கழகத்திற்க்கு வேலைக்கு போகும் பட்சத்தில், அவருடைய மதிப்பு எந்த நிலையில் இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?


எனக்கு பெயர் இடப்பட்ட கதையினை இங்கு சொல்வது சரியாகப்படும் என்பதை சொல்லி ஆரம்பிக்கிறேன். நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தத்துவமேதை என போற்றப்படுபவர் திரு. எஸ். இராதாகிருஷ்ணன். அவர்களை மனதில் கொண்டு எனக்கு எனது அக்கா இட்ட பெயர்தான் இராதாகிருஷ்ணன். ஒரு ஆசிரியர் ஆன ஜனாதிபதியை சிறப்பிக்கும் பொருட்டு அவருடைய பிறந்ததினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. மக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர்.

நான் அறிந்தவரை அரசியல் விசயத்துக்காக மட்டுமே பல ஜனாதிபதிகள் நமது நாட்டில் பெயர் பெற்றனர், ஆனால் திரு. அப்துல்கலாம் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு பலருடைய மனதில் இடம் பெற்றுவிட்டார். இது அவர் புரிந்த விஞ்ஞானத்தில், கவிதையில், கனவில், செயலில் செய்த சாதனையை பொருத்து அமைந்தது என குறிப்பிடலாம். அப்படிப்பட்டவர் ஒரு பல்கலைகழகத்திற்கு மீண்டும் பணியாற்ற செல்வாரேயானால் அந்த பல்கலைகழகம் பெரும் பேறு பெற்றதாகும். அவருடைய மதிப்பு எள்ளளவும் குறையாது. மேலும் மேலும் பெருகும். இந்த ஜனாதிபதி பதவியானது அவரது சாதனையை மதிப்பில் கொண்டு வந்ததுதான். அந்த பல்கலைகழக மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், நேரில் உரையாடும் வாய்ப்பு கிட்டும். முன்னேறத்துடிக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழி காட்டுபவர் உடனிருப்பார் எனும்போது மேலும் உற்சாகம் பொங்கும். சாதிக்க முடியாத மனமெல்லாம் அவர் அருகில் இருக்கையில் சாதித்து காட்டிட முனையும். அந்த மாணவர்கள் இவரது புகழை மென்மேலும் பரப்புவார்கள். திரு. அப்துல்கலாம் இந்திய வரலாற்றில் சாதனையாளர்கள் வரிசையில் என்றோ இடம்பெற்றுவிட்டார், அதிலிருந்து இடம் பெயர்த்தல் என்பது இனி சாத்தியமில்லை. அவருடைய மதிப்பு மென்மேலும் பெருகிக்கொண்டே பொகும் என்ற நிச்சயமான எண்ணம் அனைவரிடமும் இருக்கும் என்றே கருதுகிறேன்.

(தொடரும்)

No comments: