Tuesday 18 August 2009

கலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish

Sword Fish said...

Your question is: Why does anmikam (meaning of this word, as used by you, is confusing) put off people today, unlike in the past?

Instead of answering the question in simple terms, you have rambled so much that I dont understand what is in your mind - except at the end, where, the meaning of anmikam, according to you, appears to be one that goes beyond religion and the god the religions point to. You want that anmikam to be detached from religion, god, and rituals and ceremonies. But this does not answer the question: why is anmikam unpopular today?

Please write clearly.

சம்பந்தபட்ட பதிவு http://ellaam-irukkum-varai.blogspot.com/2009/08/blog-post_18.html

--------------------------------

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது. மீண்டும் படித்தாலும் சிரிப்பு வரத்தான் செய்கிறது. மிகவும் ரசிக்கிறேன்

இவர் தனது மனதில் உள்ளதை அப்படியே சொல்லிச் சென்றவிதம்தனைப் பார்த்து மிகவும் ரசித்துக் கொண்டிருக்கலாம். கடைசியில் தயவுசெய்து தெளிவாக எழுது என்று சொன்னவிதம் மிகவும் நன்றாக இருந்தது.

ஏதோ எழுதுகிறோம் என்ற நினைப்பைப் போக்கும் விதத்தில், சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என அழுத்தமாகச் சொல்லிச் சென்ற விதம் மிகவும் அருமை.

நானும் பலருடைய இடுகைகளுக்குப் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறேன், சில இடுகைகளில் பின்னூட்டம் இடாமல் வந்துவிடுவேன். எனது பின்னூட்டங்கள் பல சிதறிக் கிடக்கின்றன. பின்னூட்டங்கள் கூட பயனளிக்கும் விதமாக அமைந்தால் எத்தனை நல்லது என்பதை இன்று இரண்டாவது முறையாக காண்கிறேன்.

நாம் நமது வலைப்பூவில் எழுதுவது மட்டும் அல்ல எழுத்து, பிறரது வலைப்பூவிலும் எழுதுவதும் எழுத்துதான். எனவே நமது எண்ணங்கள் பயன்படுமாறு எழுதுவது இன்றியமையாததாகிறது.


6 comments:

Jerry Eshananda said...

பதிவை படித்தேன், "ரொம்ப ஜாக்கிரதையாய் தான் எழுதணும் போல".
கொஞ்சம் பயம்மாதான் இருக்கு தல.

நிகழ்காலத்தில்... said...

முந்தய இடுகையைனை படித்தேன், அதன் தொடர்ச்சியாக சில விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பின்னூட்டத்தில் பகிர்ந்தால் பெரிதாக இருக்கும் என்பதால் ’நிகழ்காலத்தில்’ விரைவில் பகிர்கிறேன்

வாழ்த்துக்களுடன்

Vidhoosh said...

ha ha.... very nice.

sakthi said...

nice post

வால்பையன் said...

நிச்சயமாக! ஆனால் யாருக்கு பயன்படுமாறு எழுதனுங்கிறது பெரிய பிரச்சனை!
அதனால் உங்களுக்கே பயன்படுமாறு எழுதிதள்ளுங்க!

எப்பூடி!?

Radhakrishnan said...

1. ஜாக்கிரதையாக எழுதுவதை விட தெளிவாக எழுதுவது நல்லது, பயமெல்லாம் வேண்டாம், பயப்பட்டால் எப்படி கற்றுக்கொள்வது?! மிக்க நன்றி ஜெர்ரி ஈசானந்தா அவர்களே.

2.தாங்கள் எழுதியதை இன்றேப் படித்து விடுகிறேன், மிக்க நன்றி ஐயா.

3.மிக்க நன்றி வித்யா.

4.மிக்க நன்றி சக்தி.

5. ஆஹா, சத்தியமான வார்த்தை. நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அசத்தல். மிக்க நன்றி வால்பையன் அவர்களே.