Thursday 13 August 2009

சிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.

'Every Little Helps'

ஒரு பெரிய கடையின் விளம்பரம் இது. இதைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் ஒரு பெரிய தைரியம் வந்து சேரும். அது அவர்களின் வியாபார உக்தி என நினைத்துக் கொண்டாலும் நமது அன்புக்கும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். சின்ன சின்ன உதவிகள், சின்ன சின்ன பாராட்டுகள் மனிதனை சந்தோசமாகவும், நலமுடன் இருக்கவும் வழிவகை செய்யும்.

மனிதநேயம் இறந்து போய்விட்டதாகவும், மானுடம் எந்த வழியில் செல்கிறது என வருத்தப்பட்டும் இருப்போர்களுக்கிடையில் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சக மனிதன் துயரப்படுவதைக் கண்டு அவனுக்கு உதவிட துடிக்கும் உள்ளங்கள் உண்டு என்பதை பல பொழுதுகளில் பார்த்திருக்கிறேன்.

திரு.செந்தில்நாதன் அவர்கள் இதய நோயால் அவதியுறுவதைக் கண்டு அவருக்கு உதவிட இணைந்திருக்கும் நண்பர்கள் கண்டு பெருமிதம் கொள்கிறேன். திரு. கே.வி.ராஜா என்பவர் எழுதிய திரு.செந்தில்நாதன் பற்றிய பதிவினை

முத்தமிழ்மன்றத்தின் நிதியிலிருந்து உதவிடக் கேட்டு முத்தமிழ்மன்றத்தில் இணைத்தேன். நிச்சயம் முடிந்ததைச் செய்யலாம் என சொல்லி இருக்கிறார்கள். இதுபோல் நீங்கள் சார்ந்திருக்கும் வலைத்தளங்களிலும் நண்பர்களைக் கேளுங்கள். உதவி புரியும் நிலையிலிருப்பவர்கள் நிச்சயம் உதவுவார்கள் எனும் நம்பிக்கை நிறைய உண்டு.

திரு. செந்தில்நாதன் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

2 comments:

ஜோ/Joe said...

நன்றி!

Radhakrishnan said...

மிக்க நன்றி ஜோ அவர்களே.