Tuesday 4 August 2009

மென்மை உணர்வு

மலையின் அடிவாரத்தில் மழைத்தூறலில்
மனதிற்கு பிடித்த உன்னுடன்
மனம் அறிய பேசிய நேரம்
மாலையெனினும் ஒளி வெள்ளம்
எனது விழிதனை வெட்டிக் கொள்ளும்

மலர் கிழித்து மெளனம் சாதிக்கின்றாய்
செடியின் வலியினை அறியாமல்
மென்மை உணர்வினை நீ சொல்லும் முன்
என் எண்ணமெங்கும் கிழிந்த மலரின் சிராய்ப்புகள்
மழைத்தூறல் இனி அது நிற்கும்
எனது விழிகளுக்கு வழிவிட்டு

உதிர்த்த மரக்கிளையின் மேல்
மெல்லிய உக்கிரப் பார்வை கொண்டே
சருகுகள் நீரில் நனைக்கின்றாய்
உயிரது தொலைந்தது தெரியாமல்
உன் மனம் என்னிடம் சொல்லாமல்

மெல்லிய புன்னகை ஏந்தியே
கைகள் சேர்த்து வார்த்தை கோர்க்கின்றாய்
எனக்குப் பிடிக்காத செயலதை
நீ புரிந்திடும் போது
உன் மனம் விலக்காத நிலை
நான் கொள்வேனெனின்
மென்மை உணர்விற்கு அர்த்தம் வரும்
சிராய்ப்புகள் சிரிக்கின்றது என்னை நோக்கி
மனதிற்கு உன்னை
இப்போது மிகவும் பிடித்திருக்கிறது.

2 comments:

Vidhoosh said...

Simply nice.
-vidhya

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா.