Monday 17 August 2009

உயிரது உணர்வற்றது

செல்கள் பொசுக்குவாய்
தசை எரிப்பாய்
உறுப்புகள் உருக்குவாய்
நெருப்பே நீ
உயிர் எரித்ததுண்டா?

உள்ளும் வெளியுமாய் செல்வாய்
ஓரிடத்தில் ஒழுங்காய் நில்லாய்
உலகதில் தொடாத பாகமில்லை
காற்றே நீ
உயிரைத் தீண்டியதுண்டா?

வாயுவாய் மாறுவாய்
பனிப்பாறையுமாக ஆகுவாய்
வாழ்வது உன்னில் தொடக்கமாம்
நீரே நீ
உயிரை உருவாக்கியதுண்டா?

எட்டாத தொலைவுக்கு உன் பாதை
எட்டும் தொலைக்கு உன் பார்வை
தொடக்கமுமின்றி முடிவுமின்றி
பால்வெளி வீதியே நீ
உயிரை உள்ளடக்குவாயா?

உணர்வில் அறிந்த உணர்வில்
உட்படாத அரியதுவாம்
பெரியதாகியும் சிறியதாகியும்
உயிரே நீ
உயிரில்லை என உணர்வாயா?

No comments: