Thursday 13 August 2009

ஆழ்வாரோடு நாயன்மார்கள்

துள்ளும் மில்லி விநாடியிலும்
மனம் ததும்பும் பொருள் கொண்டு

அருள்கொண்ட தூயவனை
அன்பால் சிந்தித்து அழகிய தமிழில்
போற்றி போற்றி பாடிய பாவினில்

பொல்லாத சிந்தனை நீங்கும்
கண்கள் அலையடித்து இதயம் செழிக்கும்

உன்னை நோக்கி நானும்
ஏங்கியே எழுதுகிறேன்

நானும் ஓர் நாள்
ஆழ்வார்களில் ஒருவனாய்
நாயன்மார்களில் ஒருவனாய்
மாறிட வேண்டி

மனமுருகி இருக்கையில்
மெல்லமாய் வந்து
சொல்லிச் செல்கிறது தும்பி

பலன்நோக்கி செய்யும் செயலதில்
இறைவனது சிந்தை நிற்பதில்லை

எழுதுவதால் மட்டும்
ஆழ்வார்கள் ஆவதில்லை
எழுதுவதை மட்டுமே
நாயன்மார்கள் செய்ததில்லை

நாணிக் கொள்கிறேன்
அவர்கள் போன்று
ஆகமுடியாது போவதற்கு!

2 comments:

Raghav said...

ஆஹா.. தங்கள் ஏக்கத்தை அருமையாக வடித்துள்ளீர்கள்.. ஆழ்வார்கள் பக்தியில் ஆழ்ந்தவர்கள் மட்டுமல்ல நம்மையும் பக்தியுள் ஆழ்த்துபவர்கள், அதனாலே தான் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.

Radhakrishnan said...

அது மட்டுமல்ல, மக்கள் சேவையும், அன்பே வாழ்க்கை எனவும் வாழ்ந்து வந்தார்கள். மிக்க நன்றி ராகவ் அவர்களே.