Friday 7 August 2009

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1

1.

சிறு வயதில் இருந்து படிக்கிறோம். படிக்கும்போது ஒரு சிலருக்கு ஒரு சில பாடங்கள் மட்டுமே பிடிக்கும். அதன் மேல் அக்கறை கொண்டு படிப்பார்கள். எல்லா பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும் ஒரு சில பாடங்கள் மட்டும் மனதில் அகலாது நிற்கும். அப்படி வருடங்கள் ஓடி குறிப்பிட்ட பாடம்தனை தேர்வு செய்து அல்லது குறிப்பிட்ட பிரிவுதனை தேர்வு செய்து படிக்கும் போது எதற்கு படிக்கிறோம் என சில வேளைகளில் புரியாது. அதையும் தாண்டி ஆராய்ச்சியாளனாக ஒரு துறையை எடுத்துக் கொள்கிறோம் என வைத்துக் கொண்டால் அதில் நமது வாழ்நாள் முழுவதும் செலவிட முடியுமா என ஒரு ஐய உணர்வு வந்து விடும். இப்படியாக படித்து பட்டங்கள் பெற்று இச்சமுதாயத்திற்கு என்னதான் செய்ய முடிகிறது எனப் பார்த்தால் நிறைய இருக்கிறது. வாழ்ந்த விஞ்ஞானிகள் வாழ்கின்ற விஞ்ஞானிகள் முதல் ஒவ்வொருவரும் பல விசயங்களை அனுபவப்பட்டு இருக்கிறார்கள். அந்த அனுபவம் பெரும் உதவியாக இருக்கிறது.

இந்த முயற்சி பயன் அளிக்கும் என நம்புகிறேன். சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் உபயோகிக்க வேண்டி வரும் அதனால் பொறுத்துக் கொள்ளுங்கள்.

நீ இருக்கிறாய் என்ற உண்மையில்
நான் உண்மையுடன் வாழ்கிறேன்

நோய் என வந்தபோது இந்த தாவர இனம் நம்மை காத்தது என்று சொன்னால் மிகையாகாது. இயற்கையாக தாவரத்தில் இருந்து கிடைத்த அரும்பெரும் மூலக்கூறுகளே மருந்து துறையின் முன்னோடி. இந்த வழக்க முறையை பின்பற்றி பல வியாதிகளை தீர்த்து வந்து இருக்கிறோம் என்பது உண்மை. இருப்பினும் பல கலப்படங்கள் இருந்ததாலும் உரிய முறையில் செயல்படுத்த படாததாலும் இந்த "ஆயுர்வேதிக்" எனப்படும் அரும் பெரும் மருத்துவம் கண்டு கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு மருந்துக்கும் பின்னால் ஒரு தாவரம் ஒளிந்து இருக்கிறது.

'மிளகு' இதில் இருக்கும் 'பைப்பெரின்' எனப்படும் மூலக்கூறும் 'சிகப்பு மிளகாய்' யில் இருக்கும் 'கேப்சாய்சின்' என்னும் மூலக்கூறும் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவை இரண்டும் எனது ஆராய்ச்சியில் பங்கு கொண்ட மூலக்கூறுகள்.

'பட்டை' எனச் சொல்லப்படும் "சின்னமன்" தென் இந்தியாவிலும் இலங்கையிலும் மிகவும் பிரபலம். இந்த மரப் பட்டையை எடுத்து தண்ணீரில் ஊறப் போடுவார்கள். இந்த பட்டையில் உள்ள வாசனை எண்ணையானது ஜலதோசத்துக்கு உதவும். இது 'சின்னமால்டிகைடு' என்னும் மூலக்கூறினை பெற்றுள்ளது.

எப்படி இந்த மூலக்கூறுகள் எல்லாம் தாவர இனத்தில் ஒளிந்து கொண்டன எனபது மிகவும் ஆச்சரியமான விசயம். அதிசயமான மூலக்கூறுகளும் உள்ளே இருப்பதை கண்டு வியந்து போயினர் என்பதைவிட வியந்து போனேன்! தாவர இனம் மட்டுமா? விலங்கினமும், மனித இனமும், கடல் வாழ் உயிரினமும் மூலக்கூறுகள் பெற்று இருந்தன. இது இயற்கையாகவே அமைந்த விசயம்!

இப்படி அமைந்த மூலக்கூறுகளின் முன்னோடியான அணுக்களை பார்ப்போம். வேதியியல்தனை விளக்குவதும் புரிந்து கொள்வதும் கற்பனை திறனைப் பொருத்தது. அறிவியலுக்குள் நுழைகிறேன் என் அறியாமையை கண்டால் மன்னிக்கவும்.

(தொடரும்)

4 comments:

Unknown said...

Excellent start.

Radhakrishnan said...

மிக்க நன்றி பாஸ்கர் அவர்களே.

மோசா said...

Good effort.....

Radhakrishnan said...

மிக்க நன்றி செல்வகுமார் அவர்களே.