Wednesday 14 July 2010

அதிகாலை குருவிகள்




சூரியனே


குயில்கள் குரல் கேட்க குளிர்ச்சியாய்

எழுந்து வந்தாயோ

செந்தூர வானத்தில்

வெள்ளை வட்ட பொட்டு வைத்து



குருவியே

ஒற்றைக்காலில் நின்று

ஒய்யாரமாய் உன் குரல்வளம்

சரிசெய்கிறாயோ

அதென்ன சூரிய

நமஸ்காரம் செய்யாமல்

இந்தப் பக்கம் பார்வை



மகிழ்வைத் தந்து விடுவாய்

மனதில் வைத்து போற்றுகிறேன்

அதிகாலை என்றும் அழகுதான்

அதிலும் உன்குரல் மெல்லிய இசைதான்

குருவியே உன்குரல் பிடிக்கும்

உன்குரல் மட்டுமே பிடிக்கும்

எனக்காக நீ பாடும் பாடல்!

5 comments:

Gayathri said...

அருமை..குருவியய் கூட அழகாய் ரசித்து கவிதையாய் எழுதி இருக்கிரீர்கள் மகிழ்ச்சி..கலக்குங்க..

VELU.G said...

அருமை நண்பரே

தமிழ் உதயம் said...

செல்போன் டவர்களால் குருவிகளையே பார்க்க முடியலயே.

மதுரை சரவணன் said...

கவிதையில் குருவி பறக்கிறது . வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

நன்றி காயத்ரி.

நன்றி வேலு.

நன்றி தமிழ் உதயம் ஐயா.

நன்றி சரவணன்

நன்றி ஸ்டார்ஜன்