Thursday 12 February 2009

தலைவிதி தலைமதி - 5 பிரார்த்தனையும் நோயும்

இந்த ஆராய்ச்சி முடிவு வந்தவுடன் இதுகுறித்து என்னவெல்லாம் ஆராய்ச்சி வந்திருக்கிறது என அறிவியல் கட்டுரைகள் எல்லாம் தேடிப்பார்த்ததில் மூன்று கட்டுரைகள் மட்டுமே வெளிவந்து இருந்ததை அறிய முடிந்தது என்கிறார் ஸ்டீபென் பேரட். அந்த ஆராய்ச்சியானது பிரார்த்தனைகளினால் மக்களிடம் என்ன மாறுபாடு இருந்தது என கண்டறிய செய்யப்பட்ட ஆராய்ச்சி, அந்த மக்களுக்கு பிரார்த்தனை செய்வது பற்றி தெரியாமல் இருக்குமாறு வைக்கப்பட்ட ஆராய்ச்சி என்கிறார்.

இதில் ஒரு ஆராய்ச்சி பிரார்த்தனையினால் பலன் இருக்கிறது என சொன்னது ஆனால் செய்முறை முறையாக செயல்படுத்தவில்லை எனவும், மற்றொரு ஆராய்ச்சி பலன் இல்லை ஆனால் செய்முறை மிகவும் முறையாக செயல்படுத்தப்பட்டது எனவும் மற்ற ஆராய்ச்சி அத்தனை தெளிவாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

பல ஆராய்ச்சி நூல் வெளியீட்டாளர்களையும், வாசகர்களையும் இது குறித்த ஆராய்ச்சி பற்றி ஏதேனும் மறுத்து இருக்கிறீர்களா, எத்தனை ஆராய்ச்சி கட்டுரை வெளியிட கோரி வந்தது என விசாரித்தபோது ஒருத்தரும் பதில் சொல்லவில்லை. அதற்கு பின்னர் தேடிப்பார்த்தபோது நான்கு ஆராய்ச்சி கட்டுரை வெளிவந்ததில் இரண்டு பலனிருப்பதாகவும், இரண்டு பலனில்லை எனவும் வந்ததாக குறிப்பிடுகிறார். இங்கேதான் இந்த அறிவியலும் அறியாமையில் தவிக்கிறது! நம்பிக்கையாளர்கள் என்ன சொல்வார்கள்? நம்பிக்கையற்றவர்கள் என்ன சொல்வார்க்ள்? உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

பைர்ட் ஆராய்ச்சி பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆராய்ச்சியாளரின் முடிவு நியாயமற்றது என்றார். வேறோரு பயம், மனநிலை மாற்றம் ஆராய்ச்சி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதில் பன்னிரண்டு வாரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு பிரார்த்தனை செய்யப்படவில்லை. இந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து பிரிவுமே முன்னேற்றம் கண்டது, இந்த இரண்டு பிரிவிலும் மாறுபாடு இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் ஆல்கஹால் குடிப்பழக்கத்தில் பிரார்த்தனை எந்த மாற்றம் செய்யவில்லை என மற்றொரு ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள் காட்டி உள்ளார்.

1999ல் வெளியிடப்பட்ட கான்ஸாஸ் நகரத்தில் நடந்த இருதய ஆராய்ச்சியானது மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டது என குறிப்பிட்ட அவர் அவர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் முன்னேற்றம் உள்ளது எனும் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையாக விமர்சித்துள்ளார். கணக்கியலில் 11 சதவிகிதம் முக்கியத்துவமாக இருக்கலாம், ஆனால் மருத்துவ முறையில் இது ஒன்றுமே இல்லை என்பதுதான் இவரது வாதம்.

2001ல் மாயோ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் எந்த முன்னேற்றம் இல்லை எனும் இருதயப்பிரிவு ஆராய்ச்சியை குறிப்பிட்டுள்ளார். பேரட் சொன்ன வார்த்தை இதுதான்

''மேலும் இது போன்ற பல ஆராய்ச்சிகள் எதிர்மறையான முடிவினை தந்தாலும் நம்பிக்கையாளர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை, அதேபோன்று மேலும் இதுபோன்ற பல ஆராய்ச்சிகள் நேர்மறையான முடிவுகள் தந்தாலும் நம்பிக்கையற்றவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளபோவதில்லை''

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல்

சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து

கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை

எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன்

பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ்

வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்