Tuesday 10 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 5

பழனிச்சாமிச்சியின் குடும்பமே வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அத்தனை பேரையும் வாங்க என அழைத்து உட்கார வைத்தேன். எனக்கு என்ன ஆச்சரியமாகவும் அதே வேளையில் பயமாகவும் இருந்தது எனில் பழனிச்சாமியின் ஒரே தங்கை சங்கரியும், அவளது கணவருடன் வந்து இருந்தாள். பேசுவாளோ மாட்டோளோ என நினைத்துக்கொண்டே ''எப்படி இருக்க சங்கரி'' என்றேன். ''நல்லா இருக்கேன் சரசு'' என புன்னகையுடன் சொன்னாள்.

பவளக்கொடியும், மிங்கி மிங்கி பாவும், அடச் சே, நாவரசனும் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்கள். நாவரசனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார் பழனிச்சாமி. எனக்கு எதுவும் புரியவில்லை.அதற்குள் சின்னவள் பலகாரங்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டிருந்தாள். பல கதைகள் பேசினோம், ஆனால் பழைய கதை ஒன்றை மட்டும் பேசாமல் விட்டோம். எனது கணவரும் வந்தார். சங்கரியைப் பார்த்தவர் எனது கண்களைப் பார்த்தார். வயசானால் என்ன, எனக்கா கண்களால் பேசத் தெரியாது, எல்லாம் சுகமே என்றேன். அவரது முகத்தில் புன்னகை படர்ந்தது.

பேசிக்கொண்டே இருந்தால் போதுமா, சமைக்க வேண்டும் என எழுந்தேன். அதெல்லாம் வேண்டாம் என சொன்னார்கள். ஆனால் நான் சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சமையல் அறைக்குள் செல்ல நினைக்கையில் ஒரு நிமிசம் சரசு என சங்கரி சொன்னாள்.

என்னவென திரும்பிப் பார்க்க சங்கரி திருமணப் பத்திரிக்கை ஒன்றை எடுத்தாள். எனக்கு திக்கென ஆகிவிட்டது. இத்தனை நேரம் பேசியபோது திருமணம் பற்றி ஒன்றுமே மூச்சு விடவில்லை. என்ன இது பத்திரிக்கை எனப் பார்த்தேன். அப்படியே பவளக்கொடியையும் பார்த்தேன், அவளது முகம் வெட்கப்பட்டு கொண்டிருந்தது. நம்பவைத்து இப்படி செய்துவிட்டார்களே என வெகு வேகமாக மனம் பிற்காலத்துக்குச் சென்று நின்றது. ''என்னோட பையனுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வைச்சிருக்கேன், நீங்க எல்லாரும் கட்டாயம் வரனும்'' என பத்திரிக்கைத் தந்தாள் சங்கரி. அவளோட கணவர் சேலை, வேஷ்டி குங்குமம் எல்லாம் எடுத்து சங்கரியிடம் கொடுத்தார். ''யார் பொண்ணு'' என்று மிழுங்கி மிழுங்கி கேட்டேன். என்ன சொன்னேன், மிழுங்கி??? என்ன சொன்னேன், மிழுங்கி???

(தொடரும்)

2 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம் - சஸ்பென்ஸ் - எதிர்பாரா திருப்பமா - இல்லை - நல்ல முறையிலேயே முடியும் - நம்பிக்கை இருக்கிறது - நலமுடன் வாழ்க வெ.இராதாகிருஷ்ணன் - நட்புடன் சீனா