Wednesday 8 October 2008

காதல் மட்டும்

7. மாலை நேரம் தோட்டத்தில்
புல் அறுக்க வந்தாய்
புல் கட்டினை உன் தலையில்
வைத்து விடுவதற்கு பதிலாய்
நானே சுமந்து சென்ற போது
உனக்கு நாணமாக இருந்திருக்கும்

அடுத்த தினமே நீ தோட்டம்
மாற்றிச் சென்றபோது
நீ வரும் முன்னரே புல்கட்டினை
உன்வீட்டில் சேர்த்திட
முடிவு கொண்டேன்
உன்மீதான என் காதல்
எதையும் வலியென நினைப்பதில்லை
நீயும் இனி அவ்வாறு
நினைக்காதே!

No comments: