பிறவிப்பயன் எதுவென்று புரியாத நிலையின்று
கறந்தசொல் எதுவும் காதினுள் புகாது
மறதியில் மனம் சிக்குமோ மாயனே
அறம் உரைத்ததை காணுமோ?
சொற்சுடரே அழியாது நிற்கும் தவமே
அருட்சுடரே எம்மை ஆட்கொண்டு நின்றபின்
கறுக்கும் வானம் பொழியும் மழையில்
வெறுக்கும் எண்ணம் கரையுமோ?
ஐந்தெழுத்து மந்திரத்தில் அகமும் களிப்புற்று
பைந்தமிழில் புகழ்பாடும் பரந்தாமனின் எட்டெழுத்து
மந்திரத்தில் ஏதும் ஆவதில்லை என்றே
தந்திரம் செய்யுமோ மனம்
கொண்ட அருளை கூறுபோட்டு உள்பார்த்து
தீண்டலில் சுகமில்லையென்றே திருட்டு சொல்லி
வேண்டாமென ஒதுக்கிய விரக்தி நிலையை
தாண்டிட உனதருள் நாடுவனே
இக்கோலமும் புரிந்திட எனைநீயும் பணித்தாயோ
முக்காலமும் ஒருகாலமென அறிந்திட செய்தாயோ
சிக்கலையும் கலைத்திட வழியும் சொன்னாயோ
திக்கெலாம் உனையன்றி எதுவுமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
No comments:
Post a Comment