Friday 10 October 2008

பேரின்பத் தழுவல்கள் -3

உணர்வுகளினை உறுப்புகளில் உலர வைத்து
திணறும்படி இச்சைதனை பரப்பி வைத்து
ஒதுக்கித் தள்ளி உன்னிடம் ஒட்டிக்கொள்ள
பதுக்கிய உணர்வு எவ்விதம்

அழும்குரல் கேட்டு அழுதே செல்வாய்
விழும்சப்தம் கேட்டு விழுந்தே செல்வாய்
தாங்கியிருக்கும் உன்வலிமை குறைவது இல்லை
தூங்கியிருந்தயெனை எழுப்பியது எவ்விதம்

தாயும் தந்தையும் சேயும் விந்தையாகும்
நீயும் உன்நிழலும் தீராத சிந்தையாகும்
மானிடப் பிறவியில் கண்டு கொள்ள
ஊனுடம்பு உருவானது எவ்விதம்

ஆச்சரியமற்ற அதிசயமற்ற பேராளன் நீயின்றி
பூச்சியரிக்கும் செல்கள் கொண்டே புதைந்தேன்
ஒளிசிந்தும் மருந்தில் விழியின்றி யானும்
பார்த்து பணிந்தது எவ்விதம்

எவ்விதம் என்றே யானும் கேட்டிட
அவ்விதம் என்றே மந்திரம் சொன்னாய்
கேட்டிட பொறுமை தொலைத்து உனது
நீட்டிய கரம்தனை பிடித்தேன்.

No comments: