பொய்யென சொல்ல ஆரம்பித்ததும் அதில்
மெய்யும் இருக்கும் என்றே நீயும்
தாயாய் காத்து இருந்தாய் நானும்
சேயாய் விளையாடி விட்டேன்
இருநிலை வைத்ததன் நோக்கம் மனம்
ஒருநிலை எவர்கொள்வார் என்றே அறியவோ
பலநிலை பார்த்தபின் பழிசொல்லும் குணமற்று
தவநிலை எய்திட விரைந்தேன்
நடந்திடும் செயல்களில் எல்லாம் நீயென
கிடந்து உழலும் மனம் கொண்டதும்
மடிந்து எழும் மானிட பிறவிகள்
நொடிந்து போகாது இருத்திடுவாய்.
இருக்கிறாய் என்றே உரக்கச் சொல்கிறேன்
உருக்கிய உயிரை உனதென தருகிறேன்
தெளிவாய் சிந்தையில் ஒளிர்வாய் என்றென்றும்
அளிப்பாய் ஓரருள் யாவர்க்கும்.
பாதைகள் பலவென போடச் சொல்லி
போதையில் அமிழ்த்தி விட்டது போதும்
உனை அடையும் வழியானது ஒன்றேயென
வினை தீர்த்து சொல்லிடுவாய்!
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
-
இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை. நான் மெதுவாக அவரிடம் சென்று ...
No comments:
Post a Comment