Saturday 11 October 2008

பேரின்பத் தழுவல்கள் -4

அலையென நரம்புகளில் உணர்வுகள் பரவிட
சிலையென என்னை நீயும் ஆக்கினாய்
தன்னுணர்வு கொண்டு பார்த்த வேளையில்
என்னுணர்வு கொன்று சிலையானாய்!

நடுக்கம் தோய்ந்த கைகள் இழுத்தே
வெடுக்கென கொட்டிய தேளின் வலியில்
துடித்து கதறும் சிறுபிள்ளை நிலையில்
வெடித்து மூளை சிதறியது!

சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் இருளுண்டாக்கி
நேற்று இன்று நாளை மறந்து
தனித்து அடைத்து கண்கள் மூடுகையில்
மெளனித்து அமர்ந்தாய் அருகினில்!

ஒதுங்கிப் போய்விடுவென உரக்க சொல்லிட
வதங்கி வாய்வந்து நின்றிடும் வார்த்தை
விழுந்து விடாவண்ணம் உன்காலில் விழுந்தேன்
எழுந்து வாவென சொல்லாயோ!

ஏக்கம் கொண்டு கேவி அழுகையில்
துக்கம் துடைத்திடும் விரலால் தொட்டாய்
இப்பொழுதேனும் என்னுடன் இருந்திடுவென அரற்றுகையில்
எப்பொழுதும் இருப்பேனென மறைந்தாய்!

No comments: