6.உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு
கடந்த வெள்ளியன்று நீ வந்தபோது
கோவில் பிரகாரம் எனப் பாராமல்
அச்சத்தை சற்று ஒதுக்கிவிட்டு
'உன்னை மிகவும் பிடிச்சிருக்கு'
எனத் தெளிவாகச் சொல்லியபோதும்
பிடித்ததின் காரணம் என்னவென
நீ கேட்டு நின்றபோது
காரணம் தெரியாதென கலங்கிய விழிகளுடன்
உன்னைப் பார்த்தே நானும் நின்றிட
கோவில் பிரகாரம் எனப் பாராமல்
என்னை நீயும் கட்டியணைத்து காதருகில்
'என்னை மிகவும் பிடிச்சிருக்கு'
எனச் சொல்லியதன் காரணம்
நான் காரணங்கள் சொல்லாத நிலை
என்பதல்ல என உனது
கலங்கிய விழிகள் கண்டபோது
முதன்முதலில் காதலில் வெட்கம் கொண்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
-
எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மே...
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
No comments:
Post a Comment