Wednesday 8 October 2008

காதல் மட்டும்

6.உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு
கடந்த வெள்ளியன்று நீ வந்தபோது
கோவில் பிரகாரம் எனப் பாராமல்
அச்சத்தை சற்று ஒதுக்கிவிட்டு
'உன்னை மிகவும் பிடிச்சிருக்கு'
எனத் தெளிவாகச் சொல்லியபோதும்
பிடித்ததின் காரணம் என்னவென
நீ கேட்டு நின்றபோது
காரணம் தெரியாதென கலங்கிய விழிகளுடன்
உன்னைப் பார்த்தே நானும் நின்றிட
கோவில் பிரகாரம் எனப் பாராமல்
என்னை நீயும் கட்டியணைத்து காதருகில்
'என்னை மிகவும் பிடிச்சிருக்கு'
எனச் சொல்லியதன் காரணம்
நான் காரணங்கள் சொல்லாத நிலை
என்பதல்ல என உனது
கலங்கிய விழிகள் கண்டபோது
முதன்முதலில் காதலில் வெட்கம் கொண்டேன்.

No comments: