பொய் சொல்ல நினைத்தபின் இதில்
உண்மை உரைந்திருக்கும் என ஒருவரேனும்
நினைத்து ரசிப்போர் இப்பாரினில் உளரேனெனில்
உன்னையன்றி வேறு எவர் இறைவா.
கற்றதும் வந்துவிடும் இலக்கணத் தமிழ்கொண்டு
உற்றதாய் உணர்ந்ததாய் உன்னை நினைந்து
உடல் வெந்து உள்ளம் உருகுகையில்
தாயாய் இருந்து தலைவருடுவாய் இறைவா.
நோய் கொல்லும் மருந்தினை உட்கொண்டு
மெய் வளர்க்கும் நிலையது கொண்டபின்
மெய்ப்பொருள் உன்னை மனமேற்றி வைத்திட
உன்மனம் சம்மதம் தந்தாய் இறைவா.
மேனி கொண்டதன் ஞானம் புரியவைத்து
அண்டப்பேரொளி கொண்டு இருளை கொய்து
உண்டெனச் சொல்லி உறங்க வைத்து
அமைதியை போதிக்கும் அருளாளனே இறைவா.
உன்புகழ் பாடிட எண்ண வரம்வேண்டுமென
கேட்டிட வெகுளியாய் ஒதுங்கி
படிதாண்டி வந்துன் அருட்கரம் பற்றியதும்
வேண்டுதல் ஏதுமில்லை இறை வா.
Subscribe to:
Post Comments (Atom)
-
எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மே...
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
No comments:
Post a Comment