Tuesday 7 October 2008

காதல் மட்டும்

5. அம்மாவிடம் மெல்லக் கேட்டேன்
காதலித்து இருக்கிறாயா என்று
அப்பாவும் சொல்லக் கேட்டேன்
மற்றவர்களிடம் காதலை மறைத்திடுவென
காதலைப் புரிந்துகொள்ள
உன்னிடம் மெளனமாகி நின்றேன்
ஊரார் எல்லாம் நம்மை
காதலர்கள் என எண்ணாமல்
நமது உள்ளம் காதலிப்பதில்
இருக்கும் சுகம் தனிதான்!
ஊருக்குத் தெரியவா காதல்
உனக்கும் எனக்கும்தானே காதல்.

No comments: