Sunday 12 October 2008

பேரின்பத் தழுவல்கள் -5

எங்கு இனியுன்னை தேடிக் கண்டிட
சங்கு சக்கரம் தாங்கிய உருவம்
நிலவுடன் புலித்தோல் போர்த்திய உருவம்
பலவும் கண்ணை மறைத்தது!

கொண்ட எண்ணத்தில் கீறல் விழுந்திட
அண்ட சாரம்சம் அனைத்தும் பறந்திட
உருவத்தில் உன்னை வைத்துப் பார்த்ததும்
பருவத்தில் தொலைத்த காதலிது.

யாருமில்லா இடம் நோக்கி நகர்ந்திட
நீரும் சோறும் தட்டிக் கழித்து
உடுத்திய உடையை கிழித்து எறிந்து
எடுத்த கோலம் கண்டாய்.

சுற்றுச் சுவர்கள் தெரிய மறுத்தது
பற்று பாசம் நினைவு வெறுத்தது
இருப்பாய் என்றே ஒளியின் வேகத்தில்
சுருக்கிக் கொண்டேன் உயிரை.

குலுக்கியதும் சில்லென குலுங்கியது குற்றுயிர்
உலுக்கியதும் சிதறி விழுந்தன உணர்வுகள்
அறைந்து சொல்லி உறைய வைத்தாய்
மறைந்து இருப்பேனென்றது புரிந்தது.

No comments: