Tuesday 14 October 2008

பேரின்பத் தழுவல்கள் 7

இருளைத் தேடி இன்னலைத் தேடி
அருளை ஒதுக்கி அவமதிப்பினில் விழுந்து
பொருளே சுகமென போகம் பெரிதெனும்
மருள் நீக்கிட வருவாயா?

தேடலே உன்னிடம் யான் கொண்டிருந்த
ஊடலில் மனம் வதங்கி நின்றே
ஆடலில் பாடலில் உனையே கண்டு
கூடலும் கூடுமோ ஐயனே

உனைபற்றி சுதந்திரமாய் பேசுவதில் மனமின்றி
எனைபற்றி எவ்விதமும் உரைத்திடும் போதிலும்
வினையற்று நிற்கின்ற காட்சியாய் கண்டே
முனைப்பற்று போனது தவறே

நாரணனே உனை நாடியே வந்து
பேரருளே தந்திருந்த பெருமையுள ஈசன்கண்டு
கோரமும் கோபமும் அற்ற சாந்தம்
ஓரமாய் மனதினுள் விரியுமே

தெய்வம் உனையன்றி வேறில்லை என்று
மெய்யாய் பலரும் உரைத்ததை கேட்டும்
பொய்யில் விழுந்த புண் மனத்தை
ஐயனே அம்மையே காத்தருள்வீரோ?

No comments: