இருளைத் தேடி இன்னலைத் தேடி
அருளை ஒதுக்கி அவமதிப்பினில் விழுந்து
பொருளே சுகமென போகம் பெரிதெனும்
மருள் நீக்கிட வருவாயா?
தேடலே உன்னிடம் யான் கொண்டிருந்த
ஊடலில் மனம் வதங்கி நின்றே
ஆடலில் பாடலில் உனையே கண்டு
கூடலும் கூடுமோ ஐயனே
உனைபற்றி சுதந்திரமாய் பேசுவதில் மனமின்றி
எனைபற்றி எவ்விதமும் உரைத்திடும் போதிலும்
வினையற்று நிற்கின்ற காட்சியாய் கண்டே
முனைப்பற்று போனது தவறே
நாரணனே உனை நாடியே வந்து
பேரருளே தந்திருந்த பெருமையுள ஈசன்கண்டு
கோரமும் கோபமும் அற்ற சாந்தம்
ஓரமாய் மனதினுள் விரியுமே
தெய்வம் உனையன்றி வேறில்லை என்று
மெய்யாய் பலரும் உரைத்ததை கேட்டும்
பொய்யில் விழுந்த புண் மனத்தை
ஐயனே அம்மையே காத்தருள்வீரோ?
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மே...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
No comments:
Post a Comment