Tuesday 7 October 2008

காதல் மட்டும்

3. தாயம் விளையாட வேண்டுமென
நீ ஆவலுடன் சொன்னதும்
முத்துக்களை ஒருபக்கம் உராய்ந்ததில்
எழுந்த வெப்ப அனலில்
மிதமான குளிர்ச்சியை உணர்ந்தேன்
அவசரமாய் வாங்கிச் சென்று
உன் தோழியருடன் நீயும்
சிரித்து விளையாடுகையில்
தேய்ந்த கல்லில் நானும்
சாய்ந்து அழுததை அறிவாயா?
உன்னுடன் இருப்பதே
என் சந்தோசம் என நானும்
வட்டம் போட்டுக்கொண்டதை
உன் நெற்றிப் பொட்டும் அறியுமா?

No comments: