Friday, 26 February 2010
மக்கா சோளம்
மெல்லத்தான் ஓடிப்போய்
வாழைப்பழம்னு கையில் எடுத்தே
தோலை உரிக்கும் வேகத்தில்
இழுத்துப் பார்க்க
முத்தாய் ஒன்று வந்தது
என்னவென்று ருசித்துப் பார்க்க
இனிப்பாய் இருந்தது
ஒவ்வொரு முத்தாய்
விழுங்கிக் கொண்டே
வாழைப்பழம் அல்லாது இருக்கும்
இந்த மஞ்சள் வெயில் முத்துக்கு
பெயர் என யோசித்து நிற்கையில்
வழியில் நடந்த இருவரில் ஒருவர்
'இங்க பாருடா மக்கா
உன் ஆளு மக்காசோளம் திங்குது'
கேட்டவுடன் மனதுக்குள்
சொல்லிக் கொண்டேன்
நான் உங்க முன்னோர்தான் மக்கா!
இனி எனக்கு வாழைப்பழமும்
தேங்காய் சிதறலும் வேண்டாம்
மக்காசோளம் ஒன்றே போதும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
-
இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை. நான் மெதுவாக அவரிடம் சென்று ...

12 comments:
படமும் அதற்கேற்ற உங்கள் கவி கருவும் நல்லா இருக்குங்க.
:))
கவிதையில் முன்னேர்கள் . முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்
very nice
ம்ம்ம்...இப்பிடியும் சிந்திச்சு ஒரு கவிதை.
நல்லாத்தானிருக்கு.
அனைவருக்கும் மிக்க நன்றி. :)
பிரமாதம் உங்கள் கவிதை.பிடிச்சிருக்குங்க.........
படத்திற்கேற்ற கவிதை சுப்பர்....
நல்லா இருக்கு நண்பா
:)
இதுதான் பரினாம வளர்ச்சியா இருக்குமோ...?
nice
பிரமாதம் என பாராட்டிய விடிவெள்ளி அவர்களுக்கு, நன்றாக இருக்கிறது என பாராட்டிய பேநா மூடி அவர்களுக்கும், புன்னகை புரிந்த சிவாஜி சங்கர் அவர்களுக்கும், பரிணாம வளர்ச்சியாக இருக்குமோ என கேள்விகள் எழுப்பிய புலிகேசி அவர்களுக்கும், அருமை என ஆங்கிலத்தில் சொன்ன தியாவின் பேனா அவர்களுக்கும் எனது நன்றிகள்.
Post a Comment