Tuesday 23 February 2010

மகாத்மா துயில் கொள்ளும் இடம்



இன்னும் கூட எனக்கு அதிசயமாய் இருக்கும்
உன்னால் எப்படி முடிந்தது

பிரிவைப் பற்றி சிந்திக்கும் மனிதரிடம்
உறவின் பெருமையை வளர்த்தது எப்படி

வாடிய பயிரை கண்டு வாடியவர் போலே
ஆடை இல்லா மனிதர் கண்டு அகம் 
கண்ணீர் வடித்தது ஆடை துறந்தாய்

அரிச்சந்திரன் பார்த்ததால் உண்மை தத்துவம் 
உணர்ந்ததாய் உலகுக்கு சொன்னாய்

இங்கிலாந்து வந்தா பாரிஷ்டர் பட்டம் பெற்றாய்

கால் கடுக்க நடக்கவும்
ஒத்துழைப்பின்றி உணவின்றி போராடவும்
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது

முதலில் கடிகாரமும் கையில் தடியும்
உன் படம் பார்த்துதான் உன்னைத் தெரியும்

சத்திய சோதனை படித்த பிறகே
இறந்தும் நீ இருக்கிறாய் எனப் புரியும்

அகிம்சை வழியில் சுதந்திரம் வாங்கி தந்து
சுடப்பட்டு நீ கிடைக்கையில்
நீ வாழ்ந்த காலங்களில் நான்
பிறந்து இருக்க கூடாதா

என் உயிர் தந்து இன்னும் வாழ்ந்து இருப்பேன்

உன் உயிர் சமாதியினில் வருகையில்
ஒன்றை மட்டும் எனக்குள் கேட்பென்

இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை வேண்டும்
இந்தியா என்றும் சிறந்திட வேண்டும்.

3 comments:

Paleo God said...

அந்த இடம் போனபோது என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வில் இருந்தேன்..!

நல்ல கவிதை.. வாழ்துகள் நண்பரே.

Ashok D said...

அட அட...

Radhakrishnan said...

மிக்க நன்றி ஷங்கர், அசோக்