Monday 1 November 2010

நுனிப்புல் பாகம் 2 (21)

21. ஆணும் பெண்ணும்

நாட்கள் நகரத் தொடங்கின. தினமும் காலையில் மலையடிவாரத்திற்குச் செல்வதும் மலையின் மேல் ஏறிச் செல்லாமல் அங்கே கீழேயே அமர்ந்து பேசுவதுமாக பெரியவருக்கும் வாசனுக்கும் நாட்கள் கழிந்தது. ஒவ்வொரு நாளும் வாசனுக்கு ஏதாவது அறிவுரை ஒன்றை சொல்வதை கடமையாக்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 

மழையில் நனைந்த நோட்டினை வாசன் இப்பொழுதெல்லாம் எடுத்து வருவதில்லை. பெரியவர் தன்னுடன் எந்த நோட்டையும் கொண்டு வருவதில்லை. வாசனுக்கு அம்மா அப்பாவின் ஞாபகமும் ஊரின் ஞாபகமும் வந்திருந்தது. எப்பொழுது செடி கிடைக்கும், விதை கிடைக்கும் என வாசன் பரபரப்புடன் இருந்தாலும் பெரியவர் மிகவும் நிதானமாகவே காணப்பட்டார். 

அன்றைய தினம் வழக்கம்போல மாலையில் பார்த்தசாரதியின் வீடு வந்து சேர்ந்தனர் இருவரும். வந்தவுடன் நேராக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வாசன் சென்றுவிடுவது வழக்கம். சிறிது நேரம் அனைவருடன் பேசினாலும் அவரவர் வேலை என இருப்பதால் வாசனின் நேரம் பெரியவருடனே கழிந்தது. 

அன்று வாசன் விஷ்ணுப்பிரியனைச் சந்திக்கச் சென்றான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் நலம் விசாரித்தார். சுபாவும் வரவேற்றார். வாசன் நேரடியாகவேக் கேட்டான். 

''
எப்படி குளோனிங் எல்லாம் பண்றது?''

''
இப்ப பண்றதில்லை''

''
எப்படி பண்ணினீங்க''

''
சிரமமான காரியமாத்தான் இருந்தது, ஆண்டாள் மேல பாரத்தைப் போட்டு பண்ணிட்டேன்''

''
பையனாகவே இருக்குமா குழந்தை''

''
ஆமாம்''

''
பொண்ணாக மாறிச்சினா''

''
அப்படியெல்லாம் மாறாது''

''
அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க''

''
குளோனிங்கல் எந்த நியூக்ளியஸை வைக்கிறோமோ அதோ நியூக்ளியஸ் தன்மையுள்ள குழந்தைதான் பிறக்கும், இப்போ பெருமாளோட நியூக்ளியஸ் பெருமாளாவே பிறக்கும்''

''
பூங்கோதை?''

''
பூங்கோதை கருவைச் சுமக்கிற தாய், அவங்க நியூக்ளியஸ் இதுல இல்லை, ஆமா நியூக்ளியஸ் எல்லாம் தெரியுமா வாசன் உங்களுக்கு, எந்த குழந்தை பிறக்கும்னு தெரியுமா?''

''
ஜனவரி மாசம் கருத்தரிச்சா ஆண் குழந்தைப் பிறக்கும்னு ஐதீகம் தெரியும்''

வாசன் சொன்னதைக் கேட்டதும் விஷ்ணுப்பிரியன் சத்தம் போட்டு சிரித்தார். வாசன் தொடர்ந்தான். விஷ்ணுப்பிரியனின் சிரிப்பொலி கேட்டு சுபா என்னவென சமையல் அறையில் இருந்து வந்தார். 

''
கருவாகி நிற்கிறவங்க கையை வயித்துக்கு மேலே வைச்சா அது பொண்ணு, வயித்துக்கு கீழே வைச்சா அது ஆணு அப்படிங்கிற பாட்டிக் கதையும் தெரியும்''

விஷ்ணுப்பிரியன் தொடர்ந்து சிரித்தார். சுபா வாசன் சொன்னதைக் கேட்டு புன்முறுவலிட்டுக் கொண்டவாறே சமையலைறைக்குள் சென்றார். வாசன் நிறுத்தினான். 

''
வாசன், நீங்க இவ்வளவு புத்திசாலியா இருப்பீங்கனு நான் எதிர்பார்க்கலை'' 

விஷ்ணுப்பிரியன் சிரித்துக்கொண்டே சொன்னார். வாசன் தலையை குனிந்து கொண்டான். விஷ்ணுப்பிரியன் படம் எடுத்து காண்பித்தார். ஒவ்வொன்றாக விளக்கினார். 

''இதோ பாருங்க வாசன், செல்கள் பொதுவா மைட்டாசிஸ் அப்படிங்கிற முறையில இரண்டாப் பிரியும். அப்படிப் பிரியறப்போ இரண்டா இணைஞ்சிருக்க குரோம்சோம்கள் தனித்தனியா இரண்டாப் பிரியும். இப்படி இரண்டாப் பிரியற குரோம்சோம்கள் தனக்கு தனக்குனு ஒரு புது குரோம்சோம்களை உருவாக்கிக்கிரும், இப்போ அந்த குரோம்சோம்கள் ஒவ்வொரு துருவத்துக்கும் போகும். செல் பக்கவாட்டில பெரிசாகி நடுவுல பிரியறப்போ ஒரு புது குரோம்சோம்கள் புதுசா உருவாகின இரண்டு செல்லுக்கும் கிடைச்சிரும். இப்படி உருவாகிறதுதான் நம்ம உடம்புல நடக்கிறது. ஆனா விந்து செல்லும், அண்ட செல்லும் உருவாகிற விதமே தனி. இந்த இரண்டு செல்லுக்கும் அது அதுக்கு ஒரே ஒரு குரோம்சோம்தான் இருக்கும். இந்த செல் பிரிவை மியாசிஸ் அப்படினு சொல்வாங்க.






இப்போ ஒரு செல்லிலிருந்து பிரியற குரோம்சோம்கள் தனித்தனியா இரண்டு செல்லுக்குப் போய் நிற்கும். குரோம்சோம்கள் எக்ஸ் ஒய் வடிவுல இருக்கும். ஆணுக்கு எக்ஸ் ஒய் குரோம்சோம்கள். பெண்ணுக்கு எக்ஸ் எக்ஸ் குரோம்சோம்கள். இப்படி நாலு குரோம்சோம்கள் தனித்தனியா இருக்கும். இப்போ ஆணோட எக்ஸ் குரோம்சோம் பெண்ணோட எக்ஸ் குரோம்சோமோட இணைஞ்சா பிறக்கறது பெண்ணாப் பிறக்கும், ஆணோட ஒய் குரோம்சோம் பெண்ணோட எக்ஸ் குரோம்சோமோட இணைஞ்சா பிறக்கறது ஆணாப் பிறக்கும் புரியுதா வாசன்?''

''பெருமாள் தாத்தா எப்படி பெருமாள் தாத்தாவாவே வருவார்?''

''
நான் வைச்சது பெருமாள் நியூக்ளியஸ் மட்டும்தான், இது உடல் செல்லிருந்து எடுத்தது அதனால எக்ஸ் தனியாகவோ, ஒய் தனியாகாவோ நான் பிரிச்சி வைக்கலை அப்படியேதான் வைச்சேன்''


படங்கள் : நன்றி கூகிள் 

''
எனக்கு எதுவுமேப் புரியலை, இந்த படத்தில் இருக்கிறத தமிழ்படுத்தினா நல்லா இருக்குமே''

''
உனக்கு ஜெனிடிக்ஸ் பத்தி முதல்ல இருந்து சொன்னாத்தான் புரியும், தினமும் ஒன்பது மணிக்கு இங்க வா, ஒரு மணிநேரம் சொல்லித்தரேன்''

''அதெல்லாம் வேண்டாம். 
பூங்கோதைக்கும் கேசவனுக்கும் பெருமாள் தாத்தா இல்லாம வேற பிறக்கப்போற குழந்தை என்ன குழந்தையா இருக்கும்னு நினைக்கிறீங்க?''

''
பெண் குழந்தையாப் பிறக்கனும்னு ஆண்டாளை வேண்டிக்கிறேன்''

''
ஏன்?, நீங்க வேண்டிகிட்டா மட்டும் அப்படி பிறந்துரமா?''

''
சக்திக்கு அண்ணனாக வருவதுதானே பெருமாளுக்கு அழகு''

"அப்படி நடக்காது"

"நல்லாவே ஜோசியம் சொல்றோம் வாசன்"

விஷ்ணுப்பிரியன் சொல்லக் கேட்டதும் வாசனுக்கு தலை விண்ணென்று வலித்தது. குரோம்சோம்கள் மனதை குழப்பம் அடையச் செய்து இருந்தது. வாசன் தலைவலிப்பதாக கூறிவிட்டு ஹார்லிக்ஸ் அருந்திவிட்டு உடனடியாக கிளம்பிச் சென்றான். உனக்கு எதுவுமே தெரியாதா வாசன் என அவனுக்குள் யாரோ கேள்வி கேட்பது போல் இருந்தது. 

அந்த இரவே பெரியவரிடம் விஷ்ணுப்பிரியன் சொன்ன விசயத்தைச் சொன்னான் வாசன். பெரியவர் புரிந்ததுபோல் சிரித்தார். வாசன் புரியாமல் பெரியவரிடம் அவன் சொன்னது புரிந்ததா எனக் கேட்டான். பெரியவர் இதை நிர்ணயிப்பவன் யார் எனத் தெரியுமா எனக் கேட்டார். வாசனுக்கு பேசாமல் தூங்கலாம் என இருந்தது. இதோடு பெரியவர் ஒவ்வொரு நாளும் கேட்ட கேள்விக்குத் தெரியாது என பதில் சொல்லியே பழகிக் கொண்டான் வாசன். பெரியவர் இன்றைய தேடலும் இன்றோடு முடிந்தது என்றார்.

மறுநாள் காலையில் கல்லூரிக்கு விடுமுறை என்பதால் பூங்கோதை வீட்டிலே இருந்தாள். சாப்பிட வந்த வாசனிடம் பேச வேண்டும் என சொன்னாள். பெரியவர் இன்று மலைப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சொன்னார். சிலநாட்கள் முன்னரே சொல்வதாக சொன்ன வாசனிடம் பூங்கோதை மீண்டும் திருமால் வந்திருந்தபோது என்ன நடந்தது எனக் கேட்டாள். வாசன் அதிர்ந்தான். 

(
தொடரும்)

2 comments:

Chitra said...

அருமையான தொடர்....

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா, மீண்டும் தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.