Tuesday 1 June 2010

தமிழ் பதிவர்கள்

ஊரு வம்பை விலைக்கு வாங்குவது எப்படி தெரியுமா?

இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உலக பிரச்சினை போல உருவகம் செய்து  அதில் உலை வைத்து குளிர் காயும் யுக்தி பற்றி அறிய வேண்டுமா?

எழுதப்படும் எழுத்துகள் எப்படியெல்லாம் பல கோணங்களில் பார்க்கப்படும் என்பதையும் எத்தனை அருமையாக ஆராய்ச்சிகள் செய்து பல விதங்களில் ஒரு விசயத்தை சிந்தித்து எழுதும் கலை பற்றி அறிய வேண்டுமா?

முக்கியமாக வெளிநாட்டில் வாழும் தமிழ் வாசகர்களே, உங்களுக்கு தமிழில் எத்தனை கேவலமான வார்த்தைகள் இருக்கின்றது என்பதை தெரிந்திட வேண்டுமா?

நகைச்சுவை பற்றி ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதே நகைச்சுவையால் எப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

எழுதுவதன் மூலம் உங்கள் மொத்த குடும்பத்தையும் துன்பத்தில் சிக்க வைத்திடும் நிலை அறிய வேண்டுமா?

இப்படி எதிர்மறை நிலைகள் மட்டுமே எழுத்தாகிப் போனதை கண்டு கண்ணீர் வடிக்க வேண்டுமா?

எதற்கெடுத்தாலும், தேசிய பார்வையை ஒழித்துவிட்டு ஜாதீய பார்வையுடன் அணுகும் முறை தெரிந்து கொள்ள விருப்பமா?

நாம் அனைவரும் ஒன்று என்று ஒற்றுமையை நிலைநாட்டுவதாய் கூறிக் கொண்டு முதுகில் அடிகள் தந்திடும் கலை அறிய விருப்பமா?

மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்தி மனிதர்களை கீழ்மைபடுத்தும் நிலையை அறிய வேண்டுமா?

வாருங்கள் உலக தமிழ் வாசகர்களே.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மிக மிக சின்ன காரியம் தான். தமிழ் திரட்டிகளை ஒரு முறை பார்வையிட்டால் போதும். அங்கே காணப்படும் பதிவுகளை படியுங்கள். ஆனால் அதைப் பற்றி ஒன்றும் எழுதி விடாதீர்கள். மீறி எழுதினால் நீங்கள் ஊர் வம்பை விலைக்கு வாங்கி விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதெல்லாம் தேவையில்லை, பல நல்ல விசயங்கள் தெரிந்து கொள்கிறோம் என நினைத்தால் புற்களுக்கு மத்தியில் ஒரு சில நெற்கதிர்கள் தென்பட்டுத்தான் கொண்டிருக்கும். அதை தேடி கண்டு கொள்ளுங்கள்.

வாசகர்களாக இருப்பதுதான் மிகவும் சௌகரியம். பதிவர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ நீங்கள் மாற நினைத்தால் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். எவரேனும் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் திட்டிக் கொண்டிருக்கலாம், அதே வேளையில் வாழ்த்திக் கொண்டும் இருக்கலாம். திட்டுகளை புறந்தள்ளி, வாழ்த்துகளை மட்டுமே தனதாக்கிக் கொள்ளும் திறன் இருப்பின் நீங்கள் நிலைத்து நிற்கலாம்.

இந்த பதிவுலகத்துக்கென பிரத்தியோகமாக எழுதப்பட்ட பதிவுகள் சில உள்ளன. அவை

விவகாரமான எழுத்தாளர்கள் 

யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க 

கருத்துகளும் அதன் சுதந்திரமும் 

ஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது? 

எழுத்துலகில் அரசியல் செய்பவர்களுக்கும், நட்பினை கொச்சைபடுத்துபவர்களுக்கும் எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். இனிமேலும் ஏதேனும் பிரச்சினை வரும்போது நான் குரல் கொடுக்கவில்லையென கருதாதீர்கள். எனது பதிவுகள் அதற்காக பேசி முடித்துவிட்டன

தனித்தனி குழுவாக செயல்படுவதை அறவே தவிர்த்துவிடுங்கள். உங்கள் நட்புக்குரியவரோ, மற்றவர்களோ பிரச்சினையில் இருந்தால் அதை எழுதி பெரிதுபடுத்தி ஆதரவு தருகிறேன் பேர்வழி என களங்கப்படுத்த வேண்டாம். மின்னஞ்சல் உண்டு, தொலைபேசி உண்டு. பேசி தீர்த்து கொள்ளும் விசயங்களை எழுதி சிறுமைபடுத்தாதீர்கள்.  சம்பந்தப்பட்டவர்கள் அவரவர் பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள் எவரும் குழந்தைகள் அல்ல.

எழுதுவதால் பிரச்சினைகளில் சிக்குண்டு தவித்து என்ன செய்வதென புரியாமல் எழுத்துலகைவிட்டு விலகும் பதிவர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழில் எழுதி, தமிழை சிறந்திட செய்யும் அனைவருக்கும் எனது நன்றிகளும், வணக்கங்களும்.

17 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vettukku auto anupa maatteengale???

Radhakrishnan said...

:) ஹா ஹா, அட சாமிகளா! அவ்வளவு வசதி எல்லாம் இல்லீங்க. நானே என்ன செய்றதுனு புரியாம தவிச்சிட்டு இருக்கேன். நல்லவேளை சாமி என்னை காப்பாத்துச்சுனு போக வேண்டியதுதான்.

தமிழ் உதயம் said...

எழுத வாய்ப்பு கிடைத்தவர்கள், அந்த வேலையை திறம்பட செய்யாமல் போவதால் வந்த வினை.

Radhakrishnan said...

:) சரிதான். மிக்க நன்றி ஐயா.

மதுரை சரவணன் said...

காணாமல் போனவர்களுக்காக வருந்துவதை விட அவர்களை அடையாளம் கண்டு மீண்டும் எழுத அழைக்க வேண்டும் என்பது என் கனிவான கருத்து.

Radhakrishnan said...

மிக்க நன்றி சரவணன்

பழமைபேசி said...

வணக்கம் ஐயா!

ஹேமா said...

நல்லது சொல்லியிருக்கிறீர்கள்.

ப.கந்தசாமி said...

//சேராத இடந்தனில் சேர வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்//

ரொம்பவும் சரியான வார்த்தைகள்.

Radhakrishnan said...

வணக்கம் பழமைபேசி அவர்களே, நன்றி

நன்றி ஹேமா

நன்றி ஐயா.

விக்னேஷ்வரி said...

வருத்தமாய் உள்ளது. :(

ராம்ஜி_யாஹூ said...

தலைப்பை மாத்துங்கள்-

இன்பமூட்டும் தமிழ் வலைப்பதிவர்கள், எரிச்சல் ஊட்டும் தமிழ் பதிவர்கள்

இவை வாசிப்பவர்களின் கைகளில் (in mouses) தான் உள்ளது

Radhakrishnan said...

வருத்தப்பட அவசியமில்லை. நன்றி சகோதரி

தலைப்பை மாற்றிவிட்டேன். நன்றி ராம்ஜி.

Paleo God said...

அப்ப நீங்க பிரபல பதிவர் இல்லையா?? :))

Radhakrishnan said...

ஹா ஹா. அடிப்படை பதிவர் தகுதியே இன்னும் கிடைக்கவில்லை. ;) நன்றி ஷங்கர்

priyamudanprabu said...

ok ok

Radhakrishnan said...

நன்றி பிரபு.