Tuesday 8 June 2010

குள்ளநரிகளின் தொல்லை

நரி அப்படின்னாலே தந்திரம் மிக்கது அப்படினு சொல்வாங்க. நரியும், சிங்கமும், எலியும் அப்படிங்கிற கதை எல்லாம் படிச்சி இருக்கேன். பாட்டி சுட்ட வடை கதையில கூட நரி வரும்ல. சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் அப்படிங்கிற கதையில கூட நரிதான் முன்னிலை வகிக்கும்.

தந்திரமான மனிசரை நரிக்குணம் அப்படினு சொல்வாங்கனு நினைக்க வேண்டாம். இந்த நரிகள் மிகவும் நயவஞ்சகமானவைகள். நாய்க்குணம் அப்படினு மனிசரை சொன்னா நன்றியுள்ளவர்னு அர்த்தம் இல்லீங்க. அதுக்கு அர்த்தமே வேற. அதுபோலவே நயவஞ்சகமான மனிசரைத்தான் நரிகுணம்னு சொல்றாங்கனு அர்த்தப்படுத்திக்கிரனும். எது எப்படியோ, எப்படி அர்த்தப்படுத்திகிறோம் அப்படிங்கிறதுக்கு பாடமா எடுக்க முடியும், அவங்க கற்பனையில, அவங்க அவங்க தோதுக்கு ஏத்தமாதிரி அர்த்தபடுத்திகிற வேண்டியதுதான். 

தந்திரம் அப்படிங்கிறதை நேர்மைக்கு, பொது மக்களின் நன்மைக்கு பயன்படுத்தினா பாராட்டலாம். சுயலாபத்துக்கு எல்லாம் பயன்படுத்தினா நயவஞ்சகத்தன்மைனுதான் சொல்ல முடியும். சாணக்யரை தந்திரமிக்க அமைச்சர் அப்படினுதான் சொல்றாங்க. பொதுமக்களின் நன்மைக்காக செயல்பட்டாருனு பேச்சு இருக்கு. அதுலயும் இந்த குள்ளநரிகள் இருக்கே, அது மனிசரோட நண்பர் மாதிரிதான் இருக்கும், ஆனா அதோட தொல்லை தாங்க முடியாது.


இந்த குள்ளநரிகள் காட்டுப்பக்கம் திரிஞ்சிட்டு இருக்காம இப்போ ஊர்பக்கம் எல்லாம் சுத்த ஆரம்பிச்சிருச்சி. வீட்டுக்கு பின்புறத்தில இருக்கிற தோட்டப்புரத்துல இதனுடைய நடமாட்டம் அதிகம் ஆயிருச்சி. இது எலிகள், முயல்கள் அப்படினு பிடிச்சி தின்னுமாம். இப்படி இதனுடைய நடமாட்டம்தனை மனிசங்களும் நேசிச்சாங்க. அதுக்கு உணவு கூட போடற வழக்கம் இருக்கு. இதனால நல்ல சுகம் காண ஆரம்பிச்சிருச்சி.

இப்படி உணவு போடறவங்க நிறுத்திட்டா அது என்ன பண்றதுன்னு தெரியாம அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் எடுக்க ஆரம்பிச்சிருச்சி. நம்ம ஊருல இருக்கிற மாதிரி கோழி எல்லாம் சுத்திட்டு இருந்தா நல்லா சாப்பிட்டு ஹாயா இருந்திருக்கும். பூனைகதான் அங்கிட்டு இங்கிட்டு திரியும். பூனைக இந்த குள்ளநரிகளை பாத்தா ஓடிப்போயிரும்.

இந்த குள்ளநரிகளை சாப்பிடற பிராணி எதுவும் இல்லை அப்படிங்கிறதால இதனோட எண்ணிக்கை அளவுக்கு அதிகமா போயிருச்சி. அதோட இவைகளோட தொல்லை அதிகமாயிருச்சி. சமீபத்துல இரண்டு பச்சிளம் குழந்தைகளை அவங்களோட திறந்திருந்த வீட்டுக்குள்ள படுக்கையறைக்கே போய் கடிச்சி குதறி வைச்சிருச்சி. :( அந்த குழந்தைக உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.


இவைகளை என்ன செய்யனும் அப்படினு ஒரு ஆலோசனை சொல்லிட்டு இருக்காங்க. இவைகளை பிடிச்சி மருத்துவர்கிட்ட கொடுத்துட்டா அவங்க சத்தமில்லாம கொன்னுடுவாங்க. நாம யாரும் விஷம் வைச்சி கொல்ல வேணாம் அப்படினு சொல்றாங்க. அதோனோட தேவை கறி, அது எந்த வகையில் இருந்தா என்ன அப்படினு அது தொடங்கிருச்சி.

இந்த குள்ளநரிகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயனுள்ளதா இருந்தா எடுத்துட்டு போகலாம்னு சொல்றாங்க. மத்த விலங்கினங்களை துன்புறுத்துராங்கனு எதிர்ப்பு நடந்துகிட்டு இருக்கு. இந்த குள்ளநரிகள் மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடியவையா இருக்கிறதால ஒன்னும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டங்கனு சொல்றாங்க.

ஒரு குள்ளநரி இப்படி நடந்துகிட்டதால மொத்த குள்ளநரிகளுக்கும் அபாயம் வந்துருச்சு. நாய் வளக்கறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை கொஞ்ச நாள் முன்னாடி விட்டுருந்தாங்க. நாயை பயன்படுத்தி தன்னோட எதிரியை ஒருத்தன் தாக்கினானம். இப்படி அபாயகரமா இந்த மனிதரின் நட்பு விலங்குகள் மாற காரணம் மனிதன் ஒரு சமூக விலங்கு அப்படிங்கிறதை மறந்துட்டதாலதான்னு சொல்றாங்க. விலங்கோ, மனிதனோ எல்லாரையும் எல்லா நேரங்களிலும் நம்ப முடியாதுதானே. அதனுடைய சுபாவத்தை எப்பவாச்சும் எப்படியாச்சும் காட்டிரும். அதுக்காகத்தான் எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ அப்படினு ஊர் வழக்கத்தில சொல்வாங்க.

எங்கள் வீட்டு தோட்டத்திலும் குள்ளநரிகள் எட்டிப் பார்ப்பது உண்டு. அதன் அழகை ரசித்த நான் இப்போது அபாயமாகவே உணர்கிறேன். இருப்பினும் அதன் சுதந்திரத்தை பறித்துக் கொள்ள எனக்கு ஆசை இல்லை. வீட்டுக்குள் நுழைந்துவிடாதபடி கதவுகள் பூட்டப்பட்டுதான்  இருக்கின்றன. வீடு திறந்திருக்கும்போது  அவை ஒருவேளை நுழைந்துவிட்டால், பாதகம் பண்ண துணிந்துவிட்டால் நம்மை காத்துக் கொள்ள அவைகளை கொலை செய்வதில் தயக்கம் ஏதும் தேவை இல்லை.

No comments: