Friday 11 September 2009

எழுத நினைத்ததும்

கவிதை எப்படி வருமாம்
காதலித்தால் வருமாம்
கற்பனை இருந்தால் வருமாம்
கலங்கி கிடக்கும் நெஞ்சம்
புலம்பி தவிக்கையில் வருமாம்

துயரம் கண்டு துடிதுடிக்கையில்
துள்ளிக்கொண்டு சீறிப்பாய்ந்து வருமாம்
கண்ணை மூடி கடவுளை நினைக்கையில்
கனிந்து தவழ்ந்து வருமாம்

கண்ணீர் சிந்தி அழுவதற்கு பதில்
எழுதுகோல் சிந்தி அழுது வருமாம்
வார்த்தை அலங்காரம் செய்துவிட
வேடிக்கைக் காட்டி வருமாம்
வண்ணத்துபூச்சிப்போலே பறந்து
வண்ணகனவுகளுடன் வருமாம்

எழுத நினைத்தும்
எழுத வார்த்தைகளன்றி இருப்போர்க்கு
ஊமையாகவும் வருமாம்
புன்னகையாகவும் வருமாம்
அழுகையாகவும் வருமாம்
தோழமையாகவும் வருமாம்

இனி
கவிதை வந்தவிதம்தனை
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

10 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை எப்படி எல்லாம் வரும் என்று அத்தனையையும் சொல்லி விட்டீர்கள் நண்பரே.
கவிதை அழகாக இருக்கிறது.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.

Vidhoosh said...

wow. super sir.

-vidhya

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா அவர்களே.

கிருஷ்ண மூர்த்தி S said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை அழகாக இருக்கிறது.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

www.அருமை.com
www.சூப்பர்.com

Anonymous said...

//எழுத நினைத்தும்
எழுத வார்த்தைகளன்றி இருப்போர்க்கு
ஊமையாகவும் வருமாம்
புன்னகையாகவும் வருமாம்
அழுகையாகவும் வருமாம் //

நானெல்லாம் இந்தக்கோஷ்டிதான். கவிதை எழுத வராது

சுந்தரா said...

எப்படி வரும்னு ஆராய்ச்சி செய்து அத்தனையையும் சொல்லிட்டீங்க. அப்புறம் எதைச் சொல்ல ரங்கன்??? :)

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா, சரவணக்குமார், சின்ன அம்மிணி மற்றும் சகோதரி அவர்களே.