Monday 7 September 2009

செவ்வாயில் தண்ணீர்

இருக்கும் பூமியில் தண்ணீர்
இல்லாமல் போகும் நிலைக்கு
மாற்றுவழி கண்டு மனம்
மகிழ்ந்திட வழியின்றி
பக்கத்து கிரகத்தில்
சேரோடு சகதியில்
தண்ணீர்தானா என தவித்து

பூமியில் வாழும் மனிதர்களுக்கு
நல்வழி காட்டி மகிழாது
பொருளையெல்லாம் கொட்டி
பிஞ்சு உள்ளம் வெந்து
சாவதை கண்டு துடிக்காது
என்ன இந்த விஞ்ஞானம்

எண்ணிப் பார்க்கையில் விந்தைதான்
என் பையில் கொஞ்சம் பணம்
அதிகமாகவே இருக்கிறது
அழுது கொண்டு நிற்கும்
அந்த பையன் இன்னும்
அழுதபடியே!


4 comments:

தேவன் said...

///எண்ணிப் பார்க்கையில் விந்தைதான்
என் பையில் கொஞ்சம் பணம்
அதிகமாகவே இருக்கிறது
அழுது கொண்டு நிற்கும்
அந்த பையன் இன்னும்
அழுதபடியே!///

தனதருகில் இருக்கும் தூயோர் துயர் துடைக்காமல், என்ன விந்தையான உலகம் உங்கள் சிந்தனை கவிதை அருமை ஐயா.

vasu balaji said...

நல்ல சிந்தனை வெ.இரா. இருப்பதும் போய் பறப்பதும் போய்விடுமோ என்ற பயம் எனக்கும் உண்டு.

Vidhoosh said...

wow. what a thought! excellent.
--vidhya

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி. எது எது நடப்பினும் அதது அதன் வேலையைப் பார்த்துக் கொண்டே போகும். இதுதான் உலக நியதி.