Sunday 13 September 2009

தாவரமே ஆதாரம்


முளைக்கும் விதைக்கு
ஒளித் தேவையில்லை
விழித்துக் கொள்ளும்
முளைத்து வந்தவுடன்

கோள்கள் வெடித்து சிதறியதும்
கரியமில வாயுதனை
ஆக்ஸிஜனாய் மாற்றி
உயிரின் ஆதாரமாய்
உரைத்து நிற்கும் இலைகள்

வேருக்கு தெரியாது
உணவு தயாரிக்க
தண்ணீரை உலைக்குத்
தருவதுப் போல்
தாதுவும் தந்து
இலை தயாரிக்க
வேர் பார்த்து ரசிக்கும்

ஒளியும் நீரும் இல்லையெனில்
ஒன்றுக்கும் ஆகா தாவரம்
உணர்ந்து கொள்ளுங்கள்
உலகின் வாழ்வுக்கு
தாவரமே ஆதாரம்.

No comments: