Sunday 6 September 2009

என்னுடைய ஆசிரியர்கள் - 4

GATE - இந்த தேர்வில் தேர்வாக அனைத்து ஆசிரியர்களின் சிறப்பான பாடம் நடத்தும் முறையே உதவியது எனலாம், குறிப்பாக ஹபீப் மற்றும் பிரகாஷ். அதிகபட்ச கேள்விகள் இதில் இருந்துதான் வந்தது. GATE -ல் 84.7 percentile 234 வது இடம் எடுத்து தேறினேன். 1400 பேர் எழுதி இருந்தார்கள்.

பீகார் மற்றும் கல்கத்தாவில் இருந்து வாய்ப்பு வந்தது. இரண்டும் 10 நாட்கள் என்ற வித்தியாசத்தில் இருந்ததால் இரண்டும் செல்ல வேண்டியது என முடிவு எடுத்தாலும் கல்கத்தாவில்தான் எனது மனம் நின்றது. அப்பொழுது செல்லும் முன்னர் எனது தாயிடம் ஒரு கேள்வி கேட்டேன். இதுவரை வாழ்ந்துவிட்ட நீங்கள் உலகினைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? இதுதான் அந்த கேள்வி. உலகில் ஒன்றுமே இல்லை இதுதான் எனது தாய் தந்த பதில். ஒரு மாபெரும் ஆசிரியராக எனது தாய் எனது கண்ணிற்கு தெரிந்தார். அவர் 3 வது வரை படித்து இருந்தார். ஐந்தாவது வரை படித்து இருந்தால் ஆசிரியராகி இருப்பார். படிக்க முடியாததன் காரணம் இளம் வயதில் அவர் அவரது தாயை இழந்தது. மக்களைப் பெற்ற மகராசி என பெயர் பெற்றவர். பொறுமையின் சிகரமாக போற்றப்படுபவர். எனக்கு அவரது பதிலில் வாழ்க்கையின் முக்கியமான விசயம் புரிந்து போனது.

ஜதாவ்பூர் பல்கலைகழகம் கல்கத்தா.

பீகாரில் தோல்வி அடைந்து கல்கத்தாவில் மருந்தியல் நுண்ணுயிர்கள் பிரிவினை எடுத்தேன். பின்னர் நான் கேட்ட pharmaceutical chemistry கிடைத்தது ஆனால் நான் மாற்ற வேண்டாம் என முடிவுக்கு காரணமானவர் சுஜாதா கோஷ் டஷ்டிதார் என்னும் ஆசிரியை.

சுஜாதா : இவர்தான் எனது முதுநிலை மருந்தியல் படிப்பின் supervisor. பொதுவாக ஆறு மாதம் செய்ய வேண்டிய ஆய்வகப்பணியினை 18 மாதங்கள் செய்ய வைத்தவர். கல்லூரி தொடங்கிய தினம் அன்று முதல் முடிக்கும் வரை ஆய்வகத்தில் வேலை பார்த்தேன். ஆராய்ச்சியில் எனக்கு இருந்த ஈடுபாடு அதிகமானதற்கு காரணம் இவர்தான். சிறந்த ஆராய்ச்சி செய்ய உதவியவர். அதிக கோபம் வரும். நன்றாக பாடம் நடத்துவார். இதே நுண்ணுயிர் பிரிவில் உள்ள மற்றொரு ஆசிரியர் புகைத்துக் கொண்டே பாடம் நடத்துவார். மிக மிக வித்தியாசமாக உணர்ந்தேன், ஆசிரியர்களிடம் நெருங்கிய நட்பு இங்குதான் ஏற்பட்டது.

பயோகெமிஸ்ட்ரி மற்றும் பார்மகாலஜி இரண்டும் எனது துணைப்பாடங்கள். இதில் பயோகெமிஸ்ட்ரி ஆசிரியர் 5 முறை ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். மிக சிறப்பாக பாடம் நடத்துவார். பார்மகாலஜி ஆசிரியர் மிகவும் சிறப்பாக பாடம் நடத்துவார். நல்ல திறமையானவர். மேலும் சில பாட ஆசிரியர்கள் முதுநிலை தானே என விடாமல் சிரத்தையுடன் பாடம் நடத்துவார்கள். பாட வகுப்பில் அமர்ந்த காலங்கள் விட ஆய்வகத்தில் செலவிட்ட காலங்கள் இங்கு அதிகம்.

சுஜாதா அவர்களிடம் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு கிடைத்தும் மறுத்துவிட்டு டில்லி சென்றேன். டில்லியில் AIMS ல் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு தந்தார் ஒரு ஆசிரியர். சில மாதங்கள் இருந்துவிட்டு நானே ஆசிரியராக மாறினேன். இலண்டன் சென்ற பின்னர் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் எனது கொள்கையில் பிடிப்புடன் முதன் முதலில் அமலா எனனும் ஆசிரியை சந்திக்கச் சென்றேன்.

அவர்தான் மாணவர்கள் நலன் பேணுபவராக அந்த தருணத்தில் இருந்தார். அவரிடம் இருந்த புரொஜெக்ட்ஸ்களை காட்டினார். இதில் உனக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள் என்றார். ஒரு நிமிடம் யோசித்தேன். அப்படி ஒரு நிமிட சிந்தனையில் வந்து விழுந்ததுதான் அந்த புரொஜெக்ட். எந்த நம்பிக்கையில் தேர்ந்தெடுத்தேன் எந்த நம்பிக்கையில் அவர் என்னிடம் கொடுத்தார் என்பது தெரியாது. பதினைந்து நாட்கள் இருந்த பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கான பண நிதிக்கு விண்ணப்பம் பண்ண வைத்து வெற்றி பெற வைத்து எனது ஆராய்ச்சிக்கு வித்திட்டவர். இவர் ஒரு perfectionist. இவர் தந்த ஊக்கம் வார்த்தையில் சொல்லி வைக்க இயலாது. எனது மேல் கொண்ட நம்பிக்கையில் எனக்கு இவர் மற்றொரு ஆசிரியரை துணை மேலாளாராக வைத்துக் கொள்ள வேண்டி அறிமுகப்படுத்தினார். நான் எடுத்துக் கொண்ட புரொஜக்ட், ஒரு வருடத்தில் கிடைத்த ஆய்வு வெற்றியின் காரணமாக ஒரு நிறுவனம் மொத்தமாக நிதி உதவி செய்தது. ஆராய்ச்சி என்றால் இவரைப் போல் செய்ய வேண்டும் என எனக்கு வழி காட்டியவர் இந்த ஆசிரியை. இரு வாரத்திற்கு ஒரு முறை என அனைத்து ஆய்வக முடிவுகளை முகம் கோணாமல் சரி பார்ப்பார். இரண்டரை வருட காலங்களே நான் முடித்து இருந்த வேலையில் அதே ஆய்வகத்தில் அந்த நிறுவனம் என்னை பணியாளானாக ஏற்றுக் கொண்டது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றது இன்னமும் மறக்க முடியாத நினைவு.

இவர் நான் தீஸிஸ் முடிக்கும் முன்னர் அமெரிக்காவிற்கு மாற்றம் ஆகிச் சென்றார் இருப்பினும் நான் வெற்றிகரமாக முடிக்க எல்லா உதவிகளும் செய்தார், இனியும் உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு பக்கபலமாக தற்போது இருந்துவரும் மூன்று ஆசிரியர்கள் பற்றி ஒரே வார்த்தை சாதனையாளர்கள். எனது மாணவர்கள் என்னை எப்படி ஆசிரியராக பார்த்தார்கள் என்பதற்காக அந்த ஒரு வருடம் ஆசிரியர் பணி முடித்து நான் லண்டன் வந்தபோது மூன்று பரிசு தந்தார்கள். அதனை பின்னர் குறிப்பிடுகிறேன்.

இப்படி கல்லூரியிலும் பள்ளியிலும் ஆசிரியர்களாக இருந்த இவர்கள் என்னை எத்தனையோ மெருகேற்றி இருக்கிறார்கள், இது தவிர வெளி உலக வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்கள் மற்றும் இயற்கை விசயங்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்து கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் சொல்லித்தர வேண்டும் என சொல்லித்தரமாட்டார்கள். இவர்களிடம் இருந்து நாமாக கற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் பயனும் பண்பும். இந்த தருணத்தில் நான் விளையாடி மகிழும் பகவான் நாராயணனையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன். இந்த பகவான் நாராயணன் யார் என்பதை நிச்சயம் நுனிப்புல்லில் எழுதி விடுவேன் என்ற அளவு கடந்த எண்ணம் உண்டு.

முத்தமிழ்மன்ற பள்ளியில், இப்போது வலைப்பூக்களில் எனது ஆசானாக/ஆசிரியர்களாக இருப்பவர்கள் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. ஒரு சில ஆசிரியர்கள் பற்றி குறிப்பிடாமல் விட்டு இருந்தால் என்னை மன்னித்து விடுவார்கள்.

5 comments:

Vidhoosh said...

:) கட்டுரை பயணம் மெத்தென்று இருந்தது. நிறைய அறியவும் கிடைத்தது. அற்புதப் பயணம்.

--வித்யா

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா அவர்களே.

Neela Narayanan Venkataram said...

Dear Rathakrishnan,
I am Neelanarayanan from Aruppukottai. From your posts I understood that you have studied in APK. I too remembered few names you have mentioned in SBK School. I completed my M.Sc. in Computer Science from MKU in 1995. Then I started my carrier as Lecturer and joined NCST as Scientist. Currently I am doing my PhD in ITU, Denmark. May I know further details from you. I could not get your contact details hence, I am using comment option.

If you are interested you can send me a mail.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அற்புதப் பயணம்.

Radhakrishnan said...

மிக்க நன்றி நாராயணன் அவர்களே. எனது வலைப்பூவில் மின்னஞ்சலை இணைத்துவிடுகிறேன்.

மிக்க நன்றி ஐயா.