Monday 28 November 2011

மனைவியின் மயோர்கா 3

கியரின் தலைப்பாகம் இல்லாமல் காரை செலுத்திவிடுவது என எங்கேயும் நிறுத்தாமல் ஹோட்டல் வந்து அடைந்தேன். ஹோட்டலில் அதற்குள் மகனும், மனைவியும் கீழே வந்து காத்து கொண்டிருந்தார்கள். நடந்த விசயம் சொன்னதும் சற்று பயம் அவர்களுக்குள் வந்து சேர்ந்தது.

காலை உணவு ஹோட்டலிலே சாப்பிட்டோம், காலை உணவு நன்றாக இருந்தது.  அங்கே இருக்கும் கார்களில், சாலைகளில்  நமது ஊரில் இருக்கும் கார்களைப் போல, சாலைகளை போல  கிலோமீட்டர் கணக்குதான். சாலைகள் மிகவும் நன்றாக இருந்தன. அதி வேகமாக செல்லும் கார்கள் பயத்தை தந்துவிட்டு போனது. மதிய வேளை வந்தது. ஓரிடத்தில் நிறுத்தினோம். அங்கே இருந்த ஒரு பெரிய கட்டிடத்தை பார்வையிட்டுவிட்டு வீதிகளில் நடந்து செல்ல பெரிய கடைத்தெரு இருந்தது. இந்த கடைகள் எல்லாம் அன்றே முளைத்து அன்றே மறையக்கூடியவை போலிருந்தது. கூட்டம் அலை மோதியது. சில பொருட்கள் ஆசையாக இருந்தது என வாங்கினோம். இந்திய கடைகள் எதுவும் தென்படவில்லை மாறாக ஆப்பிரிக்கா போன்ற நாட்டு கடைகள் இருந்தன. தனித் தொழில் திறமையுடைய மனிதர்கள் ஆங்காங்கே அமர்ந்து படங்கள் வரைந்து கொண்டு இருந்தார்கள்.








வெவ்வேறு நாடுகளின் அழகிய பொருட்கள் விற்பனைக்கு இருந்தது. மதிய வேளையில் அங்கே இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சுற்றுவழி மூலம் நாங்கள் தங்கும் இடம் வந்து சேர்ந்தோம். மாலை வேளையில் நடந்து நாங்கள் தங்கி இருந்த இடத்தை நடந்தே சுற்றி பார்க்க சென்றோம்.

அப்போது இரண்டு இந்திய உணவகங்கள் தென்பட்டன. ஒரு உணவகத்தில் சாப்பிட்டபோது அங்கே இருந்த பையன் நன்றாக பேசினான். வட இந்திய நாடு எனவும், வந்து சில வருடங்களே ஆனது எனவும் சொல்லிக் கொண்டிருந்தான். சாப்பாடு மிகவும் பிரமாதமாக இருந்தது. ஆங்காங்கே இருந்த கடைகளைப் பார்த்துவிட்டு ஹோட்டல் திரும்பினோம்.

அடுத்த தினம் வேறு வழியாக பயணத்தை செலுத்தினோம். இந்த முறை மிகவும் அபாயகரமான சாலை ஒன்று உள்ளது எனவும் அதில் சென்றால் நாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து மறுகோடியில் இருக்கும் பகுதியை பார்க்க முடியும் என்பதால் சற்று பயத்துடனே கிளம்பினோம். முதலில் கடலில் நிறுத்தப்பட்ட படகுகளைப் பார்த்துவிட்டு சின்ன கிராமங்களைப் பார்க்க கிளம்பினோம்.

இந்த சின்ன சின்ன கிராமங்களை தொடாமல் நேராக அந்த அபாயகர பகுதிக்கு செல்லலாம் எனினும், மயோர்காவில் பல இடங்களை பார்த்து விட வேண்டும் எனும் ஆர்வத்தில் கிராமங்களைத் தொட்டு சென்றோம். அங்கே கைவினைப் பொருட்கள் விற்று கொண்டிருந்தார்கள். மிகவும் அருமையான இடங்களாக தெரிந்தது.




மலைகளின் ஊடே போடப்பட்டிருந்த பாதையில் சென்ற பயணம் மிகவும் அருமையாக இருந்தது. சில இடங்களில் எல்லாம் பயத்துடனே வாகனம் செலுத்த வேண்டி இருந்தது. மூணாறு சென்றபோது வந்த பயம் இங்கேயும் வந்து சேர்ந்தது. அழகிய இயற்கை காட்சிகள் என அதி அற்புதமாக மயோர்கா காட்சி தந்து கொண்டிருந்தது. சில ஊர்களில் அத்தனை பெரிய வசதிகளோ, தொழிற்சாலைகளோ இல்லை. அவர்களின் தொழில் என்ன, எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தாலும் இயற்கையும், அதன் காட்சிகளும் கவிதை சொல்லிக் கொண்டிருந்தன.

சில பாதைகளில் எல்லாம் செல்ல முடியாது என வழிகாட்டி சொல்லிக் கொண்டிருந்தது. மீறியும் அந்த சாலைகளில் எல்லாம் பயணம் செய்தோம். இந்த பாதை மிகவும் அபாயகரமானது என எச்சரிக்கை எழுதப்பட்டு இருந்தது. அந்த பாதையில் சென்றால் தான் மலை உச்சியை அடைந்து அங்கே இருந்து கடலை பார்க்க இயலும்.

இத்தனை தூரம் வந்துவிட்டு பார்க்காமல் திரும்பி செல்வதா எனும் யோசனையுடன் ஓரிடத்தில் காரினை நிறுத்தினோம்.

(தொடரும்)

2 comments:

ப.கந்தசாமி said...

பிரமாதமான அட்வென்ஜர் பண்ணியிருக்கீங்க போல.

Radhakrishnan said...

பயணம் என்றாலே விசித்திரமும், வித்தியாசமும் நிறைந்ததுதானே ஐயா, நன்றி.