Thursday 4 March 2010

நாய் பாசம்



சிரிக்கச் சொன்னதும்
ஆ வென வாய் திறந்த
அன்பே ஆருயிரே
இந்த பாட்டிக்கு நீங்கள்
இரு கண்களாய்

நன்றிக்கும் விசுவாசத்திற்கும்
இறைவன்கூட உங்களிடம்
வந்து ஏங்குவான் 
நீங்கள் பிழைக்கும் பிழைப்பினை
பிழையென சொல்வது ஏன்

வாலை ஆட்டி வருவாய்
தோல் பாட்டி சிரித்தே மகிழ்வாள்
யாரும் கல்லெடுத்து உங்கள் மீதெறிந்தால்
அவரை சொல்லெடுத்து பாட்டி சுளுக்கெடுப்பாள்

காவல் காக்கும் தெய்வமாய்
ஏவல் கேட்கும் பிள்ளையாய்
ஆதரவோடு இருக்கும் பாட்டியின்
கொஞ்சல்கள் கேட்டு மகிழ்வாய்
ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை
எதுவுமின்றி...
பிறந்த பாக்கியம் இது
பெருமிதம் கொள்ளுங்கள்.

7 comments:

cheena (சீனா) said...

அன்பின் வெ.இரா

கவிதை அருமை - பாட்டியும் நாய்களும் - நட்பு அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது

நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

பாட்டிக்கு

//காவல் காக்கும் தெய்வமாய்
ஏவல் கேட்கும் பிள்ளையாய்//

அருமை கவிதையும் படமும்.

Chitra said...

காவல் காக்கும் தெய்வமாய்
ஏவல் கேட்கும் பிள்ளையாய்
ஆதரவோடு இருக்கும் பாட்டியின்
கொஞ்சல்கள் கேட்டு மகிழ்வாய்

.......... அருமையான கவிதையும் படமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

தமிழ் உதயம் said...

புரியும் விதமாக நீங்கள் கவிதை எழுதுவதால், அதற்கே முதலில் வாழ்த்தோ அல்லது நன்றியோ சொல்ல வேண்டும். நாய் என்றால் எனக்கு பயம் தான். ஆனாலும் நாய்களை ரசிப்பேன். கவிதையையும் ரசித்தேன்

Radhakrishnan said...

மிக்க நன்றி சீனா ஐயா. மிக்க நன்றி ராமலக்ஷ்மி, சித்ரா, தமிழ் உதயம். எனக்கும் நாய்கள் என்றாலே பயம் தான்.

சாமக்கோடங்கி said...

படத்தில் இருக்கும் இரண்டு நாய்க்குட்டிகளும் கொள்ளை அழகு.. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது...

நானும் நாய்ப் பொழப்பு என்ற பேரில் ஒரு இடுகை இட்டுள்ளேன்...

நேரம் இருந்தால் வாருங்களேன்..

நன்றி..

Radhakrishnan said...

மிக்க நன்றி பிரகாஷ், விரைவில் படிக்கிறேன்.