Tuesday 30 June 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்

அடியார்க்கெல்லாம் கதையின் முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. நான் ஒரு இந்து இல்லை என்பதாலோ இந்து கலாச்சாரம் பற்றி அறிந்தது இல்லை என்பதாலோ எனது ஆன்மாவைத் தொடவில்லை. எனக்குப் புரியாத காரணத்தினால் பக்தி பாடல்களை எல்லாம் வாசிக்காமல் தாவினேன்.

ஈஸ்வரி கதையில்  வரத் தொடங்கியதும் கதையை மிகவும் சுவராஸ்யத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன். காதல் கடவுளை வெல்லுமா என அறிந்து கொள்ள பேராவலுடன் இருந்தேன். முடிவில் நான் எண்ணியது போல காதல் சிவனை வென்றது என சொல்லலாமா?

கதிரேசனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையிலான காதல் மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களின் பரஸ்பர புரிதல் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது அதிலும் குறிப்பாக ஈஸ்வரி. அவளுக்கு தனது கணவன் மீது பொறாமையோ சந்தேகமே வரவில்லை. அது உண்மையான பரிபூரண காதல். காதல்தான் எல்லாம். அந்த பகுதி எல்லாம் அதியற்புதமாக இருந்தது.

மதுசூதனன், வைஷ்ணவி தொடக்கத்தில் இருந்தே அவர்களுக்குள் காதல் அத்தனை இல்லை. அதற்கு மதுசூதனின் பிடிவாதமே காரணம். மதுசூதனின் கதை முடிவு அவனது பாழான வாழ்வு குறித்து சொல்லி இருந்து இருக்கலாம்.

கதிரேசன் மற்றும் வைஷ்ணவியின் நட்பு பிரமாதம். கதிரேசன் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, அவன் வைஷ்ணவியிடம் பேசும் பாங்கு, வைஷ்ணவியை நடத்தும் முறை என்னை கவர்ந்தது. கதையில் சில வார்த்தைகள், சில விசயங்கள் புரியாமல் இருந்தது. முடிவில் காதல் தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும். காதல் அதிசக்தி வாய்ந்தது.

நன்றி

ஹனுமலர்
மலேசியா


No comments: