Wednesday 16 November 2011

இங்கே சினிமா கதைகள் விற்கப்படும்

 'அப்பா நீங்க சொன்ன மாதிரி டிகிரி முடிச்சிட்டேன், ரெண்டு கோடி ரூபா கொடுங்க'

'கம்ப்யூட்டருக்கு படிச்சிட்டு எதுக்கு என்னோட மானத்த வாங்கற'

'இந்த கம்ப்யூட்டரை வைச்சித்தான் நான் நினைச்சதை செய்யப் போறேன், சொன்ன வாக்கு மீறாதீங்கப்பா'

'வட்டிக்கு விட்டு, காடு கழனில உருண்டு விழுந்து சம்பாதிச்சது, இன்னைக்கு விவசாயத்துக்கு வான்னு கூப்பிட்டா யாரும் வேலைக்கு ஆளு கிடைக்கலை, அப்படியே ரொக்கமா ரெண்டு கோடி ரூபா கொடுக்கச் சொன்னா எனக்கு மனசு வரலை'

'பணத்தை தனியா எடுத்து வைச்சிக்கோங்க, நான் கேட்கறப்ப கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தா போதும்'

'நான் சொல்லி இனி நீ கேட்கவா போற, எப்ப மெட்ராசு கெளம்புற'

'நான் எதுக்கு சென்னைக்கு போகனும், இங்கேயே இருந்துதான் செய்யப் போறேன்'

'ஒரு படத்தை இங்கே இருந்து எப்படிடா எடுப்ப, எல்லோருக்கும் ஹீரோ ஆகனும் டைரக்டர் ஆகனும்னு ஆசை இருக்கும், நீ பட தயாரிப்பளாரா ஆசைப் படறியே, எங்க போய் என் தலைய முட்டிக்கிறது'

'எல்லாரும் படம்னா சென்னைக்கு ஓடுறாங்களே, அதை மாத்தி மதுரைக்கு ஓடி வர வைக்கனும்'

'நிறைய செலவு ஆகுமேடா'

'ஆகாது'

'என்னமோ செய்டா போ'

'முன் பண தொகையா பத்து லட்சம் கொடுங்க'

இப்படித்தான் மதுரையில் அருகில் இருக்கும் திருமோகூரில் இருந்து ஒரு தயாரிப்பாளர் உருவாக இருக்கிறார்.

அவரது கனவுகள் நிறைவேறியதா? அவர் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்தினார்? விரைவில் தொடரும்.




4 comments:

SURYAJEEVA said...

தொடர் கதையா? தெரியாம வந்து சிக்கிட்டேனே

Radhakrishnan said...

இது தொடர்கதை அல்ல சூர்யா. ஓரிரு பதிவுகளில் முடிந்துவிடும். சிக்கலில் இருந்து எளிதாக தப்பித்து கொள்ளலாம்

வவ்வால் said...

ராகி,

என்னமோ சினிமாவுக்கு கதை தயாரிச்சு விக்கப்போறிங்கனு பார்த்த கதய சொல்லிக்கிட்டு இருக்கிங்க. எந்த கதையா இருந்தாலும் எடுத்ததும் தமிழில் எடுக்காம தெலுங்கில் எடுத்தா உடனே இங்கே ரீமேக் செய்ய எல்லா ஹீரோவும் ஓடி வருவாங்க! :-)) இதை உங்க நாயகனுக்கு ச்ல்லிடுங்கோ!

Radhakrishnan said...

ஆஹா நல்ல யோசனையாக இருக்கிறதே. நன்றி வவ்வால்.