Thursday 29 August 2013

முத்தம் அன்பா, காமமா?

காதலின், அன்பின் போது நமது உடலில் டோபமைன் (dopamine), நார்எபிநேப்ரின் (norepinephrine), அதுவும் மிகவும் குறிப்பாக ஆக்சிடோசின் (oxytocin) போன்ற வேதி பொருட்களின் அளவு அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. காமத்தின் போது டெஸ்டோஸ்டீரோன் (testosterone) எனும் வேதிப் பொருளின் அளவு அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆக்சிடோசின் பெண்களில் குழந்தை பிறப்பின் போது, மழலைக்கு பால் தரும்போது அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் பெயர்க்காரணமே 'பிள்ளை பெறுவதில் உதவி புரிவதில்' இருந்து வந்ததாக குறிப்பில் இருக்கிறது.

முத்தம் அன்பின் வெளிப்பாடு. முத்தம் இரு நபர்களுக்கு இடையிலான உறவை உறுதிபடுத்தி கொள்ளும் விசயம். கணவன் மனைவிக்கும், காதலர்களின் இதழுடன் இதழ் சேரும் முத்தம் குறித்து ஆராய்ச்சி சொல்லும் விசயம் மிகவும் சுவாரஸ்யமானது. நமது உடலில் நோய் எதிர்ப்பு தன்மை சக்தியை முத்தம் அதிகரிப்பதாக நம்பபடுகிறது. அதே வேளையில் சில நாடுகளில் இதழ்களின் முத்தம் 'அசிங்கம்' என்றே கருதப்படுகிறது.

கைகளில் தரப்படும் முத்தம், கன்னத்தில் தரப்படும் முத்தம், நெற்றியில் தரப்படும் முத்தம், இதழ்களில் தரப்படும் முத்தம் என முத்தம் ஒவ்வொரு நிலையில் அதனதன் அர்த்தம்தனை வேறுபடுத்தி கொள்கிறது. மேலைநாடுகளில் கன்னத்துடன் கன்னம் ஒட்டிக்கொண்டு முத்தம் தருவது போல் சப்தம் எழுப்பி கொள்வார்கள். எல்லா உயிரினங்களும் முத்தம் தந்து கொள்வதாகவே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த முத்தம் ஒரு அமைதியை நமது உடலில் பரவ செய்கிறது.

முத்தம் நம்பிக்கையின் வெளிப்பாடு. நினைத்த நபர்களுக்கு எல்லாம் முத்தம் எவராலும் தர இயலாது, சினிமாவில் தவிர. நாம் நெருங்கி பழகும் நபர்களிடம், நாம் நல்லதொரு நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களிடம் மட்டுமே முத்த பரிமாற்றம் நிகழ்த்துவோம் எனப்படுகிறது.

முத்தம் ஆனந்தத்தின் வெளிப்பாடு. பெற்ற பிள்ளைகளை கொஞ்சி குலாவும் போது தரப்படும் முத்தத்தில் இருக்கும் ஆனந்தம் இந்த ஆகிச்டோசின் அளவை அதிகரித்து நம்முள் அமைதியான ஆனந்தம் பரவிட செய்கிறது.

பரிணாம உணர்வின் முதல் உணர்வு தொடுதல். அந்த தொடுதல் உணர்வை தருவது முத்தம். வெளிச்சம், காற்று, வாசம் எல்லாம் தொடுதல் உணர்வில் தெரிந்து கொண்டதுதான். இதழ்களில் இருக்கும் தொடுதல் உணர்ச்சி போல நமது உடல் பாகத்தில் எங்கேயும் இல்லை என்கிறார்கள். முதல் முத்தம் எல்லாம் பெரிதாக பேசப்படுகிறது. முத்தம் பற்றி எல்லாம் எழுத வேண்டிய அவசியம் என்ன? என்றே சத்தம் ஒன்று கேட்டது. காமம் தனியுடைமை. அன்பு பொதுவுடைமை. பலர் முத்தம்தனை தனியுடமை என்றே நினைத்து கொள்கிறார்கள்.

முத்தம் பற்றி அறிந்து கொள்ள 

2 comments:

ராஜி said...

முத்தம் அன்பை சேர்ந்ததுதான். என்ன ஒரே ஒரு மைனஸ் பாயிண்ட் அதுலன்னா!! கொடுக்குறவங்க, அதை வாங்குறவங்க அதை பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்கனும்.

Radhakrishnan said...

கொடுக்குறவங்க, வாங்குறவங்களை விட பாக்குறவங்க புரிஞ்சிக்கிறனும் இப்போ எல்லாம்.