Thursday 20 October 2011

போட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்

ஒரு நாட்டின் பொருளாதரத்தை நிர்ணயம் செய்வது அந்த நாட்டின் மக்கள் மட்டுமில்லாமல் அடுத்த நாட்டு மக்களும் தான். 

ஒரு நாடானது தனது தேவையினைப் பூர்த்தி செய்தபின்னரே பிற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும், அப்படி செய்தால் தான் அந்த நாடு ஒரு முன்னேற்றமடைந்த நாடாக இருக்க இயலும். பொதுவாகவே ஒரு நாடு தனக்கு தேவையில்லாத ஒன்றை உற்பத்தி செய்து அதனை பிற நாடுகளிடம் விற்பனை செய்து தனது பொருளாதாரத்தை முன்னேற்றி கொள்ளலாம். 

மேலும் அந்த அந்த நாட்டின் தேவைகள் குறித்து அந்த அந்த நாட்டுக்கே சென்று உற்பத்தியை பெருக்கி தனது வளமையை வளப்படுத்தலாம். இப்படித்தான் உலக நாடுகள் தனது வர்த்தகத்தை பெருக்கி கொள்கின்றன. ஒரு நாட்டின் தேவை எது, அத்தியாவசியம் எது, அனாவசியம் எது என்பதை தீர்மானிக்கும் நிலையில் நாட்டின் தலைவர்களை விட நாட்டின் மக்களே இருக்கிறார்கள். 

இதை ஒரு வீடு என்பதில் இருந்து தொடங்கலாம். இப்பொழுது சௌகரியம், அசௌகரியம் என எதை விரிவுபடுத்துவத்து அல்லது விளக்கப்படுத்துவது என்பதை பார்க்கலாம். ஒருவருக்கு தங்குவதற்கு தேவையான ஒரு வீடு தேவை. இப்பொழுது வீடு என்பது நான்கு சுவர்கள் கொண்ட ஒரு அமைப்பாகவும் இருக்கலாம். ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு கழிவறை மற்றும் குளியலறை, ஒரு பொது அறை, ஒரு படிப்பு அறை என ஒரு வீடு போதுமானது. வீட்டில் அதிக நபர்கள் இருந்தால் பொது அறை படுக்கை அறையாக மாறிவிடும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இப்படி தனிதனி அறைகள் இல்லாமல் கூட வீடு அமையலாம். வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் வசதியை பொறுத்து அமைகிறது. 

வீட்டிற்கு தேவையான பொருட்கள் அதாவது அமரும் நாற்காலி, மெத்தைகள், தொலைகாட்சி, வானொலி, சட்டி பாத்திரங்கள் என அவையும் ஒரு வகையில் அடக்கலாம். இப்பொழுது வீடு தயார். இதற்காக செலவழிக்கப்படும் பணம் எவ்வளவு? இந்த பொருட்களையெல்லாம் உற்பத்தி பண்ணுபவர்கள், வீடு கட்டுபவர்கள் என ஒவ்வொருவரின் தொகை எவ்வளவு, லாபம் எவ்வளவு? கணக்கிட்டு பார்த்தால் வீடு கட்டுமான தொழிலாளர்கள் முதற்கொண்டு சித்தாள் வரையிலான பொருளாதாரம் தெரியும். இப்படித்தான் ஒரு நாட்டின் அமைப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

ஆனால் எந்த ஒரு நாடும் தன்னிடத்தில் அனைத்து பணத்தையும் கொண்டிருப்பதில்லை. இதனை உலக  நிதி அமைப்பிடம் கடனாக பெறுகின்றன. ஒவ்வொரு நாடுமே இத்தகைய கடன் பெற்று வாழ்க்கை நடத்துவதால் ஒவ்வொரு குடிமகனும் கடனாளிகள் என ஆகி விடுகிறார்கள். சிக்கன வாழ்க்கை, சில்லறை வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கை, படோபகர வாழ்க்கை என தனது நிலைக்கு மேல் வாழ நினைப்பவர்கள் கஷ்டம் கொள்கிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் கனவுகள் இல்லாத, சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என முனைப்பு இல்லாத எவரும் முன்னேற முடியாது. 

தன்னிடம் போதிய அளவு நிதி இல்லாத பட்சத்தில் நாங்கள் கடன் வாங்க மாட்டோம் என ஒரு நாடு இருந்தால் அந்த நாடு முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கையில் இருப்பை வைத்து கொண்டுதான் எதையும் செய்ய முடியும் என நினைத்தால் எதுவுமே நடக்காது. வருவாயை பெருக்கும் வழியை அறிந்து கொண்டு செலவினங்களை கட்டுபடுத்த வகை செய்ய வேண்டும். 

வீட்டில் சமைத்து சாப்பிடுவது அசௌகரியம் என நினைத்தால் பையில் இருக்கும் பணம் அசௌகரியப்படத்தான் செய்யும். அதே வேளையில் அனைவருமே வீட்டிலேயே சாப்பிட நினைத்துவிட்டால் உணவகங்கள் எல்லாம் அவசியமில்லாமல் போய்விடும். அப்படி உணவகங்கள் அவசியமில்லாமல் போனால் அங்கு வேலை பார்ப்பவர்கள், அந்த உணவகத்திற்கு தரப்பட்ட பொருட்கள் எல்லாம் நின்று போய்விடும். 

எல்லாருடைய தேவைகளையும் ஒரே நிறுவனத்தினால் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தின் காரணமாகவே சில பல மாற்றங்களுடன் பல நிறுவனங்கள் ஒரே பொருளை சற்று வித்தியாசப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றன. ஒரு நிறுவனத்தின் தலைவரின் செயல்பாடுகள் அந்த நிறுவனத்தின் பெயரை வலுப்படுத்தவோ, வலுவிளக்கவோ செய்கின்றன. மக்களிடம் பிரசித்து பெற்றுவிட்டால் அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மென்மேலும் வலுவடைந்து அந்த நிறுவனம் ஒரு தனி இடத்தை இந்த போட்டியில் நிலை நாட்டிக் கொள்கிறது. 

சிறந்த பொருள் அதிக விலை என்பது வியாபார தந்திரம். அதே வேளையில் சிறந்த பொருள் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்பதை நாம் மறுக்க கூடாது. பெரிய பெரிய கடைகளில் விற்கப்படும் பொருள்களில் இருக்கும் நம்பிக்கை சின்ன சின்ன கடைகளில் விற்கப்படும் பொருள்களில் நமக்கு நம்பிக்கை வருவதில்லை. அது மனித இயற்கை. 

சிறுக சிறுக சேர்த்தல் அவசியம். எது எடுத்தாலும் ஒரு ரூபாய் என விற்பனைக்கு ஒரு நிறுவனம் தொடங்கினால் அதனால் லாபம் அதிகமா, நஷ்டம் அதிகமா? அடுத்து சந்திக்கலாம். 

1 comment:

Radhakrishnan said...

நல்ல விளம்பரம் தான்.