Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday 11 May 2015

திருச்சிக்கோர் வாழ்த்து - மெகா டிவிட்டப்



ஶ்ரீரங்கத்து அரங்கனே 
உன் தரிசனம் கண்டு 
பாடுகிறேன் தமிழில் வாழ்த்துப்பா 
காவிரியாற்றின் அருகில் 
நீ கொண்ட கோலம் 
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு 
பிடித்துப் போனது
இதோ இங்கே குழுமி இருக்கும் 
இவர்கள் கொண்ட தமிழ் கோலம்
எனக்கு மிகவும் பிடித்துப் போனது

பொன்மலை உச்சிமலைக்கோட்டை
கொள்ளிடம் என்றே இயற்கை எழில் 
கொஞ்சும் திருச்சி கொண்ட குதூகலம்

சமயபுரத்து மாரி அம்மனும் 
உறையூர் வெக்காளியம்மனும்
சுற்றி காத்திருக்கும் ஊரும் இது 
பள்ளிவாசல் தேவலாயம் கல்லூரிகள்
பள்ளிகள் என சிறந்த 
பேருவகை கொள்ளும் ஊரும் இது 

காவிரியும் கல்லணையும் 
களித்து சொன்ன பெருமை இன்று
எழுத்துக்களால் எண்ணங்களால்
மீண்டும் சங்கமித்து மகிழ்ந்தோம் நன்று

திருவானைக்கோவில் பெயர் கொண்டு
யானை புகாவண்ணம் கோவில் உண்டு 
சேவலும் சாமியாகும் பஞ்சவர்ணமாய்
எறும்பீஸ்வரர் அருளால் திருவெறும்பூர்
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்
இனிய தமிழ் கொண்டு 
நேசித்து இருக்கச் சொன்ன
வள்ளுவ ஔவையும் உண்டு

மாம்பழசாலையும் வயலூர் முருகனும்
திருபட்டூர் பிரம்மனும் அமைதியே
உருவான சிவனது திருநெடுங்குளமும்
சோழப்பேரரசின் உறையூர் தலைநகரமும்
சுற்றியே அமைந்த திருச்சி சொல்லும்
மக்களின் உழைப்பின் உன்னதமும்
நமது தமிழின் வியத்தகு மேன்மையும்

முக்கொம்பு பூங்காவும் மறைகதை பேசும்
குணம் தவறினால் இருக்கிறது குணசீலம் 
இரவிலும் வெப்பக்கதிர்வீச்சு இங்கே 
தமிழால் இளங்காற்று வீசுகிறது இன்று

சரித்திரத்தில் இது திருசிபுரம் 
நாம் கூடிய கூட்டத்தால் எழுச்சிபுரம்
ஶ்ரீரங்கத்து அரங்கனே 
என்வாழ்த்து கேட்டு
சயனநிலை கலைத்து 
எம்மோடு தமிழ் பருகு.

வாழிய நண்பர்கள்
வாழிய தமிழ்ப்பற்று 

கவிதையை வடிவமைத்து தந்த Mr K K Gire அவர்களுக்கும், கவிதையை வாசித்த திரு பாண்டித்துரை அவர்களுக்கும் மிக்க  நன்றி

Saturday 14 March 2015

நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழ் ஒரு பார்வை

மின்னிதழ் நமது திண்ணை இங்கே

எனக்கு தமிழ் தாங்கி வரும் இதழ்களில் ஆர்வம் எப்போதோ முற்றிலும் குறைந்து போனது. குமுதம், ஆனந்தவிகடன் எல்லாம் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எங்கேனும் தமிழ் இதழ் வாசிக்க கிடைத்தால் உள்ளே சினிமா சினிமா மட்டுமே. அதை குறை கூறவும் முடியாது. அறிவை வளர்த்துக்கொள்ள இது போன்ற இதழ்கள் எல்லாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தவறான விண்ணப்பம் ஆகும்.

திரு. அல் அமீன் அவர்கள் இந்த நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழை எனது பார்வைக்கு கொண்டு வந்தார். அவருக்கு நன்றி. இது ஒரு மாத மின்னிதழ். சிற்றிதழ் என்பதால் மிக மிக குறைவான பக்கங்கள் எனினும் நல்ல விசயங்கள் உள்ளடக்கி இருந்தது. 17 பக்கங்கள் கொண்ட முதல் இதழ் பிப்ரவரியில் வெளிவந்து இருக்கிறது. 21 பக்கங்கள் கொண்ட அடுத்த இதழ் மார்ச் மாதம் வெளிவந்து இருக்கிறது. முதல் இதழில் மாதம் குறிப்பிடவில்லை. 

முதலில் என்ன இருக்கிறது எப்படி இருந்தது என பார்த்துவிடும் முன்னர் இந்த மின்னிதழின் ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன் முயற்சியை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அவரது உரையில் தமிழை வளர்க்கும் ஆர்வம், தமிழ் எழுதுபவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கம் என குறிப்பிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இவருக்கு உறுதுணையாக இந்த மின்னிதழை சிறப்பாக வடிவைமக்க உதவிய நண்பர் திரு அல் அமீன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

முதல் இதழின் அட்டை பக்கத்தில் பல முகங்கள் தென்படுகின்றன. அதில் எனக்குத் தெரிந்த முகங்கள் பலர் இருந்தார்கள். இதழின் உள்ளே பல படங்கள் இருக்கின்றன. அவை ஏனோ தெளிவின்றி காணப்படுகிறது. இரண்டாவது இதழில் உள்ளிருக்கும் படங்களில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது என சொல்லலாம். இரண்டாவது இதழின் அட்டைப்படத்தில் தமிழர் விளையாட்டு குறித்து காணப்படுகிறது. பல்லாங்குழி விளையாட்டில் நாங்கள் புளியம்பழ முத்துக்கள் வைத்து தான் விளையாடி இருக்கிறோம். தாயம் விளையாடுவதற்கு கூட ஒரு பக்கம் உரசப்பட்ட முத்துகள் உபயோகித்து இருக்கிறோம். சோசியர் உபயோகிக்கும் முத்துகள் பல்லாங்குழியில் இருப்பது ஆச்சரியம். அட்டைப்பட வடிவமைப்பை சற்று மெருகேற்றினால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அதைப்போல 'நமது திண்ணை' என்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு எல்லா இதழிலும் ஒரே மாதிரியாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். திண்ணை என்பதற்கு ஆசிரியர் தந்த விளக்கம் சரிதான். திண்ணை ஒரு ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓர் இடம். எங்கள் கிராம வீட்டில் திண்ணை இருந்தது. இப்போது அது மூடப்பட்டு எவரும் அமர இயலா வண்ணம் இருப்பது வருத்தம் தரக்கூடியது.

முதலில் சுஷீமா அம்மாவின் என் பார்வையில் திரௌபதி. இவரது எழுத்து மிகவும் எளிமையாக அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கும். ஒரு பெண்ணின் பெருமையை சொல்லும் எழுத்து என சொல்லலாம். சீதை, அகலிகை, மன்டோதரி, தாரை பற்றி குறிப்பிட்டு திரௌபதி பெருமை சிறப்புதான் என எண்ண வைக்கும் வகையில் சிறப்பாக எழுதி இருக்கிறார். பெண் அடிமை என்பதெல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டது என அன்றே ஒரு பெண்ணின் திறமையை போற்றி இருக்கிறார்கள், வெற்றி பெற்று இருக்கிறார் என தெளிவாக சொல்லி இருக்கிறார். அடுத்த இதழில் எடுத்துக்கொண்ட என் பார்வையில் அனுமன். மிகவும் அருமையாக இருந்தது. பொக்கிஷம் போல போற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஸ்லோகம் மற்றும் எழுத்து. எங்கிருந்தோ வந்து குரங்கு ராமர் கதை கேட்கும் விஷயம்  நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் வணங்கியது போல நிற்கும் அனுமன். பிரமாதம். உங்கள் எழுத்துகளில் எப்போதும் அன்பு இருக்கும். திருக்குறள், கம்ப ராமாயணம் என அருமை. ஆன்மிகம் குறித்த எனது குறுக்குசால் எண்ணங்களை கைவிட வேண்டும் என எண்ண  வைத்துவிட்ட உங்கள் எழுத்துக்கு பாராட்டுகள்.

அடுத்ததாக 'நளபாகம்' நண்பர் ரவி. இவரது சிந்தனை கண்டு வியப்பது உண்டு. அதுவும் மகளே என அனு, நிவேதி, கோதை, ரேணுகா, நிலாமகள் போன்ற சக பெண் ட்விட்டர்களை இவர்கள் அழைக்கும்போது நிறைய ஆச்சரியம் அடைவது உண்டு. எத்தனை உரிமையாக பழகும் எண்ணம். அதுவும் இவரது நளபாகம் அனைவரிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. சமையல் செய்ய இவரது இணையதளம் எனக்கும் உதவியது என்று சொல்வதில் மகிழ்ச்சிதான். முதல் இதழில் மைசூர் பாகு. அடுத்த இதழில் கைமா இட்லி. மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். படித்ததும் சமைக்க வேண்டும் என எண்ணம் வரும்படி இருக்கிறது. பாராட்டுகள்.

செல்வி. உமாகிரிஷ் அவர்களை புரட்சி பெண்மணி என்றே சொல்லலாம். சமூக ஆர்வலர். இசைப்பிரியை. இவர் சென்ற வருடம் இளையராஜா இசைக்குழு நிகழ்வுக்கு சென்று வந்து எழுதிய கட்டுரையில் நம்மையும் அங்கே அழைத்து சென்றுவிட்டார். அதுபோல இவர் முதல் இதழில் குறிப்பிட்ட பாடல் பரவசம் அபாரம். இசை, பாடும் விதம், பாடல் வரிகள், பாடியவர் நளினம் என அற்புதமான விவரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த பாடல் கூட. இரண்டாவது இதழில் பாடல் கேள்விபட்டது இல்லை. அதற்காக இசை சண்டை எல்லாம் செய்து விடாதீர்கள். ஆனால்  அந்த பாடல் மூலம் எழுந்த எண்ணங்கள் என அவர் சொன்ன விசயங்கள் ஒவ்வொன்றும் அருமை. பனை ஓலை கொண்டு பதநீர் குடித்தது உண்டு. குருத்தோலை என்றெல்லாம் நான் கேள்விபட்டது கிடையாது. பல விசயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுகள்.

கவிதை என இரண்டு இதழிலும் எடுத்தவுடன் தொடங்குகிறது. முதல் இதழில் ரிஸ்வான் அவர்களின் புதிய வரவு கவிதை. குழந்தைகளின் வலி சொல்லும் கவிதை. தாயின் உருவம் வரைதல், பாலூட்டி செல்தல் என பல வரிகளில் நம்மை மனம் வலிக்க செய்து புதிய வரவுதனை குப்பை தொட்டியில் எதிர்பார்க்கிறேன் என முடிப்பது சமூக அவலம் மாறவில்லை என்பதை குறிப்பிடுகிறது. அடுத்த இதழில் மிஸ்டர்.ஒயிட் என்பவரின் நண்பேன்டா கவிதை பாடல் வரிகளை போல வாசித்து செல்லும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் அந்த வரிகள் சொல்லும் நிகழ்வில் இருந்து இருப்பார்கள். இருவருக்கும் பாராட்டுகள்.

அடுத்து நகைச்சுவை, சிரிங்க நல்லா சிரிங்க. எனக்கு நகைச்சுவை என்று சொன்னதும் திருமதி ஜனனி என நினைக்கிறேன். அவர்கள் சொன்ன 'மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிப்பான்' என்பதுதான் எனக்கு நினைவுக்கு வரும். திரு முருகன் மற்றும் திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை அருமை. திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். எவரேனும் ஒரு நகைச்சுவையை கொண்டு வந்து யாரோடது என கேட்டால் திரு. செந்தில்குமார் என சொல்லிவிடலாம். அதற்காக என்னை பரிசோதிக்க வந்துவிடாதீர்கள். திரு முருகன் வித்தியாசமான சிந்தனையாளர்.

திக் திக் திக் எனும் கதை ஒரு கனவுதான் என எண்ணும்படியாக  மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார் சம்பத். சுதா ஆனந்த் அவர்களின் ஹைக்கூ அருமை. விடுகதை என இரண்டு இதழ்களிலும் உள்ளது. மிகவும் நல்ல முயற்சி. திரு விவேக் மற்றும் திரு சுரேஷ் அவர்களின் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் என இரண்டு இதழ்களில் வெளிவந்து இருக்கும் விசயங்கள் அந்த செல்பேசி பயன்பாட்டாளருக்கு நன்மை தரும். ஜப்பான் திரு ரகு அவர்களின் புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. எப்போதும் போல திரு பரணி அவர்களின் ஓவியங்கள் மிகவும் அருமை. மின்னிதழில் சற்று தெளிவாக வந்தால் நல்லது. இரண்டாவது இதழில் திரு ராஜா முகம்மது அவர்களின் புகைப்படங்கள் மற்றும் திரு தினகர் அவர்களின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இப்போது இந்த புகைப்படங்கள் ஓவியங்கள் என்ன சொல்ல வருகின்றன எனும் ஆராய்ச்சியை இப்போதைக்கு தள்ளி வைப்போம். பொதுவாக புகைப்படங்கள், ஓவியங்கள் தங்களுக்குள் ஒரு பெரும் கதையை மறைத்து வைத்துக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள். எதையோ எடுக்கிறோம், எதையோ வரைகிறோம் என்பதல்ல. அதற்காக பின்னணி குறித்து ஒரு கதையே எழுதலாம். வாழ்த்துகள்.

மருத்துவர் நேரம் என டாக்டர் வந்தனா அவர்களின் சர்க்கரை நோய் பற்றிய விபரங்கள் மிகவும் அருமை. பயனுள்ள விசயங்கள் இருந்தது. அடுத்த இதழில் பல் மருத்துவர் டாக்டர் ரியாஸ் அகமது அவர்களின் பற்சொத்தை மிகவும் சிறப்பும் பயன்படும் வண்ணம் இருந்தது. இந்த சர்க்கரை வியாதி மற்றும் பல்லுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த இரண்டு விசயங்களை அடுத்து அடுத்து இதழில் கொண்டு வந்தது வெகு சிறப்பு. வாழ்த்துகள்.

முதல் இதழில் திரு கவுண்டமணி, இரண்டாவது இதழில் திரு எம் ஆர் ராதா குறித்து பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இதை ஆசிரியர் அவர்களே எழுதி இருக்கிறார்கள். அப்படியே தமிழ் புலவர்கள், தமிழ் அறிவியல் அறிஞர்கள் என குறிப்புகள் இருப்பது கூட நன்றாக இருக்கும். நூல் விமர்சனம் இரண்டவாது இதழில் உள்ளது, வெகு சிறப்பாக பிறர் நூலை வாங்கும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. எழுத்தாளர் முத்தலிப் அவர்களுக்கு பாராட்டுகள். திரு சாத்தூரான் அவர்களின் பாட்டி கதை இவ்வுலகில் அன்பு எப்படி இருக்கிறது, எப்படி மனிதர் கஷ்டம் கொள்கிறார்கள் என அறிய முடிந்த அழகிய பதிவு. நிறைய அனுபவங்கள் கொண்டவரும் இயற்கையை நேசிப்பவரும் ஆவார். அருமை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வித்தியாசம். என்ன காரணத்திற்கு சொல்லப்பட்டு இருக்கும் அதன் பின்னணி என்ன என அலசிப்பார்க்கும் பழமொழிகள் குறித்த எண்ணங்கள் அருமை. திரு பாலகணேஷ் அவர்களின் புதிர் சிறப்பு. மேலும் ஆங்காங்கே டவிட்கள் மின்னுகின்றன. முன்னரே படித்து இருந்தாலும் இதழில் படிக்கும்போது அதற்குரிய சிறப்பே தனிதான்.

ஒரே வரியில் விமர்சனம் - நமது திண்ணையில் வெட்டிக்கதைகள் பேசப்படுவதில்லை.

ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன், வடிவமைப்பாளர் திரு அல் அமீன் அவர்களின் முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

நன்றி. 


Tuesday 4 November 2014

கதைத் திருடன்

அன்புக்குரிய மதுசூதனபெருமாள்

எனதருமை நண்பா
எப்படி இருக்கின்றாய்
என்னை உனக்கு இன்னமும்
நினைவு இருக்கிறதா?

இரண்டு மாதங்கள் முன்னர்
இருள்  ஒன்றை பொருட்படுத்தாது
இரண்டு மணி நேரம்
சாலைகளின் பயம் கடந்து
நிறையவே சிந்தித்த கதை ஒன்றை
உன்னிடம் கொண்டு வந்தேன்
எந்த மண்டபத்தில் எழுதி
வாங்கி வந்தாய் என்றே
ஏளனமாக என்னைக் கேட்டாய்

படித்துப் பார் என சொல்லிவிட்டு
கதை எப்படி என்றே உன்னிடம்
கருத்து ஒன்றை கேட்டேன்
குப்பையில் தூக்கிப் போடு
என என் மனதை நீயும்
கசக்கி எறிந்தாய்

பழக்கமான நீயே இப்படி
சொன்னபிறகு எவரிடம்
இந்த கதையை கொண்டு
காண்பிப்பது என உன்னிடமே
இருளோடு மனம் இருள
விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்

அடுத்த ஒரு அற்புதமான சிந்தனை
என புதிய கதை ஒன்றை
எழுதி உன்னிடம் தந்தேன்
எந்த மண்டபத்தில் என்ற
அதே கேள்வியும் குப்பை என்ற
அதே பதிலும் நீ சொன்னாய்

மனம் உடைந்து உன்னிடமே
அந்த கதையையும் ஒப்படைத்து வந்தேன்
இன்னுமொரு கதை சிந்திக்க
இரவு பகல் பாராது முற்பட்டேன்
நீ நன்றாக இருக்கிறது
என சொல்லும்வரை என் முயற்சி
முடங்குவதில்லை உறுதி கொண்டேன்

உன்னை வந்து பார்த்த
மூன்றாவது வாரத்தில்
என் வீட்டு கோபாலன்
எப்போதும் போல என்னிடம் ஒரு
வார இதழ் கொண்டு வந்து
தந்துவிட்டு போனான்
அதில் வந்த கதை ஒன்றை
வாசிக்கையில் உன் பெயர் போட்டு இருந்தது
நான் எழுதி நீ குப்பை
என்று ஒதுக்கிய கதை

கோபாலன் மறுவாரம் வந்து
தந்துவிட்டு போன வார இதழில்
அதில் வந்த கதை
நான் எழுதி நீ குப்பை என
ஒதுக்கிய இரண்டாவது கதை
உன் பெயர் போட்டு

பெற்ற பிள்ளையை
தாயின் அனுமதியின்றி
தத்து கொடுத்தது போல
வார இதழில்
என் கதைகளில் உன் பெயர் கண்டு 
பரிதவித்து போனேன்

அன்றே புதிய கதையுடன்
உன்னை சந்தித்தேன்
நீயும் வழக்கம் போல கேள்வியும்
நிராகரிப்பும் செய்தாய்
வார இதழ்கள் காட்டி
என்ன இது என்றேன்
எனது கதை தான்
எனக்கான புனைப்பெயர்
உனது பெயர் என்றாய்
மன்னித்துவிடு என நீ
என்னிடம் மன்றாடினாய்
பழகிய பழக்கத்திற்கு
பரிதவிப்புடன் நானும்
வீடு வந்து சேர்ந்தேன்


இந்த முறையும் நீ குப்பை
என நிராகரித்த கதையை
நானே அதே வார இதழுக்கு
உனது பெயர் பொறித்து
அனுப்பி வைத்தேன்
முகவரி மாற்றிய விபரம் குறித்து


கோபாலன்
வார வாரம் என்னிடம்
உன் பெயர் பொறித்த
குப்பை கதை சுமந்து
வரும் வார இதழுடன்
வந்து போகிறான்
அதில் உனக்கான பெயரும் பணமும்
எனக்கான அங்கீகரிக்கப்பட்ட
சின்னதொரு திருப்தியும்

அன்புடன்
சீனிவாசபெருமாள்

Wednesday 26 March 2014

அறிவுகெட்ட

உன்னை நான் காதலிச்சேன்.
என்னை நீ காதலிச்ச.
எனக்குப் பிடிச்சது
உனக்குப் பிடிச்சது.
கல்யாணம் பண்ணிக்கலாம்னு
திட்டம் போட்டோம்.
நீயும்தான் சரின்னு சொன்ன.

அடி பாதகத்தி
காதலுல வந்த சின்ன சின்ன
சண்டைகள் எல்லாம்
அன்பின் தடயம்னு
நானும்தான் நம்பி இருந்தேன்
உன்னோட கோவத்தை எல்லாம்
பாசம்னு கதை படிச்சேன்

போராடி வீட்டுல வாங்கிய
சம்மதம் வைச்சி
போட்டேன் மூணு முடிச்சி
நம்ம சந்தோசத்துக்கு
பெரிய வலை விரிச்சி
நீயும்தான் கழுத்து நீட்டின

என்னைவிட நீ பெரிய படிப்பு
என்னைவிட நீ பெரிய பதவி
என்னைவிட நீ பேரழகி
எப்பவுமே பேதம் பாக்கலையே
இதையெல்லாம் என்கிட்டே
ஒருபோதும் நீ கேட்கலையே

ஆத்தாடி நீயும் என்
ஆசைநாயகி ஆன பின்னே
எல்லாமும் வித்தியாசம் ஆகுமா
இதையே ஒரு காரணம்
என நீ சொன்னா தகுமா

உன்னோட சேவகனா
நான் கிடக்கேன்
என்னை நீயும்
கை வுட்ராதே
கைகட்டி நானும் நிக்கிறேன்
உன் கண் பார்வையில்
இருந்து என்னை ஒதுக்காதே
பலமுறை கேட்டாலும்
படுபாவி உன் காது செவிடா

பாவ புண்ணியம் பாக்காம
கோர்ட் வாசப்படி
மிதிக்க வைச்சே
உன்னை கொடுமை
படுத்துறேனு கொடி பிடிச்ச
படிப்பு, பதவின்னு
சொல்லி வைச்ச

சண்டாள பயபுள்ளைக
உண்மை தெரியாம
நீதி சொன்னாக
இதை சரித்திரத்தில
தப்பாக குறிச்சி வைப்பாங்களே

எல்லாம் இந்த
அறிவுகெட்ட





Wednesday 1 January 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2014

தவறான தகவலை சுமந்து திரியும்
வருட எண்கள்.

உலகம் தோன்றிய முதல் தினம்
இதில் கணக்கில் இல்லை.

தோன்றா பெருமையினை வைத்து சொன்ன
வருடாந்திர கணக்கு.

எல்லா வருடங்களுக்கும் பன்னிரண்டு மாதங்கள்
மட்டுமே வாழ்க்கை.

பன்னிரண்டு முறை மாத பிரசவம்
கொள்ளும் வருடம்.

சென்ற வருடத்தில் விதைத்த விதை
இவ்வருடத்தில் அறுவடைக்கு தயாராகலாம்.

வழக்கம் போலவே எல்லாரும்
வேண்டி செல்கின்றனர்
புது வருடம் புதியவை தர வேண்டுமென -
தாங்கள் பழையவர்கள் என்பதை மறந்து.








Tuesday 24 September 2013

நிலையில் பிரியேல்

உன்னை மறந்துவிட 
என்னிடம் 
ஆயிரம் கோடி 
கொடுத்தாலும் 
என்னை நான் மறந்தால் 
அன்றி 
எதுவும் நடக்காது 

கொண்ட துயரமோ 
கூடி வரினும் 
கண்டு கலங்கி 
செய்வதறியாது 
திகைத்து நிற்பினும் 
உன்னை விட்டு 
விலகிட மனம் உண்டோ!

தீயவை எனின் 
புறம் தள்ளலாம் 
செய்யத்தகாவை எனின் 
சீ என ஒதுங்கலாம் 
கண்ணில் மனதில் 
எண்ணத்தில் உள்ள 
உன்னை 
தூக்கி எறிந்திட முடியுமோ!

கீழ்தட்டு நிலையில் 
இருந்து 
மேல்தட்டு நிலைவரை 
உயர்ந்து ஓங்கிய பின் 
கீழே வீழ்ந்திடும் 
நிலை வரின் 
உயிர் நிற்குமோ!

எவ்வித தடைவரின் 
குழப்பமும் 
குந்தகமும் 
விளைவித்தே எவரும் வரின் 
நாம் கொண்ட 
காதல் நிலையில் 
எக்கணமும் பிரியேல் காதலி. 


Thursday 29 August 2013

எதைத் தேர்ந்தெடுப்பது?

வீட்டின் வாசலைத் தாண்டியதும் 
எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் 
மனம் கொள்ளும் குழப்பங்கள் 

கொட்டிக் கிடக்கின்றன வகை வகையாய் 
தொட்டு எதை எடுப்பது என்பதில் 
தட்டு தடுமாறியே போகும் எண்ணங்கள் 

எதை எல்லாம் எழுதுவது 
என்பதில் கூட 
கலங்கி நிற்கும் 
கவிதைகள் 

Wednesday 6 March 2013

நீ பேசுவதில் இருக்கிறது

கல்யாணத்திற்கு முன்னர்
நீ பேசமாட்டாயா
என்றே இருந்தது
கல்யாணத்திற்கு பின்னர்
நீ எதற்கு பேசுகிறாய்
என்றே இருக்கிறது
எவரோ எழுதிய வரிகள்
அவை இனி நம் வாழ்வில்
வருமா புரியவில்லை 

என்னோடு பேச
வருபவர்களைவிட
உன்னோடு
பேசிக்கொண்டிருப்பது மட்டுமே
எனக்குப் பிடிக்கும்.

உன்னை என் அம்மாவிடம்
அழைத்து சென்று
அம்மாவிடம்
உன்னைப்போல் ஒரு பெண்
என்றே உன்னை
காட்டிடத் தோணும்

அம்மாவும் தனது பாரம்
குறைந்ததாய் கண்கள்
நனைத்து கொள்வார்
என்னை காத்திட
நீ கிடைத்தாய் என்றே
பூரித்து கொள்வார்

மௌனமாய் நீ அமர்ந்து
இருந்தால்
மரணத்தை தழுவுவது
போன்றே நெஞ்சில் ஊர்கிறது

மௌனத்தை கலைத்திட
வார்த்தை ஒன்றை
தேர்ந்தெடுத்திட தேடுகையில்
ஏதேதோ பேசி முடித்துவிட்டாய்

நீ பேசிய வார்த்தைகள்
எதுவுமே நினைவில் இல்லை
மௌனத்தில் நீ அமர்ந்து
கொள்வது
மரணத்தை நான்
தழுவுவது போன்றது

இனிமேல் நீ பேசுவதில் தான்
இருக்கிறது
நமது காதலும்
காதல் வாழ்வும். 

Tuesday 12 February 2013

மூர்க்க ஜந்துகள்

அரிவாளுடன் என் முன்னே
அவர் அப்படி வந்து நிற்பார்
என்று ஒருபோதும்
 நான் கனவில்
நினைத்ததும் இல்லை.

அவரது பெண்ணை
நான் இழுத்து சென்று
திருமணம் செய்வேன் என்று
அவர் ஒருபோதும் கனவில்
நினைத்து இருந்திருக்க
மாட்டார் என்றே
எண்ணிட பயமாயிருக்கிறது.

நான் மார்க்கமானவன்
எனக்கு
நான் மூர்க்கமானவன்
அவருக்கு

இப்படியாய் பல விசயங்களில்
மூர்க்கத்தனம்
இரண்டு 'கறை'களாய்
வாழ்க்கையை
அலங்கரிக்கிறது. 

Wednesday 6 February 2013

அவள் இறங்கிவிட்டாள்

எட்டிப் பிடித்த பேருந்து ஒன்றில்
முட்டி மோதி இடம் பிடிக்கையில்
பட்டுபோன்ற கன்னம் கொண்டவள்
சிட்டாக அமர்ந்து இருந்தாள்
எதிர் இருக்கையில்

இதயத்தில் மொட்டு ஒன்று
உதயம் ஆனது போன்று
புன்னகை பூக்கள்
மென்னகையாய் விழுந்தது
எதிர் இருக்கையில்

அவள் செல்லுமிடத்து
நானும் சென்றிடவே
எண்ணம் கொண்ட வேளையில்
நடந்துவந்த நடத்துனரிடம்
நளினமாக பேசிய அவள்
கண்ணிமைக்கும் நேரத்தில்
இறங்கியே போனாள்
எவரேனும் இனி அமரக்கூடும்
எதிர் இருக்கையில். 

Wednesday 31 October 2012

அல்வா கிண்டும்

நடிகையாகும் முன்னரே
நன்மங்கை
அட்டகாசமாய் கிண்டுவார் அல்வா
அல்வாவின் ருசியை
ஆர்ப்பரித்து பேசி செல்வர்

பாதம் அல்வா பாங்குடனே
பிஸ்தா அல்வா பிசகாமல்
கேரட் அல்வா கவனத்துடன்
இனிப்பை அளவுக்கு
சற்று தூக்கலாய்
கிண்டிய அல்வாவுக்கு
கிறங்கித்தான் போவோர் பலர்

நடிகையான பின்னரும்
நன்றாகவே கிண்டுவார் அல்வா
அல்வாவின் பக்குவம்
அவருக்கு மட்டுமே தெரிந்தது போல்
தினமும் கிண்டித்தான் வைப்பார்

அல்வாவை எவருக்கும் 
அவராக சென்று தந்ததில்லை 


அரசியலுக்கு வந்த பின்னர்
அல்வாவின் தேவை
அளவுக்கும் அதிமாகிப் போனது
ஆட்கள் எல்லாம்
வைத்துக் கொள்வதில்லை
அவரேதான் எசமானி
சாமானியனும் மறுக்காமல்
அல்வாவின் பெருமை பேசுவர்

அளவுக்கு அதிகமான அல்வா
கிண்டியவருக்கு ஒருபோதும்
தந்ததில்லை பிரச்சினை
தானாக சென்று
உண்டு களித்து இருந்தோர்க்கு
உள்ளதே எக்கணமும் பிரச்சினை

அல்வாவை எவருக்கும்
அவராக சென்று தந்ததில்லை
சொல்வாக்கு இல்லாது போனாலும்
செல்வாக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
கிண்டித்தான் மட்டுமே வைக்கிறார் அல்வா


Tuesday 30 October 2012

காதலில் வக்கிரம்

எனக்கு நீ கிடைக்காமல் போனால் 
எவருக்குமே நீ கிடைக்காமல் 
போகக் கடவது என்றே 
சாபம் இட்டதுண்டு 

தினந்தோறும் நீ வரும் பேருந்தில் 
அன்று நீ வராததை கண்டு 
அந்த பேருந்து கவிழட்டும் 
என்றே நினைத்தேன் 

உனது அழகிய முகத்தை 
நான் பார்க்கக் கூடாது 
என்று சொன்ன உன் தந்தைக்கு 
பாடம் புகட்ட 
அமிலத்தை அவரது  முகத்தில் 
தெளித்துவிட துடித்தேன் 

எனது காதலை உன்னிடம் 
சொன்னபோது 
நீ மறுத்து வெறுத்து ஒதுக்கிய 
மறுகணம் 
நான் இறந்துவிடலாம் என்றே 
கலங்கினேன்

காதலும் காதல் சார்ந்த 
இடம் கல்லறை 
என அனைவரும் 
சொல்லிவிடட்டும் என 
உன்னையும் அன்றே 
கொன்று ஓரிடத்தில் நம்மிருவரையும் 
புதைக்க பயணித்தேன் 

உள்ளத்தில் உள்ள காதலை 
தேக்கி வைக்க இயலாமல் 
உள்ளத்தில் உள்ளது எல்லாம் 
உன்னிடத்தில் மீண்டும் சொன்னபோது 
நான் தவிக்க வேண்டும் என்றே 
நீ என்னை தவிர்ப்பதாக சொன்னாய் 

என்னில் மட்டும் இல்லை 
காதலில் வக்கிரம் 
உன்னிடத்திலும் உண்டு 
கண்டுகொள்!

Tuesday 2 October 2012

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்
நீயோ என்னுள் நீயாக இருக்கத் துடிக்கிறாய்
உன்னை நான் புறந்தள்ளிச் செல்கையில்
நீ புறக்கணிக்கப்பட்டதாக புலம்புகிறாய்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

உன்னை என்னுள் சுமக்கத் தொடங்கிவிட்டால்
என்னைத் தொலைத்த நிமிடமும் அதுதான்
நீயும் நானும் ஒன்றென்றே நன்றென்றே
குருட்டு காவியமும் பாடும் நிமிடமும் அதுதான்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

ஒற்றை வரிக் கதை ஒன்று
உனக்காக மட்டும் சொல்கிறேன் இன்று
ஆற்றைக் கடக்க முனிவர் அவரொடு
அங்கே அப்பழுக்கற்ற அழகிய யுவதி
சேற்றை பூசியபடி சாமான்யன் ஒருவன்

யுவதியின் அவதியை கண்டான் சாமான்யன்
தன்தோளில் ஏறியே அமரச் செய்தான்
காற்றை போலவே கடந்தான் முனிவருடன்
மறுகரை தாண்டியதும்  யுவதி நன்றியுடன்
வணக்கம் சொல்லியே போயே போயினள்

பலநேரம் முனிவரும் சாமான்யனும் நடந்தே
வெகுதூரம் அடைந்தனர் காட்டினுள் இருட்டாய்
முனிவரோ யுவதியின் வதனம்பற்றி வினவவே
வேறு தலைதிருப்பி இறக்கியாச்சு அவளை
மனதில் இன்னும் சுமக்கிறீரோ நீர்முனிவரோ

சாமான்யன் வார்த்தை உரைத்தது சுரீரென்றே
தவம் கலைத்தே முடித்தனன் முனிவரும்
வேசம் தரித்து விஷம் கொண்டு
உலவித் திரிவது உலகில் எங்கனம்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

என்னைப் போல இருந்திட நீ நினைக்கையில் 
மண்ணுக்குள் போய்விடவே மனசும் ஏங்கும்
உன்னைப் போல நீயும் இருந்தால்
உலகம் உனக்கென்றதாகவே தினமும் தோன்றும்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

அறிவியல் சொல்லும் ஒரு கதை
சொல்லி முடிக்கிறேன் மனதில் வை
ரெட்ரோ வைரஸ் ரெட்ரோ வைரஸ்
கதையின் நாயகன் கவனமாய் கேள்
ஆர் என் ஏ கொண்ட செல்லின் அமைப்பு

அறிவியல் விதி ஒன்று
டி என் ஏ தான் ஆர் என் ஏ வாக மாறி
புரதம் உண்டாக்கும்

ரெட்ரோ வைரஸ்
உடல் செல்லுக்குள் நுழைந்தே
தன் ஆர் என் ஏவை டி என் ஏவாக்கி
உடல் செல்லை கொல்லும்

உன்னை என்னுள் பரவ விட்டால்
என்னை எனக்கு எனக்கே புரியாது
காதலி என்று சொல்லிக் கொண்டு
மனக் கதவின் ஓரம் நிற்காதே
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

Saturday 14 July 2012

எவருக்கு என்ன லாபம்

என் எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டு 
நீ இல்லையெனில் 
நீ என் அன்னையும் இல்லை 
நீ என் தந்தையும் இல்லை 
உங்களுக்கான மகனும் நான் இல்லை 
வெற்று உறவாய் இருப்பதில் 
எவருக்கு என்ன லாபம் 

என் சிந்தனையின் கோட்டில் 
நீ இல்லையெனில் 
நீ என் தோழனும் இல்லை 
நீ என் தோழியும் இல்லை 
உங்களுக்கான தோழமை எனதில்லை 
நட்பு என சொல்லிக்கொள்வதில் 
எவருக்கு என்ன லாபம் 

நான் கேட்கும் வரங்கள் 
நீ தரவில்லையெனில் 
நீ கடவுள் இல்லை 
உனக்கு கோவில் இல்லை 
உனக்கான பக்தனும் நான் இல்லை 
இருப்பதாய் சொல்லிக் கொள்வதில் 
எவருக்கு என்ன லாபம் 

எல்லாம் இருந்தும் இருந்தும் 
நிம்மதியாய் நீ இல்லையெனில் 
இது உன் வாழ்க்கை இல்லை 
வாழ்க்கையில் பயனும் இல்லை 
பூமிக்கான மனிதனும் நீ இல்லை 
மனம் செத்த சடமாய் இருப்பதில் 
எவருக்கு என்ன லாபம் 

தெளிந்த அறிவு இன்றி 
தேடுவதில் உன்னை தொலைத்தால் 
இயற்பியல் விதிகளும் இல்லை 
இயற்கை தேர்வும் இல்லை 
இதற்கான நடைமுறையும் இல்லை 
பரிணாமமும் பகுத்தறிவும் சொல்வதால் 
எவருக்கு என்ன லாபம் 

லாபம் என்றே தொடங்கிட 
இது வியாபாரம் இல்லை 
பாபம் என்றே ஒதுங்கிட 
இது பந்தயம் இல்லை 
அன்பில் கிடந்து வாழ்ந்திடும் 
பண்பின் சிகரமாம் வாழ்க்கை இது
எவருக்கு என்ன லாபம் 
என்றே கணக்கை தவிர்த்து 
எல்லோருக்கும் லாபம் என்றே 
போற்றி வாழ்ந்திடுவோம் 

Friday 23 March 2012

மௌன நிலை

உன்னைக் கண்டேன் உன்னைக் கண்டேன்
உலகம் மறக்கிறதே - துன்ப
உலகம் மறக்கிறதே

உறங்க மாட்டேன் உறங்க மாட்டேன்
மனசு துடிக்கிறதே - மனசு
கிடந்து துடிக்கிறதே

கனவு இல்லை கற்பனை இல்லை
புரிந்து கொள்வேனா
காதல் இன்றே கனிந்தது என்றே
தெரிந்து கொள்வேனா - மனதில்
உவகை கொள்வேனா

ஆசையை துறந்திட
ஆவல் வந்து பிறந்து மடிகிறதே
நேசம் மட்டும் கொண்டேனென்று
நெஞ்சம் சொல்கிறதே - கண்ணில்
தஞ்சம் கொள்கிறதே.

வாழ்வில் மௌனம் தான் எத்தனை அழகு. இந்த மௌனத்தை கடைபிடிக்க எத்தனை துணிவு வேண்டும். எவரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனடியாய் பேச தோன்றும் நிலையை ஒதுக்கிவிடும் இந்த மௌனம் தான் எத்தனை அழகு.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் எனும் பாடலில் வரும் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை எனும் வரிகள் போல இந்த மௌனத்திற்கு என்ன விலை கொடுத்து விட இயலும். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றே அர்த்தப்படுத்தபட்டாலும் மௌனம் பேசும் மொழியை அறிந்தவர் எவரேனும் உண்டா.

இந்த மௌனம் என்ன சொல்ல வருகிறது என அவரவர் ஒன்றை நினைக்கத்தான் வாய்ப்பு உண்டு. இறைவன் மௌனியாகவே இதற்காகவே இருக்கிறானோ! நீ போட்டு வைத்த பாதையில் நான் நடந்து செல்வதை பெருமிதமாக நினைக்கிறேன். பாதை எனக்கு சொந்தமானது அல்ல என்றாலும் கூட.

உன்னை கண்டேன் இறைவா
உறங்க மாட்டேன் என மனசு துடிக்கிறது
எங்கே உறங்கினால் நீ கண்ணில் இருந்து
மறைந்து விடுவாய் என்கிற துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

மௌனமாக உன்னிடம் பேசும்போது
எவருமே என்னை எதுவும் நினைப்பதில்லை
உன்னிடம் பேசுவதாக ஊரெல்லாம்
சொல்லிவைத்தால் ஏதேதோ சொல்லிவிடுவார்கள்.

மௌனம் தான் எத்தனை அழகு. என் மனதில் இருப்பதை இந்த மௌனம் ஒருபோதும் வெளியே சொன்னதும் இல்லை. முக பாவனைகளை கூட மறைத்துவிடும் பாக்கியம் மௌனத்திற்கு உண்டு. மௌனம் அவரவர் மனதிற்கேற்ப சம்மதத்திற்கு அறிகுறி.

உன்னைக் கண்டேன் இறைவா இனி உறங்க மாட்டேன். 

Friday 2 March 2012

தேடிக் கொண்ட விசயங்கள் - 5

ஆர் என் ஏ பற்றி குறிப்பிடுவது எனில் நமது எண்ணத்திற்கு வருவது புரதம். இந்த புரதம் நமது உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த எண்ணற்ற புரதங்களை உருவாக்க அமினோஅமிலங்கள் உபயோகப்படுகின்றன. மொத்தம் இருபத்தி இரண்டு அமினோஅமிலங்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த இருபத்தி இரண்டு அமினோமிலங்களில் இருபது அமினோஅமிலங்கள் நமது மரபணு குறிப்புகள் மூலம் சேர்ந்து பலவிதமான புரதங்களை உருவாக்குகின்றன.  இதில் ஒன்பது அமினோ அமிலங்கள் நமது உடல் மூலம் உருவாக்க முடியாத காரணத்தால் அவை உணவு வகையில் இருந்து பெறப்படுகிறது. மற்ற அமினோ அமிலங்கள் நமது உடலில் உருவாக்கப்படுகிறது. உணவுகளில் இருந்து மூலமே பெறப்படும் அமினோ அமிலத்தை 'முக்கியத்துவம் வாய்ந்த அமினோ அமிலங்கள்' என அழைக்கிறார்கள்.

நமது உடலில் வினையூக்கிகள், ரிசெப்டார், சில ஹார்மோன்கள் எல்லாம் இந்த புரதத்தினால் ஆனவையே. அதனால் தான் இந்த புரதம் தனை உடலின் அடிப்படை மூலக்கூறுகள் என்று அழைக்கிறார்கள். அதன் காரணமாகவே புரத சத்து அதிகமுள்ள உணவினையும் நம்மை உட்கொள்ள சொல்கிறார்கள். புரத சத்து உணவை நாம் உண்ணும்போது அந்த புரதம்தனை நேரடியாக நமது செல்கள் உறிஞ்சி கொள்ள முடியாததால் அவை எல்லாம் சிறு அமினோ அமிலங்களாக புரோட்டியேஸ் எனப்படும் வினையூக்கியால் மாற்றப்பட்டு பின்னர் நமது உடல் நமக்கு தேவையான புரதத்தை மாற்றி கொள்கிறது.

அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது உடலில் இருந்தாலும் அது ஆபத்துதான். அப்படி அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது கல்லீரலில் சென்று அவை உயிர்வினைக்கு உட்பட்டு யூரியாவாக மாற்றம் கொள்கிறது.



இந்த யூரியா நமது உடலில் இருந்து சிறுநீரகம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றபடுகிறது. அப்படி வெளியேற்றபடாத பட்சத்தில் நமது உடலில் விஷத்தன்மை ஏற வாய்ப்பு உள்ளது. ஆர் என் ஏ பற்றி பேச ஆரம்பித்துவிட்டு புரதம், அமினோ அமிலங்கள் பற்றி கூறுவதற்கு காரணம் இருக்கிறது. இந்த அமினோ அமிலங்களை புரதத்தை உருவாக செய்வது ஆர் என் ஏ தான். என்னதான் டி என் ஏ தன்னிடம் எல்லா விசயங்களையும் சேமித்து வைத்தாலும் இந்த ஆர் என் ஏ க்கள் இல்லை என்றால் எந்த ஒரு வேலையும் நடக்காது. இதற்கு முக்கிய காரணம் டி என் ஏ வால் நமது செல்லின் கருவில் இருந்து வெளியேற முடியாது.

அப்படி கருவில் இருந்து வெளியேற முடியாவிட்டால் எப்படி தனக்குள் இருக்கும் சிந்தனைகளை டி என் ஏ வெளியே சொல்ல இயலும்? அதற்காக உருவானதுதான் ஆர் என் ஏ. இந்த புரதம் எல்லாம் ரிபோசொம்ஸ் எனும் செல்லின் ஒரு பகுதியில் நடைபெறுகிறது. இது கருவுக்கு வெளியே இருக்கிறது. எனவே இந்த ஆர் என் ஏவானது டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெற்று கொண்டு அதை வெளியே கொண்டு வந்து புரதம் தனை உருவாக்க வழி செய்கிறது. ஒரு ஆர் என் ஏ மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை. ஆர் என் ஏக்கள் ஐந்து வகைப்படும்.

மேசன்ஜெர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ தான் டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெரும் ஆர் என் ஏ.

டிரான்ஸ்பர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ அமினோ அமிலத்தை மெசஞ்சர் ஆர் என் ஏ வில் உள்ள மரபு குறிப்புகளுக்கு ஏற்ப கொண்டு வந்து சேர்ப்பவை.

ரிபோசொம் ஆர் என் ஏ. இவை புரதத்தை உருவாக்க உதவுபவை.

மைக்ரோ ஆர் என் ஏ. ஸ்மால் இண்டர்பிரோன் ஆர் என் ஏ எல்லாம் இருக்கின்றன.

ஆர் என் ஏக்கும் டி என் ஏக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. டி என் ஏ இரட்டை சங்கிலி. ஆர் என் ஏ ஒரு சங்கிலி. ஆர் என் ஏவில் தைமின் பதில் யுராசில் எனும் அமைப்பும், ரிபோஸ் எனும் சர்க்கரையும் உண்டு.

டி என் ஏ வில் உள்ள பல விசயங்களை புறந்தள்ளுவது இந்த ஆர் என் ஏ க்கள். இந்த ஆர் என் ஏ க்கள் முதன் முதலில் உருவாகி அதன் பின்னரே டி என் ஏ உருவாகி இருக்கலாம் என்றே கருதுகிறார்கள். ஆர் என் ஏ வைரஸ் உலகின் முதல் உயிரற்ற செல்.

எப்படி உயிரற்ற ஒன்றிலிருந்து உயிருள்ள ஒன்று உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டவே இந்த வைரஸ் இன்னும் உலவி கொண்டிருக்கிறது. உடல் நோய் தருவது வைரஸ் எனும் கிருமி. அதை போலவே கணினி கட்டுப்பாட்டினை செயல் இழக்க செய்வது வைரஸ் என்றே அழைத்தார்கள்.

பாக்டீரியா தரும் நோயிற்கும், வைரஸ் தரும் நோயிற்கும் வித்தியாசம் இருக்கத்தான் இருக்கிறது. வைரஸ் பற்றிய கவிதை என்றோ எழுதியது.

ஒடுக்கப்பட்ட உயிர் 
அடக்கப்பட்ட உயிர் 
தனித்து இருந்தால் மயான நிலை 
ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை 

மண் துகள்களுக்கு 
விமோசனம் தந்து 
உயிரற்ற பொருளுக்கும் 
உயிர் கொண்ட பொருளுக்கும் 
பாலமும் பகையுமாய் 

ஒற்றை கயிறு ஆர் என் ஏ 
கொண்டு 
இரட்டை கயிறு டி என் ஏ 
திரித்து 
உலக உயிர்களின் வழியானாய் 
உலக உயிர்களுக்கு வலியுமானாய் 

உன்னில் தேடுகிறேன் 
எனக்கான இறைவனை!



(தொடரும்)

Thursday 16 February 2012

காதலில் காதல் இல்லை

வருடம் தவறாமல் வாங்கி செல்கிறேன்
வாடிப்போக இருக்கும் பூக்களையும்
மடிந்துபோன மரத்திலால் ஆன வாழ்த்து அட்டையும்
உணர்வற்ற வண்ணமிகு பரிசுப் பொருளும்

எனது உணர்வுகளை இவையெல்லாம் சுமக்கின்றனவாம்
காதலை வெளிப்படுத்துவதன் அவசியம் சொல்கிறார்கள்
கட்டியணைத்து உச்சிநெற்றியில், ஓரத்து இதழில் பதிக்கும்
முத்தம் தரும் பாதிப்பைவிடவா இவை தந்துவிடப்போகின்றன.

கண்கள் கலங்க வைக்கும் கதைகள் கேட்டதுண்டு
காதலை காதலால் மட்டுமே அவை சொல்லிச் சென்றதுண்டு
கருமேகங்கள் மறைத்து நிற்க வேடிக்கைப் பார்க்கும்
மழைத்துளிகள் போன்றே காதல் தவித்து போகிறது

வருடம் தவறாமல் வாங்கிச் செல்கிறேன்
இதை ஒரு வழக்கமாக கொண்டபின்னர்
அதுவுமே பழக்கமாகிப் போனபின்னர்
காதலில் காதல் ஒருபோதும் இருப்பது இல்லை. 

Thursday 19 January 2012

இது எல்லாம் கவிதைகள்

மழையில் நனையாமல் இருக்க
குடை பிடித்தேன்
குடை நனையாமல் இருக்க
மழை நிற்குமா?!

பிரச்சினைகள் கண்டு கண்டு
ஓடி ஒளிந்தேன்
நான் ஓடி ஒளிந்ததை கண்டு
பிரச்சினைகள் ஒழியுமா?!

அன்பின் அவசியம் குறித்து 
கோபம் கொண்டேன் 
கோபம் கொள்வது என்பது
அன்பில் அவசியமா?!

இறையென பலர் சொன்னதும் 
இரை என்கிறேன் 
இரையின்றி இறைவன் சரி
மனிதன் சரியா?!

ஏனோ கவிதைகள் புரிவதில்லை
வார்த்தைகள் என்றேன் 
வெறும் வார்த்தைகள் கொண்டால்
கவிதை அவையாகுமா? 

Monday 26 December 2011

நானெல்லாம் ஒரு அப்பா!

பொறுப்புகளை தட்டி கழித்தே  பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும்,
பிள்ளைகளை பேணி காக்கும் முறையை தவறவிட்ட சிறுபிள்ளையாய்,
ஆசையாய் பேச வரும் பிள்ளையை ஆயிரம் வேலையை காட்டி தள்ளிவிடும்
ஒரு ஆதரவற்ற நிலை செல்லும் ஆதரவற்ற நிலை காட்டும் நானெல்லாம் ஒரு அப்பா!

எடுத்ததற்கெல்லாம் சத்தம், அந்த சத்தத்தில் இதயம் உடையும் பிள்ளை,
 படுத்தி எடுத்துவிட்டு பாவமாய் பார்க்கும் பார்வை மீண்டும் மறந்து
ஏதேதோ உலகம் என எங்கெங்கோ சென்று அலைந்து தொலைந்து
மார்போடு கட்டி அணைத்து மகிழும் கதை பேசாத நானெல்லாம் ஒரு அப்பா!

தாயுமானவனாய் தவமிருக்காமல் தந்தையுமானவனாய் படியளக்காமல்
சேயின் மனமறிந்து சேவகம் செய்யாமல் செத்த நிலை கொண்டு
வேலை வேலை என ஓட்டமும் நடையுமாய் வெந்து போன காலமும்
நினைவில் வந்து மனதை அழுத்த கலங்கிடும் நானெல்லாம் ஒரு அப்பா!

என் அப்பாவை எண்ணி கலங்கியே ஏக்கத்துடன் நகரும் நாட்கள்
என் பிள்ளையை கண்டு கலங்கியே  கலக்கத்துடன் நகரும் நாட்கள்
என் அன்னையை அருகே வரவழைத்து அரவணைக்காத பொழுதுகள்
நல்ல பிள்ளையாய் இருக்க தெரியாத நானெல்லாம் ஒரு அப்பா!

தனது குழந்தையை சீராட்டி பாலூட்டி உறவாய் இருந்து வளர்த்து
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்புடன் சேவகம் செய்து
நானெல்லாம் ஒரு அப்பா என நாணி கொள்ளாமல்
நான் தான் அப்பா என பெருமையுடன் சொல்லி மகிழ இவ்வாழ்வு போதும், எவருக்கும்!

Monday 19 December 2011

பைத்தியகாரர்கள் சங்கமம்

இவர்கள் ஏனோ குழுமமாய் திரிகிறார்கள். இவர்கள் நோக்கங்கள் எவரேனும் அறிந்தது உண்டா!
இணையத்தில் எழுதுகிறார்கள். எழுதியதால் இணைகிறார்கள். வருடம் ஒருமுறையோ சிலமுறையோ கூடி கழிக்கிறார்கள், களிக்கிறார்கள். 

எழுத்து பைத்தியங்கள் இவர்கள். பைத்தியகாரத்தனத்தை பதிவு செய்தும் வைக்கிறார்கள். இவரின் பராக்கிராமங்களை  படித்துப் பார்த்தது உண்டா! கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என்றே கண்டதையும் சொல்லித் திரிகிறார்கள், பிரிகிறார்கள். 

அறியா சங்கங்கள் வைத்ததால் நாடு பலன் பெற்றது உண்டா! ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொண்டதை அறியாதோர் போல் நடந்தே செல்கிறார்கள். மன அழுத்தத்தில் முகம் தனை மறைத்தே உலவுகிறார்கள், உறைகிறார்கள். 

சின்னதாய் ஆரம்பித்தே பெரியதாய் மாறப்போகும் தன்மை கண்டது உண்டா! ஈக்கள் மொய்த்தால் பண்டங்கள் கெட்டுவிடும்.எங்கும் பைத்தியங்கள் மீண்டும் மீண்டும் சங்கமித்தால் இவ்வுலகம் கெட்டுவிடும்.  கலாச்சார சீரழிவின் கரையை தொடுகிறார்கள், ஓடுகிறார்கள். 

பாராட்டு மழையில் நனைந்ததோ சிலர். பார்த்து ரசித்ததோ பலர். தாங்கள் செல்ல முடிந்தும் இதுபோன்ற பைத்தியகாரதனத்தில் ஈடுபட மனமின்றி விலகி நின்றோரை கண்டதுண்டா! வரமுடியவில்லையே என வருத்தம் தெரிவிக்கிறார்கள், அறிவிக்கிறார்கள். 

வெளிநாட்டில் வாழ்ந்தும் உள்நாட்டில் மனம் வைத்திருப்போர். வழி தெரியாது தவித்திருப்போர். எட்டாத கனியை கண்டு ஏக்கம் கொண்டு நிற்பார்கள் பார்த்தது உண்டா! கனவுலகம் என்றே அறிந்தே காலையும், மாலையும் பாராது அலைகிறார்கள், சிலைகளாகிறார்கள்.

இன்னும் இன்னும் எப்படியோ! எவரேனும் ஏதேனும் சொல்லித் திரிவார்கள். துவண்டு போய் தொலைந்து போய்விடுவோமோ! பிறர் பார்வையில் பைத்தியங்களாகவே இருந்துவிட்டுப் போவோம். குறைந்த பட்சம் இந்த பைத்தியங்கள் மூலமாவது இந்த உலகம் சுபிட்சம் பெறட்டும். 

விதை மெதுவாய் வளரட்டும். விருட்சம் ஆகட்டும். விழி கொண்டு பார்த்தே மகிழட்டும். விடை பெறும் தருணமிது. வியக்கும் நாள் அது வருமது. கனவுகள் கலைகிறது, மனிதர்கள் கவலைகளால் கதறிக் கொண்டே இருக்கிறார்கள், மரிக்கிறார்கள்.